Skip to main content

Posts

Showing posts from 2016

அச்சம் என்பது மடமையடா

கௌதமின் 'அச்சம் என்பது மடமையடா' மசாலாத் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது.  பயணம், காதல், அதிரடி என்று மூன்றையும் இணைத்திருக்கிறார்.  பயணத்தில், ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை நிதானமாக உணரமுடியவில்லை.மிக அவசரமான பயணம். எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்த முயன்றால் எதிலுமே நிறைவு காண்பது கடிது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனாலும் இது கௌதம் மேனன் படம்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கௌதம் மேனன் படங்களுக்கேயுரிய, பொதுவான அடிப்படை அம்சங்கள் உள்ள திரைப்படம்.  பயணத்தில் கௌதமுக்கு எப்போதுமே ஒருவித ஈடுபாடு உண்டு.  மணிரத்னத்தின் "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" பாடல் தந்த தாக்கத்தை வைத்தே ஒரு பத்துத் திரைப்படம் கொடுத்துவிடுவேன் என்று சொன்னவர். அவர் படங்களில் பெரும்பாலும், காதலைத் தேடிச் செல்லும் பயணமாக இருக்கும். அல்லது, ஒருவித அதிரடித் தேடல் தரும் சுகத்தினை நோக்கிய பயணமாக இருக்கும். காதல் தேடலுக்கு, "வாரணம் ஆயிரம்" மேக்னாவையும், "நீதானே என் பொன்வசந்தம்" வித்யாவையும் தேடிச்செல்லும் காட

ரசனை எனும் ஒருபுள்ளியில் இரு இதயம்

உன்னுடன் இருக்கையிலே நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே இதுவரை நானும் பார்த்த நிலவா இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா! - நா.முத்துகுமார்  உதிக்கிற நிலவு தினமும்தான் உதிக்கிறது. அதற்குத் தினமும் புதிய முகம் தரக்கூடியது யார்? காதல் பற்றிய எண்ணம் சிந்தையில் எழ ஆரம்பித்த காலத்திலிருந்தே அது 'ரசனை'யை விட்டு விலகி நிகழ்ந்துவிடமுடியாது என்கிற எண்ணமும் இயல்பாகவே  எழுந்தது. இரசனைகள் இரு உயிர்களுக்கிடையேயான காதலின்   ஆதாரப் புரிதலையும் அழகியலையும் மென்வெப்பத்தையும் 'தொடர்ந்து' தூண்டவல்லது என்பதை உறுதியாக நம்புகிறேன். காரணம், 'நுண்ரசனை' என்பது வெறுமனே பொதுவான ரசனை அடிப்படையில் எழுவது இல்லை. உதாரணமாக, "எனக்கு இளையராஜா பிடிக்கும். உனக்கு ரஹ்மான் பிடிக்கும்" என்கிற பொதுவான முடிவினை மட்டும் வைத்து இருவரும் ரசனை வேறுபாடு உடையவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.உண்மையான நுண்ரசனை வேறுபாடென்று இதனைச் சொல்லிவிடமுடியாது. இந்த இருவரின் படைப்புகளையும்  நுண்ரசனைக்கு உட்படுத்துவதில் எந்தளவுக்கு ஒருவருக்கொருவர் மாறுபடுகிறோம் அல்லது ஒத்திசைகிறோம் என்பதில்தான் ரசனையின் ஆதாரப்புள்ளியா

Tweets - கண்மணியாள்

எழுதிய சில டுவீட்களின் தொகுப்பு... குழல்காடு குலைந்தலைய நின் நன்னுதல் சிறுநிலா ஒளி அருந்தி யாசகம் கேட்கையில் இருகரை காணாது என் உள்ளக் காட்டாறு. மென் குழலடுக்கில் சிதறிய வெண்தோட்டு மல்லிகையும் நின் மார்பணிக்குள் இடறி உருளும் நல் முத்தும்  உன் பெயரின் ஒரு பாதி அழகை உச்சரிக்கக்கூடும். தாயன்பு கொண்டு   உச்சந்தலை நுகர்ந்து "கடலிலே விடம் தேடு" என்று நீ மதுரமொழி உரைத்தபோதே  செவியின்பம் கொண்டேன். இதோ உன் இதழ்களுக்கு மோட்சமென்று  கனிவாய்  உன் பொற்பதம் உயர்த்தித் தருகையில் சென்னியது உன் கர்வம் என்றறிந்தேன். உதிரும் ஒற்றைச் சிறகில் உன் பார்வை தவமிருக்கும் அழகைவிட ஒரு பறவையின் பறத்தலில் என்ன இருந்துவிடப்போகிறது! பள்ளிக்குழந்தைகள் ஒருமித்து ஒப்பிக்கும் தேவார சந்தம் போல முத்தாடும் உன் சிரிப்பு. விழாக்கோலம் பூணும் வானத்தை ஒற்றைக் கண்ணால் பார்த்தபடியே முத்தங்கள் பரிமாறிக்கொள்வோம். அதில் ஒரே நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் ரகசியங்கள் கற்போம். குழல் ஊதும் தோரணையில் உன் கைகளைப் பிடித்து முத்தமிடுகையில் படபடக்கும் உன் பட்டாம்பூச்சி விரல்களின் மென்பாரம்கூடத் தாளவி

முத்தாடு: முத்த இலக்கணம்

கவிஞர் வைரமுத்து எழுதிய " சுத்தி சுத்தி வந்தீக " என்கிற பாடல் காதலோடு இயைந்த காமத்தை அழகியலாக உரைக்கும். "முத்தாடும் ஆசை முத்திப்போக" என்றுவிட்டு, எங்கெல்லாம் முத்தமிட்டுக்கொள்வோம் என, அன்பானவர்கள் உரையாடிக்கொள்வதுபோல  எழுதியிருப்பார். என் காது கடிக்கும் பல்லுக்கு  காயம் கொடுக்கும் வளைவிக்கு  மார்பு மிதிக்கும் காலுக்கு  முத்தம் தருவேன்   மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவது என்பது காதலைத் தொழும் வகையைச் சார்ந்தது. "உன் உடல் மீதும், உன் உயிர் மீதும் மரியாதை வைத்து உன்னைத் தொழுகிறேன். இத்தனை காலமும் உன்னைச் சுமந்த பாதங்கள் மீது எனக்குக் காதல்." என்று சொல்லாமல் சொல்வதுதான் பாத முத்தம். ஆனால், காது கடிக்கும் பற்களுக்கு ஏன் முத்தம் தரவேண்டும்! வெறுமனே, இதழ்கள் உரசிக்கொள்வது மட்டுமே  முத்தத்திற்கு இலக்கணம் ஆகாது என்கிறது நம் இலக்கியங்கள். இலக்கியம் கூறும் முத்தத்திலேயே பலவகை உண்டு. "சிவந்த உன் கடைக்கண் பார்வையையும் உன் கூரிய பற்களிலே ஊறும் நீரினையும் சுவைக்காமல் உன்னுடைய அன்புக்குரியவனால் இருக்க முடியாது. விரைவில் உன்னைத் தே

யானை மரம்

கடந்த மாதம் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த ஏழு தீவுகளில் ஒன்றான நெடுந்தீவுப் பகுதிக்குப் போயிருந்தேன். இந்தத் தீவு யாழ்ப்பாண நகரிலிருந்து மிகவும் தொலைவில் அமைந்திருக்கிறது. 'குறிகட்டுவான்' எனும் பகுதியிலிருந்து கடல் வழியாக நீண்டதூரம் பயணிக்கவேண்டும். இது இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. கடலும் கடல் சார்ந்த இடமுமாகையால் அங்கு வாழ்கிற  மக்கள் சுவர்களை அமைப்பதற்குக்கூட பவளப்பாறைகளைப் பயன்படுத்துகின்றனர். அங்கு இடிந்த நிலையில்  காணப்படும்  டச்சுக்காரர்களின் கோட்டைகூட பவளப்பாறைகளால் அமைக்கப்பட்டிருக்கிறது.  இந்தத் தீவில்  பல நூற்றாண்டுகள் பழமையான மிகப்பெரிய பெருக்கு மரமொன்று நிற்கிறது. இதை "யானை மரம்" என்றும் அழைப்பார்கள். 'Adansonia' எனப்படுகிற தாவரவியல் பேரினத்தைச் சார்ந்தது. இந்தத் தாவரவியல் இனத்தைச் சார்ந்த மரங்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேலே  வாழும். இந்த மரத்துக்கென்று சிறப்பான தன்மை இருக்கிறது.  இந்த மரம் மழை பெய்யும் பொழுது ஏராளமான நீரை தனது தண்டுப் பகுதியில் சேமித்து வைத்துக்கொள்ளும். கிட்டத

காத்திருத்தலின் அழகியலும் காதலும் : கவிதாஞ்சலி 06

அகநானூற்றிலே 58வது பாடல் காத்திருத்தலின் அழகியலையும் காமத்தையும் நயமாகச் சொல்லுகிறது. சங்கப் பாடல்களிலே இரவில் காதலனும் காதலியும்  களவில் சந்திப்பது வழக்கம் அல்லவா. அதேபோல இங்கே தலைவனுக்காகத் தலைவி காத்திருக்கிறாள். வாட்டும் குளிரில் தனிமையில் காத்திருக்கிறாள். எல்லோரும் உறங்கும் இரவில் தலைவன் வருகிறான். அவன் வந்ததும் மின்னும் வளையணிந்த தன் கைகளால் அவன் முதுகினைச் சுற்றி வளைத்துப் பற்றிக்கொண்டு இறுக்குகிறாள். ஒரு மெல்லிய அணைப்பு. தமிழிலே 'ஞெமுங்க' என்றொரு அழகான சொல் இருக்கிறது. இறுக்குதல் அல்லது அழுத்துதல் என்று பொருள். ஆனால், இது காதல்கொண்டோரின் நெருக்கம். மிகவும் மென்மையான இறுக்கம். இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே ஒருவித மென்மை வந்து ஒட்டிக்கொள்கிறது அல்லவா! "வனைந்து வரல் இளமுலை ஞெமுங்கப் பல் ஊழ் விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற" மலர்களில் பேரின்பம் வேர்பிடிக்க தென்றல்போலொரு தீண்டல்தானே வேண்டும். தன் மார்புகளை அவன் மார்போடு மெல்ல அழுத்தி அணைக்கிறாள். அணைப்பின்போது தன் துயரமெல்லாம் கரையவேண்டும் என எண்ணுபவள் பெண். அதேநேரம், அணைக்க எரிகிற தீயல்லவா காதல்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ

வடமாகாணத்தின் நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணம்

தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான இலங்கையின் வடக்கு மாகாணம் புவியியல், அரசியல், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. அத்தோடு நீண்டகால அபிவிருத்தி, ஆண்டாண்டு காலமாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும்  தமிழ் மக்களின் எதிர்காலம், கட்டமைப்பு ஆகியவை மிகப்பெரும் அபாயத்தையும் சந்தித்து நிற்கிறது.  இவற்றைக் கட்டியெழுப்பவும் தகர்த்து எறியவும்  வேண்டிய கடப்பாடு உலகெங்கிலும் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொருளாதார வல்லுனர்கள், தனியார் நிறுவனங்கள், சுயதொழிலில் ஈடுபடுவோர், சமூக நலன்விரும்பிகள், பிரதேச மக்கள், புலம்பெயர் தமிழர்கள்  எல்லோரையும் சந்தித்துப் பேசியதில் ஒரு பிரதான குறைபாடு ஒன்றைக் காணமுடிந்தது. இவர்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைப்பதற்குரிய கட்டமைப்புகள் இன்னமும் சரியாக உருவாக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் தன்னிச்சையாகச்  சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தத் தனிமனித முயற்சிகள் ஒன்றாகச் சேரும்பொழுதே  பலம்பொருந்திய ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும். அப்பொ

பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாகும் இயற்கை அனர்த்தம்

இலங்கையில் தமிழரின் அரசியல் நிலை தொடர்பான பதிவுகளை நீண்ட நாட்களாக எழுதவில்லை. இருந்தாலும், நூறு நாட்கள் கழித்துப் பார்த்தாலும் புரிந்துவிடும் சீரியல் போலத்தான் நகர்கிறது. கால நீட்டிப்புத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பொருளாதாரத்தில் 'ரோட்டின் கிட் தியரம்' என்று ஒன்று இருக்கிறது. அதாவது, ஒரு குடும்பத்தில் நல்ல வசதியான, கொடை உள்ளம் கொண்ட பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் அந்த வீட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பரிசுப்பொருட்களும் பணமும் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். அதில் ஒரு குழந்தை தீய செயல்களில் ஈடுபடுகிறது. தனது சகோதரர்களை அடித்துத் துன்புறுத்தும் செயலைத் தொடர்ந்து செய்துவருகிறது. இதைப் பார்த்துப் பெற்றோர்கள் தமது பணத்தையும் பரிசுப்பொருட்களையும் தீய செயல்களில் ஈடுபடும் குழந்தைக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட குழந்தையின் மேல் அதிக அளவில் அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். இதைப் பார்க்கிற குழப்படிகாரக் குழந்தை தன்னுடைய சகோதரனைக் காயம் செய்வதையும் சேட்டைகள் புரிவதையும் நிறுத்திவிடும். காரணம், இந்தச் செயற்பாடு தனக்குக் கிடைக்கவிருக்கிற பரிசுகளையும் பணத்தையும் நிறு

ஒரு நாள் கூத்து

நாம் தினமும் யாரையாவது கெட்டவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருப்பதில்லை. எதனையும் திருத்த முற்படுவதில்லை. ஒவ்வொரு சிறிய தீர்மானத்தின்போதும் எங்களைச் சுற்றி இந்தச் சமூகம் கட்டமைத்திருக்கிற விதிமுறைகளையும் சிந்தனைத் திணிப்புகளையும் வைத்துக்கொண்டு எங்கள் சுயத்துடன் போராடிக்கொண்டிருக்கிறோம். சிலநேரங்களில் எங்களை எங்களிடமிருந்தே காப்பாற்றிக்கொள்ள முடிவதில்லை. எங்கள் முடிவுகளே எங்களைக் கைவிட்டுவிடுவது உண்டு. இவற்றைப் பற்றிய புரிதல் இருந்தால் வாழ்வு மகிழ்ச்சியாய் அமையும். இல்லையேல் சதாகாலமும் இன்பத்தைத் தேடி வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது காதலும் திருமணச் சந்தையும்தான். இதை "ஒரு நாள் கூத்து" திரைப்படம் முழுவதுமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறது. பெண்களுக்காகப் புரட்சி செய்கிறேன் என்று வலிந்து காட்சிகளைத் திணிக்காமல் போகிற போக்கிலேயே நிறைய விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது. இந்தப் படத்தில் வருகிறவர்களிடம் திடமான மனநிலை இல்லை.அதேநேரம் திருப்திகரமான மனநிலையும் இல்லை. இது பெரும்பாலானோரின் இயல்பான மனநிலை. ரித்விகாவை பெண் பார்த்தவன், அவளை

கவிப்பேரரசு வைரமுத்து

இன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடைய பிறந்ததினம். இதுவரை  வைரமுத்துவின் வரிகளின் தனித்தன்மை பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். சொற்கள் மீதான எனது காதலை வைத்துக்கொண்டு எத்தனையோ இன்னல்களைக் கடந்து வந்திருக்கிறேன். அதற்கு வைரமுத்துவினுடைய சொற்களும் மிகுந்த உறுதுணையாக இருந்திருக்கிறது. சொற்களுக்குள் இசையும் இருக்கிறது. அதைக் கேட்பதற்குச் சிந்திக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். சொற்களுக்குத் தப்பிக்கவைக்கத் தெரியாது. உணர்வுகளை நெகிழவைக்கத் தெரியும். தவம்போல் இருந்து யோசித்து, சொற்களைத் தவணை முறையில் நேசிக்கும் அன்புள்ளங்கள் எவராலும் இந்தப் பெயரை விரும்பாமல் இருக்கமுடியாது. கவிதை என்பது மொழியின் முதிர்ச்சி. சொற்களின் ஒழுங்கமைப்பு. அதேபோல, காதல் என்பது மனித நாகரிகத்தின் உச்சம். இந்த நம்பிக்கையை நிஜ உலகம் தகர்க்கும்போதெல்லாம் கவிதைகள்தான் அவற்றைத் தாங்கிப்பிடித்திருக்கின்றன. இவை இரண்டையும் உயர்ந்த மென்சொற்களால் அனுகியவை நமது சங்ககால இலக்கியங்கள். இலக்கியக் காதலில் காமம் உண்டு. தற்போதைய எழுத்துகளில் பிரதிபலிக்கப்படும் அநாகரிகமான காமம் போலல்லாது தொழுகைக்குரிய காமமாக இருந்தது. சரணடைதல் இருந்தது.