Skip to main content

Posts

Showing posts from May, 2015

வன்முறைகளின் உளவியல் 2 Cognitive behavioural therapy - சிறுபேச்சு 3

குழந்தைகளின் உளவியல் வளர்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்களின் பங்கு பெரியது. அவற்றைப் பற்றிப் பேசுகிற புத்தகம்தான் "The Young Mind". குழந்தைகள் தங்கள் வளர்ச்சியில் எதிர்கொள்கிற பிரச்சனைகளை ஆராய்வதோடு அதற்குரிய சரியான உளவியல் வழிகாட்டல்களை எப்படி அணுகுவது என ஒரு கட்டமைப்பை நிறுவியிருக்கிறது. பாடசாலையில்  தனது நண்பி தன்னைப் பார்த்து சிரிக்கவில்லையென்று ஒரு மாணவி வருத்தப்படுகிறாள் என்று வைப்போம். இதை வைத்து தனது நண்பிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று அந்தக் குழந்தை எண்ணிக்கொள்ளும். அதுமட்டுமல்லாமல், தான் அழகில்லாமலும், போரிங் டைப்பாகவும் இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொள்ளும். யாருக்குமே தன்னைப் பிடிக்கவில்லை என்று தன்னம்பிக்கையின்றி அழுத்தத்துடன் இருக்கும். சிலர் தங்களைத்  தனிமைப்படுத்திக்கொள்வார்கள். சிலவேளைகளில் பாடசாலைக்குப் போவதையே நிறுத்திவிடும். இந்தமாதிரியான எதிர்மறை எண்ணங்கள் எதிர்காலத்தை எப்படியெல்லாமோ மாற்றக்கூடும். அடுத்தவர்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தகூடியவர்களாக மாற்றும். ஒரு சிறிய விடயம் எவ்வளவு தூரம் வளரக்கூடும் என்பதற்கு இதுவொரு உதாரணம்.

வடக்கின் தேவை : Entrepreneurship or Social entrepreneurship ? : சிறுபேச்சு 2

நேற்றைய டெய்லி மிரர் பத்திரிகையில்  "Moving from aid to entrepreneurship" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. வடக்கின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தைச் சொல்லியிருந்தது அந்தக் கட்டுரை. இருந்தாலும் உள்ளிருக்கும் சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டு முன்னேறுவது பற்றி அந்தக் கட்டுரையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஒரு பொருளாதார அறிவுரையாளரிடம் இருந்து  எல்லாவற்றையும்  எதிர்பார்க்கவும் முடியாது. நிறையத் தன்னார்வ நிறுவனங்களும், சில நாடுகளும் வடக்கிற்குத் தேவையான உதவிகளையும், வழிகாட்டல்களையும் செய்யக் காத்திருக்கின்றன. ஆனால் அந்தந்தச் சமூகத்தில் இருக்கிற மக்கள்தான் அதற்கு ஆர்வம் காட்டவேண்டும். வருகிற உதவிகளை எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் பலர்  இருக்கிறார்கள். அரச  வேலைவாய்ப்புத்தான் வேண்டுமென்று கேட்கிறார்கள். அது கிடைக்கும்வரையாவது சுயதொழில் முயற்சிகளில் இறங்கமாட்டேன் என்கிறார்கள். தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக, உலகில் தோற்றுப்போன கொள்கைகளைப் பரப்பி இளைஞர்களைத் திசைதிருப்புபவர்கள் மலிந்துபோயிருக்கிறார்கள்.  சமூகத்தின் உள்ளிருந்து

உயிரே! காதலின் உச்சம்

ஒருகாலத்தில் மணிரத்னம் இயக்கிய  திரைப்படங்களில் இணைந்து இயங்கிய  கூட்டணிபோலப்  பொருத்தமான கூட்டணிகள் எல்லோருக்கும் அமையவில்லை. தன்னைச்சுற்றி ஒரு நல்ல குழுவினை அமைத்துக்கொண்டார் எனலாம். ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அவர் பேணுகிற அமைதி, அது தருகிற  ஆழம், இடைவெளிகள் , கவித்துவம் என்பன அவரின் தனித்துவம். அதனாலேயே  அவற்றை மீண்டும் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத்  தவிர்க்கமுடிவதில்லை.  அப்படியான, குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றான உயிரே திரைப்படத்தைப்  பற்றிச்  சில விஷயங்களைச் சொல்லியாகவேண்டும்.                                ஒரு போராட்டக் குழுவினைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் ஏற்படுகிற காதல்,காமம்,ஏக்கம்,போராட்டம் போன்றவற்றுக்கான பதிலை அவற்றினூடே காட்ட முயற்சித்த படம்.  அதில் மனிஷாவின்(மேக்னா ) பாத்திரம்தான் கவனிக்கப்படவேண்டியது. அதனால், தன்னுடைய சிறிய வயதிலேயே வன்புணர்வுக்கு உள்ளாகிய,  Posttraumatic stress disorder இருக்கிற   ஒரு பெண்ணுக்கும்     ஆணுக்கும் இடையிலான காதல்க்கதை  என்றால் இன்னமும் பொருத்தமாக இருக்கும். உளவியல் பாதிப்புக்கு உள்ளான ஒரு பெண், காதலினால்

வன்புணர்வின் உளவியல்

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் வன்புணரப்பட்ட சம்பவத்துக்கு அந்தச் சமூகமே குரல் கொடுக்க எழுந்து நிற்கிறது. வன்புணர்வு செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும் என்கிறார்கள். இப்படியான தண்டனைகள் அவசியம். இவற்றுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. இந்தமாதிரிப் பிரச்சனைகளை உளவியல் நிபுணர்களைக்கொண்டு ஆராய்கிற கலாச்சாரத்துக்குள் நம் ஊடகங்கள்கூட காலடி எடுத்துவைக்கவில்லை. மேலோட்டமான அலசலும் பார்வையுமே இருக்கிறது. வெறுமனே  சட்ட இரீதியாக அணுகினால் போதும் என்றும், தற்காலிகத் தீர்வு அவசியம் என்கிற கோஷமுமே முன்வைக்கப்படுகிறது. ஒரு சமூகத்துக்கு அறிவினை வழங்குவது மட்டும் நிரந்தரத் தீர்வு ஆகாது. குறைக்கலாம். தனிநபர்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்படும் வகையில் நடவடிக்கைகள் அமையவேண்டியது அவசியம்.  சில விஷயங்களைப் பேசமுதல் சில  உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.காதல் திருமணம் செய்துகொண்ட பெண்கள்  வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் பின்னும் வன்புணர்வு நிகழ்கிறது. வீட்டில் உள்ள பெண்கள் மீதும்  வன்புணர்வு நடக்கிறது. வெளியில் வருகிற, ஊடகங்கள் பி

சுஜாதா கணக்கு

செயற்கையாக உருவாக்கிக்கொண்டிருக்கிற  இலக்கிய முகத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியில் ஒன்றாக சுஜாதாவை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  அந்தச் செயற்கையான முகம் சுஜாதாவுக்கு இருந்ததில்லை. அதனாலேயே சுஜாதாவை இலகுவாகத்  தொட்டுவிடமுடிகிறது.  பிற எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தபின்னர் சுஜாதா மட்டுமே எழுத்தாளர் இல்லை என்பது தெரியவரும். அதேநேரம் அவரைச் சரியாக உள்வாங்கிக்கொண்டிருந்தால் அவரின் அசைக்கமுடியாத தனித்துவமும் வெளிப்படும். காரணம்,  அவரை ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் வகைப்படுத்தி ஒப்பிட்டுப்பார்க்கமுடியாது. ஒரு அடிப்படை வாசகனுக்கு அவர் தருகிற மகிழ்ச்சி வித்தியாசமானது. சுஜாதா எழுத்தை ஒரு தொழிலாகச் செய்தவர். எழுத்தில் உணர்ச்சிபூர்வமான உள்ளடக்கங்கள் இல்லை என்று நினைத்தவர்.  அதனைச் அவரே  நேர்காணல்களில் சொன்னதுண்டு.  "ஒரு புகழ் அடையணுங்கிறதைவிட ஒரு Classification (பாகுபாட்டுக்குள்) அகப்படக்கூடாது என்கிற எண்ணம். எல்லா எழுத்தாளர்களையும் இன்ன வகுப்பைச் சார்ந்தவங்கன்னு பிரிச்சுடலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை 'இந்த ஆளை வைச்சுகிட்டு என்ன பண்ணுறது' தெரியாமல் தவிக்கிறாங்