Skip to main content

Posts

Showing posts from June, 2013

முருகன் : பகிர்வுகள்

ஐந்தாம் நூற்றாண்டு வரை முருகனுக்கு வள்ளி ஒருத்தி தான் மனைவி. வடமொழிப் பண்பாட்டுக் கலப்பில் ஸ்கந்தக் கருத்து நம் முருகக் கருத்துடன் கலந்த பின் தான் தேவசேனை எனும் மற்றொரு மனைவி ஏற்பட்டதாக ஒரு கட்டுரையில் சுஜாதா குறிப்பிட்டிருக்கார். " சேயோன் மேய மைவரை யுலகமும்" என  தொல்காப்பியம் கூறும் சேயோன் தான் சுத்தமான தமிழ்க் கடவுள் போல. அதுவும் ஆதிகாலத்தில் சேவல்தான் முருகனின் கொடி. பின்னர் தான் மயில் வாகனமாகியிருக்கிறது. தெய்வம் பற்றி தேடிக்கொண்டிருந்ததில் 'தெய்வம் ' எனும் சொல் எப்படி உருவானது என சில தகவல்களில் விக்கியில் கிடைத்தது. 'தெய்' என்ற உரையசைக் கிளவியிலிருந்து தான் தெய்வம் எனும் சொல் வந்திருக்கிறது. 'தெய்யனே' எனும் சிங்களச் சொல்லும் அங்கிருந்து வந்திருக்கலாம் .  அண்டவெளியில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒன்றோடொன்று உரசித் தேய்வதில் உயிரோட்ட ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தேய்தலில் பிறக்கும் ஆற்றலைத் தேய்வு என்றிருக்கின்றனர். பின்னர்  அது தேய்வம், தெய்வம் என்றாகியிருக்கிறது(நன்றி  விக்கிபீடியா). புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க" என திருவாசகத்தில