Skip to main content

Posts

Showing posts from 2015

முல்லைப்பாட்டு : கன்று தவிப்பதைப் போல்!

தாயைப் பிரிந்த கன்றின் தவிப்புக்கு ஆறுதல் சொல்லிவிடமுடியாது. அதன் கண்களையும், கட்டப்பட்டு நிற்கும் இடத்தையே சுற்றிச் சுற்றித் தன் தவிப்பை வெளிப்படுத்தும் விதத்தையும் பார்த்தவர்களுக்கு ஓர் உண்மை தெரியும். எத்தனை செயல்கள் செய்தாலும், தாய்ப்பசு வரும்வரை கன்றின் ஏக்கம் தீராது. அதுபோக, அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதன் ஏக்கம் எங்களையும் தொற்றிக்கொள்ளும். கிட்டச் சென்று அரவணைத்துக்கொள்ளும்போது, எங்கள் மனம் வேண்டுமானால் கொஞ்சம் நிறைவு காணும். இந்த ஆழத்தை இந்த முல்லைப்பாடல் எப்படிக் கொண்டுவருகிறது எனப் பார்ப்போம். இலக்கியத்தில் இருக்கும் அழகே இந்த ஆழம்தான். படிக்கும்போது தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள். அது ஒரு மழைக்கால மாலைப்பொழுது. துயரை மேலும் அதிகரிக்கச்செய்யும் பொழுது. 'மழைக்காலத்துக்கு முன்னர் திரும்பி வந்திடுவேன்' எனச் சொல்லிவிட்டுப்போன தலைவன் எப்போ திரும்பி வருவான் எனத் தலைவி வருத்தத்தில் இருக்கிறாள். அவள் வருந்தி இளைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோருக்கும் அந்தத் துயர் தொற்றிவிட்டது. இவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாத செவிலித்தாயும் முதுமையான சில பெண்களும் '

அடைமழைக்குள் ஒரு குறுந்தொகைக் காதல்

இந்தக் கார்காலம் என்னை வதைக்கிறது தோழி. தோழியே கேளு! காட்டில் இருக்கிற ஆண்மான்கள் எல்லாம் மென்மையும் மடமையும் உடைய தங்களோட அழகான பெண்மான்களைத் தழுவிக் காதல் இன்பம் கொள்கின்றன. இயற்கைதான் எவ்வளவு மென்மை! அந்த மயக்கத்தில், அவையெல்லாம் காட்டிலுள்ள புதரிலே ஒடுங்கும்படியான சூழலை இந்தக் கார்காலம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தலைவன் பிரிவு ஒருபக்கம் இருக்க, இந்தக் கார்காலமும் இயற்கையும் எனக்கு எதிராகச் சதி செய்கிறது.   மான்கள் மட்டுமா! துதிக்கையை உடைய பெரிய ஆண்யானைகள் எல்லாம் பெண்யானைகளுடன் சேர்ந்து மேகம் சூழ்ந்திருக்கிற மலையிடத்தை அடையும்படி அடைமழை பொழியுது. இருக்கிற கவலை போதாதென்று, மேலும் துன்பம் தந்து வாட்டக்கூடிய இந்த மாலைநேரமாகப்  பார்த்தல்லவா பெய்கிறது. பொன் மாதிரி இருக்கிற என் மேனியின் நல்லழகை கெடுத்த என் தலைவர் இனியும் வராமல் விட்டால் என் உயிர் என்னாகும்! அவரால்தான் என் மேனி அழகையும் உயிரையும் மீட்டெடுக்க முடியும். நான் பசலையால் நொந்துபோய் இருக்கிறேன். அவர் வராவிட்டால் என் உயிர் நீங்கிவிடும்.  அவர் தீண்டினால் உயிர் நிறைவேன். அந்த மான்களுக்கும் யானைகளுக்கும்கூட,  இ

கூதிர்காலத்தை குறுந்தொகையால் வரவேற்கலாம்...

கூதிர்காலம் ஆரம்பித்திருக்கிறது. பனியும் மழையும் ஒன்றாகப் பொழியும்போது அதற்குப் பொருத்தமான ஒரு அழகான குறுந்தொகைப் பாடலோடு காதல் காலத்தை வரவேற்பது அழகாக இருக்கும் என நினைக்கிறேன். தலைவன் பிரிவைத் தலைவி தாங்கிக்க மாட்டான்னு கவலைப்பட்ட தன் தோழியிடம் தலைவி தன் மனநிலையைச் சொல்லுகிறமாதிரியான பாடல். படம் : இணையம்  தோழியே கேளு, ஈரத்தைச் சுமந்துவந்து என்மேல தூவுகிறபடி பனிக்காற்று வீசுகிற கூதிர்காலம் இது. நடுக்கம் தருகிற இந்தக் குளிர்கால இரவின் அமைதியில் மெல்லிய மணி ஒலி மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. தொலைவிலிருந்தாலும் துல்லியமாகக் கேட்கிறது. இரவுல நல்லாத் தூங்குற பசுவை ஈ/நுளம்பு உறங்கவிடாம கடிச்சு தொந்தரவு செய்கிறது. ஈ அமரும் இடத்தை எல்லாம் தன்னோட நாக்கால தடவுவதற்காக பசு தன்னோடை தலையைத் தூக்கிவிட்டு மறுபடியும் உறங்குகிறது. இதையே திரும்பத் திரும்பச் செய்திட்டிருக்கு. அது இப்பிடி செய்யும்போதெல்லாம் அதோடை கழுத்துல இருக்கிற குட்டி மணி அசைந்து அசைந்து சின்ன ஒலி எழுப்புது. அந்த ஒலி என்னை ஏதோ செய்கிறது. என் தனிமைக்கு துக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது.  இந்தச் சத்தம் மற

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன்பினைச் சொல்லுகிற இன்னொரு பாடல்.

தேரழகு !

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, நல்லூர்க் கந்தனின்  தேர்த்திருவிழாக் காலம்  என்பது ஒரு மிகப்பிரமாண்டமான கொண்டாட்டக் காலம். யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரதான கலாச்சார விழாவாகவே ஆகிவிட்டது என்றுகூடச்  சொல்லலாம். கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழாவானது,  மொத்தமாக  27 நாட்கள் இடம்பெற்று, வைரவர் உற்சவத்துடன் நிறைவுபெறும். இன்றுவரை சரியான ஆகம விதிமுறைகளின்படி இடம்பெறும் தேர்த்திருவிழா இதுவென்றும்  சொல்லலாம்.  தேரன்று, வெளிக்கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள்  என அனைத்தும் மூடப்பட்டு, ஒரு விடுமுறை தினம்போலவே காட்சியளித்தது. கோயிலிலிருந்து குறிப்பிட்ட அளவு தூரத்திலேயே வாகனங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கோயிலைச் சுற்றியுள்ள வீதியெங்கும் தண்ணீர்ப் பந்தல்கள் நிறுவப்பட்டிருந்ததோடு, எங்குபோனாலும் பக்திப் பாடல்கள்தான் காதுகளில் கேட்டவண்ணம் இருந்தது. கோயிலுக்குச் செல்லும் வீதியில், கலாச்சார ஆடைகளுடன் வரும்படி அறிவுறுத்தும்  பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கலாச்சார ஆடைகளுடன் கோயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். முருகன் தேர் ஏறியதை மட்டும் பார்த்துவிட்டு ஒருச

தமிழர் அரசியலும் சர்வதேசமும் 2..

ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுச்  சில நாட்களே ஆகிறது. இந்நிலையில், இலங்கையின் முக்கிய பிரச்சனையான இனப்பிரச்சினை தொடர்பில் அரசிடமிருந்து எவ்வாறான பதில்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது  என்பதனை ஆராய்வது அவசியமாகும். சாதகமான ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்கிற வேளையில் இனப்பிரச்சனை தொடர்பில் சர்வதேசம் என்ன அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது எனத் தெரிந்துவைத்திருப்பதும்  அவசியம். இனப்பிரச்சனையும் உள்நாட்டு அரசியலும் ஜனவரி 17ல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தபின்னரும்கூட  உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தது. இதன் காரணமாக, இனப்பிரச்சனை தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளையோ, கருத்துகளையோ யாரும் முன்வைக்கவில்லை. எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஒருவித புரிந்துணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது.  வெளிப்படையான பேச்சுகளை முன்னெடுத்திருந்தால், அவை தென்னிலங்கையில் மிகப்பெரும் அரசியற் பிரச்சாரமாக உருவெடுத்திருக்கும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைகூட மார்ச்சில் வெளியாகவிருந்த மனித உரிமை அறிக்கையை செப்டம்பருக்கு

தமிழர்களின் அரசியலும் சர்வதேச நகர்வுகளும்!

இந்தக் கட்டுரையானது, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த காலகட்டத்திலிருந்து, இலங்கை மீது விழுந்திருக்கும் சர்வதேசப் பார்வையை ஆராய்வதோடு, உள்நாட்டு அரசியல் களநிலவரங்களையும் ஆராய்கிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட  மேற்குலக நாடுகளினதும் கொள்கைகள் மாறியிருக்கிற காலகட்டத்தில், அவற்றை நன்றாகப் பயன்படுத்தி, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கித் தரவேண்டியது அரசியற் தலைவர்களினது கடமையாகும். அதற்குத் தகுதியான, சர்வதேச நாடுகளிடையே சிறந்த உறவைப் பேணக்கூடிய உறுப்பினர்களை, பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது. அமெரிக்கா போலே Soft power இலிருந்து Smart Power எனும் கொள்கையை அடையவேண்டும். அதனை அடைவதற்கு ஒற்றுமையும் உழைப்பும் அவசியம். சர்வதேச அரசியல் பற்றிய அறிவினைச்  சாதாரண மக்களும் பெற்றிருக்கவேண்டும். இலங்கையில், 2015ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் களங்களும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதற்கான  காரணம், உள்நாட்டில் நிலவுகிற  இனப்பிரச்சனை.  இதில் தமிழர்களின் பெரும்பான

தமிழர்களும் சர்வதேசமும் - Soft Power to Smart Power

இந்தக் கட்டுரையானது, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து, இலங்கை மீது விழுந்திருக்கும் சர்வதேசப் பார்வையை ஆராய்வதோடு, உள்நாட்டு அரசியல் களநிலவரங்களையும் ஆராய்கிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட  மேற்குலக நாடுகளினதும் கொள்கைகள் மாறியிருக்கிற காலகட்டத்தில் அவற்றை நன்றாகப் பயன்படுத்தி, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கித் தரவேண்டியது அரசியற் தலைவர்களினது கடமையாகும். அதற்குத் தகுதியான, சர்வதேச நாடுகளிடையே சிறந்த உறவைப் பேணக்கூடிய உறுப்பினர்களை, பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது. அமெரிக்கா போலே Soft power இலிருந்து Smart Power எனும் கொள்கையை அடையவேண்டும். இலங்கையில், 2015ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் களங்களும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதற்கான  காரணம், உள்நாட்டில் நிலவுகிற  இனப்பிரச்சனை.  இதில் தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் அனுசரணை, வழிகாட்டுதலின் கீழ் இய

அகமருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம் : சிறுபேச்சு 6

மலையாளத் திரைப்படங்களைப் போலவே மலையாளப் பாடல்களும் இசை, மொழி அடிப்படையில் மென்மையை இழந்துவிடவில்லை. இயல்பிலேயே இனிமையான மொழிக்கு, வரிகளைப் பார்த்துப் பார்த்துச் சேர்க்கும் கவிஞர்கள் மயக்குகிறார்கள். சில நாட்களாகவே இந்த இரண்டு பாடல்களையும் மனதில் இருந்து நீக்கமுடியவில்லை. ஒன்று, அல்போன்ஸ் புதிரன் இயக்கிய 'பிரேமம்' என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற 'மலரே' என்கிற பாடல்.  விஜய் ஜேசுதாஸின் குரலில் ஒரு அனுராக கீதம். ♫  குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம் மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம் அகமருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம் என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்  ♪ ♫   இரண்டாவது, 1983 என்கிற படத்தில் இடம்பெற்ற  ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் இணைந்து பாடிய 'ஓலன்ஞாளிக் குருவி' என்கிற பாடல். நிறைய வருடங்களுக்குப் பிறகு  வாணி ஜெயராமும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடிய பாடல். மெட்டுப்போலவே பாடலில் இழையோடுகிற கொஞ்சல் அழகு.

பாகுபலி

நீங்கள் வரலாற்றுப் படங்களிலும் அதன் காட்சியமைப்பிலும் திளைப்பவராக இருந்தால் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம். சின்ன வயதில் மகாபாரதக் கதைகளைப் படித்து, குருச்சேத்திரப் போரைக் கற்பனையில் நிகழ்த்திப் பார்த்த அனைவருக்கும் இந்தப் படம் நிச்சயம் மிகப் பிடித்தமானதாக அமையும். எங்கள் வரலாற்றிலும் சூப்பர் ஹீரோக் கதைகள் உண்டு. அதைக் கற்பனை கலந்து நேர்த்தியான 'பிரமாண்டம்'  கொடுக்க யாரும் முன்வர மாட்டார்களா என்கிற ஏக்கம் பலருக்கும் இல்லாமல் இல்லை. 'நான் ஈ' என்கிற காதல், fantasy கலந்த திரைப்படத்துக்குப் பிறகு ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கிற படம்தான் 'பாகுபலி'. தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்காகக் கிட்டதட்ட மூன்று வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது  ராஜமௌலியின் பதினோராவது படம். 'பாகுபலி' ஒரு  கற்பனை கலந்த வரலாற்றுக் கதையாக அமைகிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் முதலாவது பாகம் தான் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா,

ஜூலை மலர்களே!

ஜூலை மாதம் என்றாலே சட்டென்று இரண்டு பாடல்கள் நினைவைத் தட்டும். ஒன்று, ரஹ்மானின் இசையில் அனுபாமா பாடிய "ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு" என்கிற பாடல். இன்னொன்று, "ஜூலை மலர்களே... ஜூலை மலர்களே...உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்" என்கிற பா.விஜயின் வரிகள்.  கொன்றைப் பூக்கள் ஜூலை மாதத்தில் பூக்கும். மரம் முழுவதும் நிறைந்திருக்கும். அதனால் "ஜூலை மலர்கள்" என்கிறார் பா.விஜய். கொன்றைப் பூக்களைத் தான் "ஜூலை மலர்கள்" என்றிருக்கவேண்டும். கொன்றைப் பூக்கள் அவ்வளவு அழகு. ஆனால் சிங்கள மொழியில் இதனை "Esala Mal" என்று அழைப்பார்கள். அதாவது ஜூலை மலர் என்று அர்த்தம். "கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்" சங்ககாலத்தில் கொன்றைப் பூவின் நிறத்தை பெண்களின் மேனி நிறத்துக்கு ஒப்பிடுவார்கள்.  சிவனுக்குப்  பிடித்தமான பூ என்பதால் சிவனைக் 'கொன்றை வேந்தன்' என்றும் அழைப்பதுண்டு. வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு  பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்        கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்       கானங் காரெனக் க

பாபநாசம்

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் என்கிற திரைப்படத்தை வெளியிடப்பட்ட தினமான இன்றே பார்க்கக்கிடைத்தது. கமலுக்கு ஒரு தரமான சினிமா அமையவேண்டும் என்பதுவே எனது  நீண்டநாள் எதிர்பார்ப்பு. இந்தத் திரைப்படம் அதனைப் பூர்த்தி செய்திருக்கிறது.  பாபநாசம் என்கிற ஊரில் மகிழ்ச்சியாக இருக்கிற ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சனை  ஒரு குற்றச்செயலில் போய் முடிகிறது. குற்றத்தை மறைத்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை.  ஒரு சாதாரண மனிதனின் புத்திசாலித்தனத்துக்கும் போலீஸ், சட்டம் போன்ற அமைப்புக்கும் இடையிலான போராட்டம்தான் இந்தப்படம். மோகன்லால் நடித்த  'திருஷ்யம்' என்கிற திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தத் திரைப்படம். இரண்டுக்கும் சுவாரசியமான திரைக்கதை அமைத்து  இயக்கியது ஜீது ஜோசெப் என்கிற இயக்குனர்.  நடிப்பைப் பொறுத்தவரையில் அந்தந்தக் கதாப்பாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் கமலின் நடிப்புத்தான் ஒட்டுமொத்தப் படமுமே என்றும் சொல்லலாம். ஒரு சாதாரண மனிதனின் நிலை தடுமாற்றம் காணவேண்டிய இடத்தில் தடுமாற்றத்தையும், தைரியம் கொள்ளவேண்ட

கண்ணதாசன்

கம்பராமாயணத்தில் வருகிற வரைக்காட்சிப்  படலத்தில் "பானல் அம் கண்கள் ஆட. பவள வாய் முறுவல் ஆட" என்று  ஒரு அழகான பாடல். சந்திர சயிலத்தில் பெண்கள் ஊஞ்சல் ஆடுகிறார்கள். அப்போது என்னவெல்லாம் அசைகிறது எனக் கம்பன் சொல்லுகிறார்.  இதைப் படிக்கும்போது கண்ணதாசன் எழுதிய "கட்டோடு குழலாட ஆட" என்கிற பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது. வாசிக்கும்போதே இனிக்கிறது. இரண்டு தோழிகள் நடனமாடிகொண்டும் சுதந்திரமாகப் பாடிக்கொண்டும்  போவதுபோல அமைந்த  பாடல். அப்படிப் போகிறபோது என்னவெல்லாம் ஆடுகிறது என்று சொல்லும் பாட்டு. கண்ணதாசனின் சொற்கள்கூட கொடிபோல ஆடும். கண்ணதாசனின் இந்தப் பாடலை  எல்லோரும் மாணிக்கவாசகர் இயற்றிய  திருவெம்பாவைப் பாடலுடன் ஒப்பிடுவார்கள். ஒருசில வரிகளை மட்டுமே ஒப்பிடமுடியும். பெண்கள் நீரினைக்  குடைந்தாடும்பொழுது என்னவெல்லாம் அசைகிறது எனச் சொல்லும் திருவெண்பாவைப் பாடல். //காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாட// இதனைப் பிரித்து எழுதினால் இப்படி அமையும். காது ஆர் குழை ஆட பைம்பூண் கலன் ஆட கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆட பெண்ணானவள்  நீரி

கண்ணுக்கு அணி! - சிறுபேச்சு 5

கோலம் காண் படலத்தில் சீதையை அலங்கரிக்கிற காட்சில ஒரு குட்டி சினிமாட்டோகிராபியே நடத்தியிருக்கிறார் கம்பன். மெதுவாக நகர்கிற  காட்சிகள்  வைத்த  மாதிரி.  'அமிழ் இமைத் துணைகள். கண்ணுக்கு அணி என அமைக்குமாபோல் ' கண்ணுக்கு அஞ்சனம் தீட்டுதல் எல்லாம் அழகல்ல. கண்ணைப் பாதி மறைக்கிற மாதிரி அமைந்திருக்கிற இமைகள்தான் கண்ணுக்கு அழகு. அதுமாதிரித்தான் சீதைக்கு நகைகள் அணிவித்து அலங்கரிப்பது. நகைகள் சீதையின் அழகினை மறைப்பது  இன்னும் அழகு.  அழகுக்கு அழகு சேர்ப்பது மாதிரி இருக்கிறது. பிறகு, braided messy bun வடிவில் சிகை அலங்காரம். சுட்டி, காதணிகள், வளையல்கள்  அணிதல், இடையினில் ஓவியம் தீட்டுதல் பற்றிச் சொல்லுகிறார். சீதைக்கு அணிவிக்கப்பட்ட முத்துக்களால் ஆன இடையணியின் ஒளி, பட்டின் நிறம், சீதையின் செந்நிற மேனியின் நிறம் எல்லாம் சேர்ந்து புறப்பட்ட கலவையான வண்ணமும் ஒளியும் அலங்கரிப்பவர்கள் கண்களைக் கூசச் செய்ததாம் என்கிறார். 

நியூட்ரினோ - The Hindu கட்டுரை

தேனி மாவட்டத்தில் நடக்கவிருக்கிற நியூட்ரினோ ஆய்வு பற்றி அப்துல்கலாம் ஹிந்துவில் எழுதியிருக்கிறார். இந்தப் பிரபஞ்சம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முதல் எப்படி உருவானது என்கிறதை அறிய நியூட்ரினோ உதவும். Big Bang நிகழ்ந்த கணத்திலிருந்து தோன்றிய நியூட்ரினோக்கள் இன்றும் பிரபஞ்சத்தில் விரிகின்றன என்கிறார்கள். நியூட்ரினோக்கள் மூலம் ஆதி மூலத்தைக் கண்டுபிடித்தால், அந்தக் கணம்வரை கடவுளுக்கு வேலை இல்லாமல் போய்விடும். இந்தத் தியரிகள் புரியுதோ இல்லையோ, 'அந்த big bang நிகழ்த்தினது யாரு'ன்னு திரும்ப ஒரு கேள்வி கேட்டுவிட்டு புத்திசாலி மா திரி சிரிப்பார்கள்! அப்பிடியானவங்ககிட்ட, 'இன்னைக்கு மதியச் சாப்பாடு நல்லாவே இல்லை. கேவலமான கம்பினேஷன்' னு சொல்லீட்டு எஸ்கேப் ஆகவேண்டியதுதான். அறிய விரும்புபவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். அவர்களுக்காக தமிழில் நிறைய அறிவியல் விஷயங்கள் எழுதப்படவேண்டும்.  தமிழ்ச் சூழலில் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸில் அதிகூடிய புள்ளிகள் எடுத்து பெருமைப்பட்டுக்கொண்டவர்கள் யாரேனும் இருந்தால், இவற்றை எளிமையாக விளக்கி டீடெயிலான கட்டுரைகள் எழுதலாம். ரிச்சர்ட் பிரன்ஸனுக்குக் கூட நேர

உரையாடல்கள் - Concise dialogues

சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை' என்கிற நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவிலும், நிஜத்திலும் நல்ல உரையாடல்கள் என்பது அரிது. மணிரத்னம் படங்களில் காதலர்கள்கூட புத்திசாலித்தனமாக பேசிக்கொள்வார்கள். சுருக்கமாகப் பேசினால் 'என்ன மணிரத்னம் படம் மாதிரி பேசுற. ஒன்னுமே புரியல' ம்பாங்க. இப்போது ஒன்னுமே புரியல என்பது 'முயற்சிப்பது' என்பதைத் தாண்டி கேலியாக மாறிவிட்டது.   'Concise dialogues' னு சொல்லலாம். இதை எழுதுறதுல மணிரத்னமும் சுஜாதாவும் வல்லவர்கள். இலத்தீன் வார்த்தையான 'concisus' இலிருந்து உருவானது. ரியாலிட்டிக்கு கொஞ்சம் ஒத்துவராதது போலத் தெரிந்தாலும், அப்படிப் பேசுபவர்கள்  இருக்கிறார்கள். வார்த்தை விரயமின்றி ஒருசில வார்த்தைகளிலேயே நிறையத் தகவல்களை உள்ளடக்கி சொல்லவருகிற விஷயத்தைச் சொல்லுவது முக்கியம். தட்டையாக இல்லாமல் அடுத்தவருக்குக் கொஞ்சம் மூளையும் மேலதிகமாக வேலை செய்யும். ஒரு புதிர் மாதிரியும் இருக்கலாம். அதை உடைப்பது சுவாரசியம். முரண்பாட்டை உரையாடல்களில் நேர்த்தியாக வெளிப்படுத்தும்போது ஒரு வாசகரைக் கொட்டாவி விடாமல் வைத்திருக்கலாம்.

முடிவுகளைத் திருப்திப்படுத்தல் - சிறுபேச்சு 4

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஏராளமான முடிவுகளை எடுக்கிறோம். இன்றைக்கு என்ன கலர் ஆடை போடுவது, என்ன உணவை எடுத்துச்செல்வது, எந்தப் பக்கத்துக்கு காலுறையினை முதலில் போடுவது என ஏராளமான முடிவுகளை நம் மூளை எடுக்கும். சில முடிவுகள் தன்னிச்சையாக நிகழ்பவை. ஒரு பொருளை வாங்கும்போது மிகச்சிறந்தது எதுவென்று தேடுவதில்லை. காரணம், நம் முன்னே ஏராளாமான தெரிவுகள் இப்போது வந்திருக்கிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்டளவு முடிவுகளைத்தான் நம் மூளை எடுக்கிறது என்பது நியூரோலோஜிஸ்ட்களின் கருத்து. அதிலும் குறிப்பாக,  ஒரு விடயத்தை அதிமுக்கியமானது என தீர்மானிப்பதில்லையாம்.  1978ல் சைமன்(Herbert A.Simon) எனும் பொருளாதார வல்லுனருக்கு நோபல் பரிசு கிடைத்தது. நிறுவனங்களுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களையும், அவை எடுக்கப்படும் முறைமையினையும் ஆராய்ந்தவர்.  நாம் எல்லோரும் அவர் அறிமுகப்படுத்திய 'திருப்திப்படுதல்' என்கிற கருத்தை பின்பற்றுகிறவர்கள். ஒரு தீர்மானம் எடுக்கிறபோது நாம் எல்லோரும் பின்பற்றுகிற சிந்தனைச் செயற்பாட்டுக்கு அவர் ஒரு சுருக்கமான சொல்லைத் தேடினார். ஒரு மிகச் சிறந்த தெரிவினை எடுக்கமுடியாது போக

இயோபின்டே புஸ்தகம்.

1975ல் இந்திரா காந்தியின் அரசினால், இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தக் காலத்திலிருந்து பின்நோக்கி நகருகிற கதைக்களம். கதைசொல்லியாக ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறார். அரச ஆணையின்படி தான் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் என்பதை அறிந்து, தான் பார்த்தவற்றை ஒரு புத்தகமாக எழுத ஆரம்பிக்கிறார். நீலகிரி, மூனாரில் ஆங்கிலேயர்கள் தேயிலைப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்த காலம். 1900ம் ஆண்டளவில் ஜாக்ஸன் என்கிற ஆங்கிலேய அதிகாரிக்குச் சொந்தமான தேயிலைத் தோ ட்டத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அடிமைகளை அடக்கியாள இயோப் என்கிற உள்நாட்டு இளைஞனை ஜாக்ஸன் நியமிக்கிறார். இயோபிற்கு திருமணம் முதலான ஆதார காரியங்களைச் செய்துவைக்கிறார். ஜாக்ஸன் இறந்தபின்னர் இயோப்பின் கைக்கு அதிகாரமும் உரிமையையும் மாறுகிறது. பிரிடிஷ்காரர்கள் போலவே இயோபின் ஆட்சியும் அமைகிறது. இயோப்பிற்கு மூன்று குழந்தைகள் பிறக்கிறது. முதல் இருவரும் தந்தையைப் போலவே வன்முறை செய்கிறவர்கள். மூன்றாவது பிள்ளையான யோஷி(Farhadh Fazil) தனது தாயைப் போல அமைதியும் அன்பும் கொண்டவன். சில காலங்களில் நோயின் காரணமாக தாய் இறந்துவிடுகிறாள். தன்னுட

மனதோடு பேசலாம் - நிகழ்ச்சி

கட்டைப் பஞ்சாயத்து எல்லாம் ஆலமரம், செம்புன்னு காலம்  போய், சோபா செட்டு கண்ணாடி கிளாஸ்னு ட்ரெண்டு மாறிப்போச்சு. அதனாலேயே கொஞ்சக் காலமாக மற்றவர்கள் பிரச்னையை தீர்க்கிறேன்  என்று ஆரம்பிக்கப்படும் நிகழ்ச்சிகள் மீது எதிர்மறையான கருத்து வைத்திருந்தேன். எந்த  டிவி சானலுக்கு மாற்றினாலும் 'இதோ அறிவுரை சொல்லுகிறேன்' என்று பலபேர் காத்திருக்கிறார்கள். இன்ஸ்டன்ட் சாமியார்கள் மாதிரி, நிபுணத்துவம் அற்றவர்கள் எல்லோரும் மற்றவர்களின் வாழ்வில் தலையிட்டு  ஏதேதோ குழப்பம் செய்து பணம் பார்க்கிறார்கள். தங்கள் டிஆர்பி ரேட்டினை  உயர்த்திக்கொள்ளவதற்கு பிரச்சனைகளை அணுகுகிறார்கள்.  எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அதே நோக்கம் இருந்தாலும் சில நிகழ்ச்சிகளில் கொஞ்சமேனும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கும் என்றே நம்புகிறேன். தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் 'மனதோடு பேசலாம்' எனும் நிகழ்ச்சியினைத் தற்செயலாகக் காணக்கிடைத்தது. நான் பார்த்தவரையில் நிபுணத்துவம் பெற்ற உளவியல் ஆலோசகர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். எந்தக் கேள்வி கேட்டாலும் பொதுவான ஒரு பதிலைக் கொடுத்துவிட்டு, அருகிலிருக்கும் உளவியல் நிபுணரைப் பாருங

வன்முறைகளின் உளவியல் 2 Cognitive behavioural therapy - சிறுபேச்சு 3

குழந்தைகளின் உளவியல் வளர்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்களின் பங்கு பெரியது. அவற்றைப் பற்றிப் பேசுகிற புத்தகம்தான் "The Young Mind". குழந்தைகள் தங்கள் வளர்ச்சியில் எதிர்கொள்கிற பிரச்சனைகளை ஆராய்வதோடு அதற்குரிய சரியான உளவியல் வழிகாட்டல்களை எப்படி அணுகுவது என ஒரு கட்டமைப்பை நிறுவியிருக்கிறது. பாடசாலையில்  தனது நண்பி தன்னைப் பார்த்து சிரிக்கவில்லையென்று ஒரு மாணவி வருத்தப்படுகிறாள் என்று வைப்போம். இதை வைத்து தனது நண்பிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று அந்தக் குழந்தை எண்ணிக்கொள்ளும். அதுமட்டுமல்லாமல், தான் அழகில்லாமலும், போரிங் டைப்பாகவும் இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொள்ளும். யாருக்குமே தன்னைப் பிடிக்கவில்லை என்று தன்னம்பிக்கையின்றி அழுத்தத்துடன் இருக்கும். சிலர் தங்களைத்  தனிமைப்படுத்திக்கொள்வார்கள். சிலவேளைகளில் பாடசாலைக்குப் போவதையே நிறுத்திவிடும். இந்தமாதிரியான எதிர்மறை எண்ணங்கள் எதிர்காலத்தை எப்படியெல்லாமோ மாற்றக்கூடும். அடுத்தவர்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தகூடியவர்களாக மாற்றும். ஒரு சிறிய விடயம் எவ்வளவு தூரம் வளரக்கூடும் என்பதற்கு இதுவொரு உதாரணம்.

வடக்கின் தேவை : Entrepreneurship or Social entrepreneurship ? : சிறுபேச்சு 2

நேற்றைய டெய்லி மிரர் பத்திரிகையில்  "Moving from aid to entrepreneurship" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. வடக்கின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தைச் சொல்லியிருந்தது அந்தக் கட்டுரை. இருந்தாலும் உள்ளிருக்கும் சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டு முன்னேறுவது பற்றி அந்தக் கட்டுரையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஒரு பொருளாதார அறிவுரையாளரிடம் இருந்து  எல்லாவற்றையும்  எதிர்பார்க்கவும் முடியாது. நிறையத் தன்னார்வ நிறுவனங்களும், சில நாடுகளும் வடக்கிற்குத் தேவையான உதவிகளையும், வழிகாட்டல்களையும் செய்யக் காத்திருக்கின்றன. ஆனால் அந்தந்தச் சமூகத்தில் இருக்கிற மக்கள்தான் அதற்கு ஆர்வம் காட்டவேண்டும். வருகிற உதவிகளை எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் பலர்  இருக்கிறார்கள். அரச  வேலைவாய்ப்புத்தான் வேண்டுமென்று கேட்கிறார்கள். அது கிடைக்கும்வரையாவது சுயதொழில் முயற்சிகளில் இறங்கமாட்டேன் என்கிறார்கள். தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக, உலகில் தோற்றுப்போன கொள்கைகளைப் பரப்பி இளைஞர்களைத் திசைதிருப்புபவர்கள் மலிந்துபோயிருக்கிறார்கள்.  சமூகத்தின் உள்ளிருந்து