கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகிய 'கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி'யில் இந்தத் தடவையும் கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்ப்பட்ட புத்தக நிலையங்கள். 15 ஆவது தடவையாக இந்த பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி BMICH இல் நடைபெறுகிறது.இந்தக் கண்காட்சி ஒரு வாரத்துக்கு நடைபெறும். முதல் நாளிலேயே ஒரு இலட்சம் பார்வையாளர்கள் வந்து போனார்கள் என ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.இரண்டாவது நாள் ஞாயிறு ஆகையால் அதிக கூட்டம்.நீங்கள் செல்லும் போது முதலிலேயே Hall A க்குச் சென்று புத்தக நிலையங்கள் தொடர்பான விபரம் அடங்கிய துண்டை பெற்றுக்கொண்டால் இலகு.அல்லது முன்னாலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த முறை சரியாகத் தமிழ்ப் புத்தக நிலையங்களை இனங்காண முடிந்தது. தமிழ்ப் புத்தக விரும்பிகளுக்கு ஏற்ற நிறைய புத்தகங்கள் ஜெயா புக் சென்டரிலும்(Hall -A : A-47, 51- 58),பூபாலசிங்கம் புத்தகசாலையிலும்(A - 25,27) மற்றும் புக்வின்னிலும்( Hall J - 400) கிடைக்கிறது. ஜெயாவில் அதிகமாக ரமணிச்சந்திரன்,பா லகுமாரன்,இந்திரா பார்த்தசாரதி,சுஜாதா புத்தகங்களை காணக்கிடைத்தது. பூபாலசிங்கத்தில் எஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள்...