Skip to main content

Posts

Showing posts from 2018

மார்கழி ஆடல்

அவள் மண் உறு வளம் எங்கும் ஊறும் பனிச் சிரிப்பினொடு பொன் உறு பூ மேனியை   புனை துகிலாடிப் பொருத்தினள் நனி விண்மீன் நிரை கிள்ளி நுனி வெள்ளி மாலை அள்ளி  சென்னிய மார்வம் சேரும்  அணி நகை பல திருத்தினள் அங்கே அவள்  கண் இரு பெருங் கயலாட  புனற் தாமரைத் தண்டாட தான் உண்டாடவொரு நறுமலரின்றி  வண்டு நின்றாடும் வகை ஒரு  நாட்டியம் எழுதினள்.

அவள் தமிழ் நிறத்தினாள்

காலைக் கருக்கலில்,  மங்கும் பனிமதியில்,  சோலைச் செருக்கில்,  வண்டு சுழன்று ஞிமிறும் ஞால ஒழுங்கில் எல்லாம்,  நாளும் உந்தன் பேரழகு புலருமடி விரியும் மலரில், தோயும் பனியில்,  தென்றல் அணவும் காரியத்தில்,  அமுதமாய் முத்தி விழும் மதுரம் அள்ளி  உன்னைத் தமிழால் மட்டும் தொழுதிருப்பேனோடி

கலாவல்

அவளொரு நல்ல வாசகி. ஒரு மாலை மையலில், ஆடையின் நூலிழை யாவும் பொன்னிழையாகும் நேரத்தில், தன் தேகப் போர்வை மீது ஒரு புத்தகம் வைத்துப் படித்திருந்தாள். அதன் உச்சந்தலையை மார்போடு மூடி அணைத்து, அதன் வகிடு முகந்து, அதன் மூலைத் தாளில் ஏறி முனை திருகப் பார்த்திருந்தாள். திருக மனம் வரவில்லை. இதுவரை கடந்திட்ட பக்கங்களின் கனம் அது தாளவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள். கருக்கல் பொழுது வந்து கதிரவனைக் கவ்வ, பொன் ஆர்ந்த மார்பினைப் பூரண நிலவின் புழுக்கம் விழுந்து கவ்வ, பூ ஆர்ந்த கூந்தலைத் தென்றல் மோதிக் கவ்வ, அண்ணாந்து பார்த்தால் அநியாயச் சின்னமாய் மின்னும் மதன நட்சத்திரங்கள்...

அவனும் அவளும்

நாளும் புது விந்தையுடன், வேள் வேட்கையுடன், கவி வாஞ்சையுடனெல்லாம், அவள் திரட்டி வைத்திருந்த அந்த இரகசிய வெற்றிடங்களுக்கெல்லாம் அவன் தேவைப்பட்டான். சிலநேரங்களில் அவளுக்கு, அவனுடனான ஓர் உரையாடலை அள்ளி, மூலவேரில் ஓர் உற்சவம் நிகழ்த்தி, ஆதி இச்சையில் எழுந்த ஆசைத் தேரில் நிறுத்தி, உயிரின் உயிரிலெல்லாம் உழவேண்டும் என்றிருக்கும். மறுகணமே, வாழ்வை நல்ல திருமண நிறுவனமாகவும், காதல் நிறுவனமாகவும், பார்த்துக் கட்டிய தன் காலக் கோட்டைக்கெல்லாம், ஆயுட்காப்புறுதி இட்டு வாழும் இந்தக் காப்புறுதிப் பண்பாட்டுச் சமூகத்தின் முன்னால், வேறொருவனுடன் தன்னைப் பிணைத்துக்கொண்ட அவளுக்கு, அவன்  ஒன்றுமில்லாதவனாக காட்சியளித்தான்.  ஆதலால், அவனுடைய உயிரொன்றும் அவ்வளவு அவசியமில்லை என்கிற பாசாங்குத்தனத்தை அவளுக்குள்ளேயே வளர்த்து, அதில் தன் சுயமரியாதை, சுய இச்சை எல்லாவற்றையும் கட்டிக்காத்து வாழப் பழகினாள். இந்தக் கட்டிக்காப்புக்கும் அவசியத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தில் அவனை வெறும் உரையாடல் துணையாக வைத்திருக்க விரும்பினாள். ஓர் உயிரின் தனித்த தேவைக்கும் தேடலுக்கும் முன்னால், ஒழுக்கம், சமூகம், திண்ண

கண்ணனும் ராதாவும்: ஆசைப்பெருக்கு

ராதாவுக்கு கவிதைகளென்றால் அவ்வளவு பிடித்தம். ஒன்றைப் பிடிக்கிறதென்றால், அதை ஏன் பிடிக்கிறது என அவளுக்குள்ளேயே ஒரு கேள்வி கேட்டுக்கொள்வாள். ஆதலால், தனக்குப் பிடிக்கிற விஷயங்கள் மீது, அவளுக்கு ஓர் ஆழ்ந்த புரிதல் இருந்தது. அதனால் அவளால் ஒன்றில் தனித்து இலயிக்க முடிந்தது. அவளுடைய இந்த இலயிப்பையும் புரிதலையும், அவசர உலக மாந்தர்களால் உடைக்க முடியாமல் போகிறபொழுது, ஒருவித எரிச்சலையும், கோபத்தையும், அவள் மீது வளர்த்துக்கொண்டார்கள். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. கவிதையென்பது, ஓர் உயிர் தன்னுள் தான் மூழ்கி, தன் உயிரின் வடிவங்களில் ஓர் அழகினையும், ஒழுங்கினையும் கண்டு தெளிந்து, அதை மொழியில் வார்த்து, மீண்டும் விழுங்கிக்கொள்ளும் வளமான செயலென்று கருதுவாள். கவிதைக்கு, வடிவம் ஒன்று இல்லையென்றும், மனதில் ஆசைப்பெருக்கம் செய்யும் அத்துணை அழகையும் கவிதையென்றும் நம்பினாள். அவளுக்கு அவை, பண்டைய மொழிபோல, படவெழுத்துக்களால் ஆனவையாக இருந்தால் மேலும் மகிழ்ச்சி. அந்தப் படவெழுத்துக்களால் கண்ணன் அவளைப் புனையும் பொழுதெல்லாம், கண்களை மூடிக்கொண்டு அந்தக் காட்சியாகிக் கரைந்து போவாள். இப்படி அவள், எதில்

எங்கே எனது கவிதை - மிருதங்கம்

விரல்களால் இடையிடுதல், இடையிட்டு உந்தல், உருட்டல், அஞ்சுகையில் அள்ளல், ஆராய்தல், ஆராய்ந்ததை மீறல், மீறியதைப் பெருக்கிப் புது இராகம் பிடித்தல், விவரித்தல், விவரித்ததை மேலும் தெளிவித்து வருடல், வருடியதை அள்ளல், அள்ளியதைச் செவிகுளிர அருளல் எல்லாம் மிருதங்கத்தின் செயல்கள். செவியில் விழும் இந்த மிருதங்கத்தின் கோதுதலை, அத்துணை அழகாய் இந்தப் பாடலில் கேட்கலாம். பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் தவில் ஓசை, சித்ராவின் பல்லவிக் குரல், முதலாவது இடையிசை எ ல்லாம் முடிந்த கையோடு வருகிற முதலாவது சரணத்தில், "மையல் கொண்டு மலர் வாடுதே" எனும் வரிகள் முடியும்பொழுது மிருதங்கம் பாடலை உயிர்ப்பிக்க ஆரம்பிக்கும். அழகிய திருமுகம் - ஒரு தரம் பார்த்தால்   அமைதியில் - நிறைந்திருப்பேன் இந்த வரிகளில், மிருதங்கம் இடையிட்டு உந்தும் அழகிருக்கும். இசையின் இடைவெளிகள் வரிகளுக்கு இடங்கொடுக்கும்அழகிருக்கும். இரண்டும் சேர்ந்து நல் அகம் பாடும் அழகிருக்கும். எல்லா இசையையும் விட்டுவிட்டு, மிருதங்கத்தை மட்டும் கவனித்திருந்தால், வரிகளும் மிருதங்கமும் செய்யும் ஆலிங்கனத்தை இரசிக்கலாம். மொத்த உற்சவத்தில் அது ஒர

முகிலென மகிழுவன்

மழைநாட் காலைகளில், வீட்டின் கதவுச் சட்டத்துக்கென்று ஓர் அழகு வரும். மழையை அளவாய் அடக்கிக்கொண்டு காட்டும்போது, எதுவும் அழகுதானே! இதை நினைத்தே, யாரோ செதுக்கியதுபோல, அற்புதமான செவ்வக மரவேலைப்பாடு. அதன் விளிம்பில் நின்றபடி, நீரின் நூலினால் நெய்த கண்ணாடித் துமிகளின் முன்னால், தன் தோளினை நிதானமாய்ச் சாய்த்துக்கொள்ள அவளுக்குப் பிடிக்கும். சாய்ந்தவள், ஒரு பாதத்தின் சாய்வின் மீது, மறுபாதம் வைத்துக் கவவிக்கொண்டு, என் பார்வையின் பள்ளத்தில் கருப்பஞ்சாறு ஊற்றினாள். இடைவெளிக்கும் தீண்டலுக்கும் நடுவில் நின்று, 'உன்னை விரைந்துவந்து வரைபவன் என்ன செய்வன்' என்று வினவினேன். தமிழை நிறுத்தி, 'வெறும் மழையைச் சேர்ந்து ரசிப்பவன் என்றும், கூடச் சேர்ந்து நனைபவன் என்றும் கருதிதியோ?' என நகைத்தேன். ' 'தூவானத்  துமி பட்டுத் துளிர்த்த நெஞ்சின் வியர்ப்பினை, மழையின் நீர்த்தாரை அள்ளித் துடைப்பதுபோல் பாவித்து, என்னை நனைத்து மன்றாடி மகிழுவன். அது அவன் கவிச்செயல்' எனத் தலை சாய்த்தாள். கவவவுகவெனத் தமிழ் ஓசையுடன் பொழிந்தது காதல் மழை. 

மழைத் துவலை

பேரியாழ் தேகத்தில் தெரியல் கமலத்தில் மாரி மழைத் துவலையெனக் கழன்று  உயிரில் தூறி விழும் துறைவன் பாட்டு

தழல் இன்பம்

ஞாழல் மரத்தடியில் ஆழ்ந்து அமர்ந்திருந்தாள் வள்ளி. அவள் ஞாலத்திலே ஆழ்ந்திருந்த நினைவின் சுகத்தை, கற்பனையின் காந்தத்தை, அதை அவள் தன் விடைத்த இடையில் ஏந்தி மடக்கித் தாங்கும் வடிவினை எல்லாம், அலுங்காமல் அள்ளிடவே கந்தனும் அருகில் வந்தான். ஓதித் திரை உளரி, கழுத்தில் வெம்பனி வந்து ஊதியும், கீழ் விலாத் தண்டில் ஊசி இறக்கியும், ஆலிலை வயிற்றை மஞ்ஞை உதிர்த்த மயிலிறகால் அது வந்து வந்து வாட்டியும், வேலனைப் புலவிப் பின் தழுவும் இன்பம் அறியவெனப் புல்லாதிருந்தாள் அந்தப் பொல்லா மகள். அவள் எண்ணத் தழலின்  வாசமும் வெப்பும் அறிந்து, அவளை அன்றாடம் நுகர்ந்தவன், சோலை ஒலிகளிலும் மெதுவாய், அவள் பெயரைப் பாங்கொடு சொல்லி அழைத்து, அவள் மெய் காண, வேல் எறியும் விழி காண, வண்டு மூச விண்ட மலரொன்றைக் கண்டு பறித்தான். அவளை வனைந்துகொண்டு, நறும் தேனொழுகும் செவ்வாய் வரிகளைத் தமிழ்ப் புனலில் நனைத்துச் சூட்டினான். அவள் புலவியதன் நுணுக்கம் தேடி அவன் கைகள் நெருங்க, அவனைத் தன் ஆழ்ந்த தழல்  இன்பம் காண நெருக்கி அணைத்திட்டாள் வள்ளி.

மழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி

' மழைக்குருவி ' பாடலில் இடம்பெறும், "கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது!" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான்.    "ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது? ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பா

நகர்த்தப்படுதல் - மணிரத்னம்

"To be moved by some thing rather than oneself"  <3 span=""> 'மௌனமான நேரம்' பாடலில், "புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். அது அலையின் புலம்பலை மோகத்தின் உச்ச உணர்வோடு ஒப்பிட்டு எழுதிய வரிகள்.   'காதல் சடுகுடு' பாடலில், 'தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய்  அருகில் வந்தால் இல்லை என்றாய்." எனும் அலையின் செயலை, காதற்பெண்ணின் செயலுடன் ஒப்பிட்டு எழுதியிருப்பார் வைரமுத்து. கடல் அலையின் ஒப்பீடு என்பது, அழைப்புக்கும் ஈர்ப்புக்குமிடையிலான இலக்கணம். இந்த இலக்கணத்தை உடல் அசைவுகளை வைத்து எழுதுவது எப்படி? பாடல் முழுக்கவும், கொஞ்சம் மெல்லிய விரகத்தின் சாயல் இருப்பதை காட்சியில் வெளிப்படுத்துவது எப்படி? உடல் அசையும் நடனம் ஒருவகை என்றால், ஒரு பொருளால் உடல் நகர்த்தப்படும்படி காட்சிகளை எழுதுவது இன்னொரு கலை. சூழலுக்கேற்றபடி, இரு உயிரின் உணர்வு ஸ்தலங்களைப் பிரதிபலிக்கும் பொருட்களாக இருக்கவேண்டும். அதேநேரம், அந்தப் பொருட்களையும் உயிர்ப்பொருளென உள்வாங்கிக்கொண்டு கலைக் காட்சிகள் எழுதவேண்டும்.

உண்ணத் தலைப்படுதல் - மணிரத்னம்

பேஸ்புக்கில் எழுதிய பதிவு   I want to eat the fleeting shade of your lashes. - நெரூடா  <3 span=""> ஒரு நல்ல கூடலுக்கு முன்னரான பழக்கமும், ஒருவருக்கொருவர் சொல்லிவிட்ட மிக நேர்மையான காமமும், உச்ச நம்பிக்கையும், நெடுந்தூர உலவுதலும், ஆழமான உரையாடல்களும், எப்படி நிறைவில் ஒரு நல்ல காமமென மொழிமாற்றப்பட்டு உடல்களால் உரையாடப்படுகிறதோ, அதுபோல, நேசத்தையும் அழகையும், உடலால் சரிவர எழுதித் தெளிதல், கொண்டாடுதல் எல்லாம் என்றும் ஆராத அந்த அன்புக்கு அவசியமானது.   'காதல் வெறியில் நீ காற்றைக் கடிக்கிறாய்' என்று வைரமுத்து எழுதிய வரிகளின் அழகை, 'ஓக்கே கண்மணி' திரைப்படத்தில் காட்சியாகக் காட்டியிருப்பார் மணிரத்னம். மிகமிக மெல்லிதாக அந்தக் காமத்தின் தீவிரத்தை காட்சிப்படுத்தியிருப்பார். காமத்தில் பற்குறி பதித்தல் ஒரு கலை. அதிலும், உச்சூனக, பிந்து, ப்ரவாளமணி போன்றவை கன்னத்தில் இடக்கூடியவை. சில முத்துவடம் போன்ற பதிப்புகள் மார்புக்குரியது. இந்த இலக்கணங்கள் யாவும் காமசாஸ்திரம் சொல்லுவது. மெல்லிய வலிதரும் சுகங்கள் சில உயிர்களுக்குப் பிடித்தம். அது மிகை அன்பை வெளிப்படுத்த

மணிரத்னம் - தீண்டல் - Irresistible desire

பேஸ்புக்கில் எழுதிய  பதிவு 'உலகங்கள் ஏழும் பனிமூடும் போதும், உன் மார்பின் வெப்பம் போதும்' - Fire & Ice 'Fire & Ice' எனும் தலைப்பில், ரொபேர்ட் ஃரொஸ்ட் எழுதிய பிரபலமான கவிதை ஒன்று இருக்கிறது. வெறும் ஒன்பது வரிக் கவிதை, விஞ்ஞானிகளைப் பல விஞ்ஞான விவாதங்களுக்கு அழைத்துப்போனது. தத்துவார்த்த விவாதங்களுக்கு அழைத்துப் போனது. பலரையும் பேசவைத்தது. அந்தக் கவிதை தன்னுள்ளே பல முகஙகளைச் சுமந்திருப்பதுதான் அதன் உள்ளழகுக்குக் காரணம் எனலாம். பல கேள்விகளுக்கான பதில்களைப் புதிராக எழுதி வைத்திருக்கிறது. அந்தக் கவிதையில், ஆசை அல்லது வெறுப்பு எனும் இரண்டில் ஒன்றில் மனித உணர்வுகள் அழியும் என எழுதியிருப்பார். ஆனால், தன் நிலைப்பாட்டை ஆசையின்(Desire) பக்கம் வைத்திருப்பார். இங்கு ஆசை என்பது தீ அல்லது வெப்பத்தைக் குறிக்கும். வெறுப்பு என்பது, குளிர் அல்லது பனியைக் குறிக்கும். கூடவே தீ அல்லது பனியில் உலக உயிர்கள் அழியும் என்கிற அர்த்தத்தையும் அந்தக் கவிதை சுமந்து வரும். வைரமுத்து தெளிவாக, நிலம் கடலாகும், கடல் நிலமாகும் நம் பூமி அழிவதில்லை என்று நிலவியலை எழுதினார். அதுபோலத்தான்

வீராவின் காதல் - மணிரத்னம்

பேஸ்புக்கில் எழுதிய பதிவு ஆண்டாளுக்கு, கண்ணன்மீது நெருக்கமான காதல் உணர்வு இருந்தது. இதை, 'Limerence' என்றும் சொல்லலாம். வேட்கை அதிகமுள்ள காதல். அவனுடைய மார்பில் அணிந்த மாலையைக் கொணர்ந்து என் மார்பில் புரட்டுங்கள் என்று கேட்பாள். அவன் மார்பு தொட்டாடிய பூக்களைத் தன் மார்புமீது பூசிக்கொள்வாள்.  இன்னும் கொஞ்சம் மோகத்தோடு, அவனின் அரையில் தவளும் ஆடையைக் கொண்டுவந்து அங்கமெங்கும் வீசுங்கள் என்பாள். அந்த வாசத்திலே தன் வாட்டம் தணியும் என்று சொல்வாள். அவள் நினைவு மற்றும் உடலெங்கும் அவனின் நினைவே சூழ்ந்திருக்கும்.  வைரமுத்து எழுதிய, "துருவி என்னைத் துளைச்சுப்புட்ட தூக்கம் இப்போ தூரமய்யா தரைக்கு வெச்சு நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா" என்கிற வரிகளில் எல்லாம் கொஞ்சம் ஆடையின் நேசம் உண்டு. விஞ்ஞானத்தின்படி, ஆடையில் ஆடும் வியர்வை வாசனைகளை இந்தக் காதல் நெருக்கம் விரும்பும். எப்பொழுதும் உடலைத் தொட்டாடும் ஆடைகளென்றால் காதலுக்கு மிகப்பிடித்தம். உள்ளாடை இறுக்கங்கள்மீது முத்தம் வைக்குமளவு உம்மத்தம் வளர்க்கும். காதலியின் உள்ளாடைகளை, உள்ளங்கைக்குள் செலுத்தித் துவைப்பதை

மணிரத்னம் - Fabric dance

பேஸ்புக்கில் எழுதிய பதிவு "காதல் சடுகுடு" பாடலில், ஒருவித துடுக்குத்தனம், வேட்கை, காதலின் இறுக்கம் எல்லாமுமே இருக்கும். அலைபோல சடுகுடு ஆடும் காதல் இருக்கும். ஒருவித கண்ணாமூச்சி ஆட்டம்,  Sexual Playfulness எல்லாமும்  இருக்கும் .  அதை ஆடைகளைக் கொண்டு(Fabric dance) அத்தனை நயமாக எழுதியிருப்பார் மணிரத்னம். கவனித்துப்பார்த்தால், ஒவ்வொரு சட்டகத்தினுள்ளும் அத்திரைமொழி உள்ளாடும்.  துணிகொண்டு ஆடப்படும் நடனத்தில்(Fabric dance), இசைக்கேற்றபடி அலைபோல அசைவுகள் ச ெய்யலாம்; அலைகளைப் பிரதிபலிக்கலாம். 'உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே' என்கிற நெகிழ்வான வரிகளுக்குக் காட்சியில் நியாயம் சேர்க்கலாம். மொழி வளைத்து வளைத்துத் தரும் நெகிழ்வுத்தன்மையையும், அதன் பொருளையும் நடனக் கலைகொண்டு எழுதலாம். ஆடைகள் மீதான காமம் என்பது தனிக்கலை; ஒருவித Fetishism. 'தலைக்கு வைச்சு நான் படுக்க அழுக்குவேட்டி தாருமய்யா' என்பதுபோல, மிகுகாதலின் விரகத்தில் எழும் வேட்கை. ஒரு மொழியின் உட்பொருளைக் களைந்து களைந்து, ஒரு மறைபொருள் கொண்ட கவிதையைப் படிப்பதில் இருக்கும் சுகம், ஒரு ஆடை க

அவளுக்கு, வாளினிற் கொடிய வயமான் கண்கள்.

அவளுக்கு, வாளினிற் கொடிய வயமான் கண்கள், அம்மம்ம!   செந்தூரப் பொட்டும், சீரான பூந்துகிரும், கொண்டைக்குச் சில சின்மலர்களும் சூடியபடி நின்றாள். கண்ணாடி முன்னால், வளைகள் ஆர்க்க, அம்மம் ததும்ப, இரு கைகளையும் உயர்த்தி, குழலை வாய்ப்பாகச் சொருகி முடிந்தாள். இதழில், செம்முகை முத்தங்கள் பல வரச்செய்து, குதிக்கால்கள் தத்தி எழ, காற்றை முத்திமுத்திச் சிரிக்கும் குழந்தை அவள். இப்படி எல்லாமும் கோர்த்து, புறத்தில் இயற்கை போற்றி வளர்த்த பொம்மல் மலரழகுபோல், அழகினை வாரிக் கட்டிக்கொண்ட பதுமைபோ ல், பொலிவான தோற்றம் அவளுக்கு. அகத்தின் ஆழத்தில், மிகையான அழகுகள் கண்டால், அவளுக்கு அதைக் கண்ணீர் விட்டுக் கொண்டாடத் தோன்றும். இப்படி அழகினால் மனதைப் பழக்கிக்கொண்டவளிடம் மிகுதிப் பண்பெல்லாம் வந்து வணங்காதா என்ன? இதற்குமேலும் அவள் மனதின் வடிவைச் சொல்ல உவமைகள் வேண்டுமா? ஆனால், இவை மட்டுமா மதிப்பிற்குரிய பெண்ணின் இலட்சணைகள்? அவளின் இன்னொரு முகமும்தானே அரவணைப்புக்குரியது? ஒரு நாளின் இரகசிய யோசனைகளில், மாராப்புப் பெருமூச்சில், தன் அழகைத் தானே மெச்சி மருவும் மோகப் பொழுதுகளில், அவளிடம் தோன்றும் அந்த வாளினிற்

அகலிகைகளின் ஆசை

இராமாயணத்தில் வருகிற 'அகலிகை' என்கிற பேரழகி,  கௌதம முனிவனின்  மனைவி. கௌதமன் வெளியிலிருக்கும் நேரமாகப் பார்த்து, அவள்மீது காதல்கொண்ட இந்திரனானவன், கௌதம முனிவனின் வடிவில் வந்து அவளைப் புணர்ந்து இன்பம் களிக்கிறான். அவள், அது கௌதமன் அல்ல என்று தெரிந்த பின்பும், காமம் எனப்படும் உயர் இன்பத்தில் கூடித் திளைத்திருப்பதை நிறுத்தவில்லை. இலாவகமாக இந்திரன் கைகளில் போதையேறிக் கிடந்தாள்.  புக்கு அவளோடும், காமப்  புது மண மதுவின் தேறல்  ஒக்க உண்டு இருத்தலோடும்,  உணர்ந்தனள்;   உணர்ந்த பின்னும் ‘தக்கது அன்று’ என்ன ஓராள் - கம்பன்  இந்நேரம் பார்த்து, முக்கண்ணான் என்று அழைக்கப்படும் கௌதமன் வீடு திரும்புகிறான். என்ன நடந்தது என்று தன் கண்களால் பார்க்கிறான். அல்லது அவள் கூடியிருப்பதைப் பார்க்கிறான். அவள் இதை  திட்டமிடாமல் செய்தாலும், இதற்கு உடந்தையாக இருந்த அகலிகையின்  இந்தச் செயலுக்காக அவளைக் கல்லாகும்படி சபிக்கிறான். பின்னர், இராமனின் பாதம் படவே இவள் சாபவிமோசனம் அடைகிறாள். இராமரும் விசுவாமித்திரரும் அவளை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி கௌதமனிடம் கேட்டுக்கொள்கிறார்கள். மீண்டும் அந்

ரஹ்மான் - தபேலா

'ரிதம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அன்பே இது நிஜம் தானா' பாடலில், வயலின் இசையை நன்றாக எழுதி நிகழ்த்தியிருப்பார்கள். பாடலின் இரண்டாவது இடையிசையில் இது வரும்பொழுது,  மிக அழகான காதல் உணர்வுக்குள் பிரிவும் சேர்ந்தது போலிருக்கும். வயலின் முடிந்த கையோடு, முதலில் ஒரு மெல்லிய கீற்றுப்போல ஒரு புலர்தல் நிகழும். பின்னர் சாதனா சர்க்கத்தின் குரல் ஆரம்பிக்கும்போது, ஒரு பரிபூரண புலர்தல் நிகழும். அதோடு ஒட்டியபடி, தளும்பும் மனக் குளத்தில் ஏதோ விழுந்ததுபோல, தபேலா இசையால் நிலவினைத் ததும்பச் செய்யும் இந்த இசை . சரியாக, "அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லை' என்கிற வரிகளோடு இழைந்து வருவது இந்தத் தபேலாவின் ததும்பலை இன்னும் அழகாக்குகிறது.  

அருத்தி

முற்றத்தில் இறங்கிய குழந்தையின், முறையற்ற முதல் நடைபோல, மனக் களிப்பும் பித்தமும் கொண்டேனடி உந்தன் சாய்மனைக் கழுத்தில் சாய்ந்துகொள்ளப் பற்பல செந்தமிழ் வார்த்தைகள் உதிர்த்தேனடி முன்சென்மம் நான் முகர்ந்த, முன்தானை வாசம் காட்டி, நான் துஞ்ச ஒரு கதை சொல்லடி பின், உன் குரலால் தமிழ் பிதற்றி, நற்செவியின்பம் தந்தெனை மடியடியில் கிடத்தி வெல்வாயடி கட்டளைத் தலைவி உந்தன் கட்டுக்குழல் சுருக்கை, என் கழுத்திலிட்டுக் காமம் கொல்வாயோ. இல்லை, கருவறை இருள்காட்டி எனை ஆற்றுப்படுத்தும் செயல்பல செய்குவாயோ எவை புரிகினும், சிற்றம்பலம் வாழும் ஈசன் பதம் வைத்து நெஞ்சை அணைத்து ஆட்கொள்ளடி. துயர் எரித்து, நீறுபோல் எனை அள்ளி நெற்றியில் பூசிக்கொள்ளடி மூர்க்கத்தில் நிகழும் வழுவும், முத்தத்தில் நிகழும் ஒழுக்கும், இதில் புனிதமெது பாவமெதுவென்று இங்கு எவர் சொல்வாரடி. அன்பின் அரங்கிலே புலன் ஆயிரம் திறந்து பூஜிக்க, பேறொன்று வேண்டுமடி இப்படி, பூக்களும் பணியும்படி மென்மைத் தமிழ் உரைத்து உன்னைச் சேருவது இன்பமடி பாசுரங்கள் பல நெஞ்சை அள்ளுவதுபோல் உனை அள்ள, ஆயிரம் பசுங்கரங்கள் வேண்டுமடி கருத்திலும் சேருவதே பெருங்கா

பியார் - பிரேமா - காதல் : கைகோள்

இந்தத் திரைப்படம் பற்றிய விமர்சனத்துக்கு முன்னர், இது பேசும் கருவினைப் பற்றிய பின்புலத்தினைப் பற்றி நம்முடைய தமிழ் மரபும் இலக்கியங்களும் என்ன கண்டன என்கிற தெளிவு அவசியம். அந்தத் தெளிவின் பின்னர்தான், இதுபோன்ற கருக்களை இரசிக்கமுடியும். காரணம், சின்ன வயதிலிருந்து நமக்கு ஊட்டப்பட்ட அறிவினை, நாம் சரியோ எனப் பரிசோதித்துத் திருத்த விரும்பாதவர்களாக இருக்கலாம். இவை நம்முடைய அகத்தில், இதுஇதுதான் ஒழுக்கம் என்றும், பெண் என்றால் இப்படி இப்படித்தான் என்றும் சில நம்பிக்கைகளை(cognitive beliefs) விதைத்து வைத்திருக்கிறது. இவற்றை எடுத்துவிட்டுத் திறந்த மனதோடும் மனிதத்தின் கண்களோடும் உலகினை அணுகவேண்டும். எல்லா மனித உயிரும் காதலும் காமமும் சிறக்க வாழவேண்டும்.   திருமணத்துக்குப் புறம்பான உறவுமுறைகளை உள்ளுக்குள்ளே எதிர்ப்பவர்கள், கேட்கும் ஒரே கேள்வி என்னவென்றால், இவற்றை ஆதரிப்பதால் நம்முடைய பண்பாடும் ஒழுக்கமும் என்னவாகும் என்பதுதான். அதற்கு முதலில், அவர்களுக்குமாய்ச் சேர்த்து, 'ஒழுக்கம்' என்பது என்ன என்பதைப் பரந்த நோக்கில் பார்த்துவிடலாம். வழிவழியாய், தன்னைத்தானே பரிசோதனை செய்துகொ

அவள் கவிதையானவள்

அவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன். 'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட, ஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன். அவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதிய

மலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு

வெற்பிடை யாம் கொய்து நாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது. சுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு. ஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது. ஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடி

மலரினும் மெலிது காமம் 08 - புதுவெள்ளம்

நீரில் நனைந்த கூந்தலை நெறிப்படுத்தி   வாரியணைத்துக்கொள்வதும், உளரிய பொற்கூந்தல் விரல்களினின்று பிழைத்து விழவிழ வாங்கி நுகர்வதும், காமமுற்றோர்(காதலுற்றோர்) செய்யும் சிருங்காரக் கலை. அந்தக் கலைக்காகவே, கூந்தல் நெளிநெளியாய்ப் நெய்யப்பட்டது போலிருக்கும். உயிரை உய்த்துணரும் நற்புணர்வின் பின்னர், வியர்வையின் கதகதப்பும் மணமும் கொள்ளும்பொழுது அது மேலும்மேலும் வனப்புக் காட்டக்கூடியது.  அதைச் சங்கத்தமிழ்க் கவிகள் அத்துணை நயமாய் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதைப் படிக்கையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆற்றங்கரை மரத்தடியில் அமர்ந்தபடி, தகிக்கும் தமிழொடு கலந்தாடி இரு காதலர் புணரும் வேளையில், ஆற்றின் மேல் நீண்டிருக்கும், அதன் கொப்புகள் சொரிந்த மலர்ப்போர்வையின்கீழே, பண்புடன் புணரும் மீனினம்போல அத்துணை குளுமை தரும். ஒரு சங்கப் பாடலில் மனதிற்கு இனிய சங்கத்தலைவியானவள் காமுற்றிருக்கிறாள். அவள் உணர்வைச் சொல்ல, சங்கக்கவி, ஆற்றுமணலை அவள் கூந்தலோடு ஒப்பிடுகிறார். ஆற்று நீரறுத்த மணல்(அறல்) எப்படி வரிவரியாக நெளிவுடன் திரண்டு அழகாய் இருக்குமோ, அப்படி இருக்கிறது அவள் கூந்தல் என்கிறார்.