Skip to main content

Posts

Showing posts from May, 2012

The Way Home (2002) - கொரிய திரைப்படம்

நாம் சிறுவர் பிராயத்தில் கடந்து வரும் நபர்கள் , உறவுகளில் எம் மீது அதீத அன்பு வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அன்பை சரியாக புரிந்துகொள்வதில்லை.காலங்கடந்த பின்னரே இந்த உறவுகளின் அன்பின் ஆழம் எமக்கு தெரியவரும் . அவர்களின் இன்மையை உணரும் போது இது இன்னும் அதிகமாகும் . அவர்கள் மீதான வெறுப்பிற்கு அவர்களின் தோற்றம் , நடத்தைகள் காரணமாக இருக்கலாம் . ஆனால் அவர்கள் வைத்திருக்கும் அன்பு ஆழமானது . எமக்கு எதுவெல்லாம் சின்ன சின்ன மகிழ்ச்சியை தருமோ அதையெல்லாம் அவர்கள் மனம் கோணாது செய்வார்கள் . அந்தளவு முதியவர்கள் எம் மீது வைக்கும் அன்பு சிறிது கூட சுயநலமில்லாத அன்பு எனலாம் . ஆனால் அவற்றை நிறைவேற்ற அவர்கள் என்ன என்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்பதை நாம் உணர்வதில்லை .எமது விருப்பங்களை அவர்கள் நிறைவேற்ற நிறைவேற்ற எமக்கு விருப்பங்கள் அதிகரிக்குமே தவிர அவர்கள் நிலையை புரிந்துகொள்வதில்லை . அப்படிப்பட்ட ஒரு சிறுவன் பாட்டியுடன் தங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறான் . அந்த சிறுவனுக்கும் அவனது கிராமத்து பாட்டிக்கும் இடையேயான பாசம் , வெறுப்பு ,கலந்த உறவுப்பயணம் தான் இந்த திரைப்படம்

சென்றவார பேஸ்புக் ,டுவிட்டர் பகிர்வுகள் சில ... [ 22/04 - 30 /04 ]

சென்ற வார (22/04 -30/04) பேஸ்புக், டுவிட்டர் பகிர்வுகள் சிலவற்றின் தொகுப்பு இவை . முன்னையை பகிர்வுகளை வாசிக்க தவற விட்டிருந்தால் .. இதை அழுத்தவும்   " எங்கெங்கு காணினும் சக்தியடா ஏழு கடல் அவள் வண்ணமடா ! " எனும் முதலாவது கவிதையை சமர்ப்பித்த போது பாரதியாரின் தராசு 'எழுக புலவன்' என ஆசீர்வதித்தது ! #புதுமைப்பித்தன் எழுத்தும் அழகு தான் !  புதுமைப்பித்தன் பாரதிதாசன் பற்றி எழுதியதை படிக்க  ======================================================================== டுவிட்டர் பகிர்வுகள்  @ SSudha_ படிப்பறிவு தரும் புத்தகங்களுக்கும் பரந்த அறிவு தரும் புத்தகங்களுக்கும் இடையே வேறுபாடு பலர் உணர்வதில்லை  # Bookday @ SSudha_ கல்வி முறை குழந்தைகளை புரட்டிப்பார்த்து கற்றுக்கொண்டிருக்கிறது . #நிலை இல்லா தன்மை @ SSudha_ எந்த வரைவிலக்கணமும் அற்ற வாழ்விற்க்கு அர்த்தம் தருவது தேடல் ஒன்றே ! மனதிற்கு பிடித்த வேலை ,மூளைக்கு பிடித்த வேலை , கடமைக்கு செய்யும் வேலை மூன்றையும் நிர்வகிக்க கூடிய ஆளுமை வேண்டும். எதிரில் வந்தவர் உதிர்த்து சென்ற புனைவு இல்லா புன்னகையை