Skip to main content

Posts

Showing posts from February, 2011

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

முதலில் பாலியல் தெளிவூட்டும் இப்படி மன பக்குவம் அடைந்தவர்களுக்கான(18 +) படங்கள் எடுப்பதற்கு தைரியம் வேண்டும்.அதுவும் முக்கியமாக எமது சமுதாயம் இன்னும் பகுத்தறிவு ,மனப்பக்குவம் அடையாத நிலையில் .ஆனாலும் கவுதம் தெளிவாக சொல்லியிருக்கிறார் பக்குவநிலையை அடைந்தவர்களுக்கான படம் என்று . பலரின் தவறான புரிதலுக்கு உள்ளான ஆரம்ப கதையின் சுருக்கம் . சிறுவயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் வீராவிடம் சில வருடங்கள்  கழித்து இளம் பராயத்தில் ஏற்ப்படும் மனோநிலை மாற்றமே பல பிரச்சனைகளுக்கு வழிகோலுவதுடன் வாழ்க்கையையும் புரட்டிப்போடுகிறது . சிறுவயதில் தாயை இழந்து ,தனது தந்தையால் பாலியல் வன்புணர்ச்சிக்கு,துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தப்படும் சமீரிட்க்கு(வீராவுக்கு அல்ல ) அவனது பதின்ம வயதில் (Teenage (13 )) அவன் மீது அக்கறை செலுத்தும் பக்கத்து வீட்டு பெண் மீனாட்சி என்பவருடன் பார்த்தவுடனேயே காதல் ஏற்ப்படுகிறது . இந்த கொடுமைகளை தெரிந்துகொண்ட மீனாட்சி சமீரை காப்பாற்றி தன்னுடன் வைத்துக்கொள்கிறார் .சமீரின் பெயரை வீரா எனவும் மாற்றி அவனை வளர்ந்தார் .வீராவும் மீனாட்சி அம்மா என்று அழைக்க வீரா மீனாட

காதல் - ஹார்மோன்களினூடு ஒரு பயணம் !

இந்த காதலை ஹார்மோன் செய்யும் கலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் . நீங்க காதலிக்காம இருந்தா கூட இந்த அடுத்த,பக்கத்துவீட்டு ,நண்பர்கள்  காதலை கவனித்தாலே போதும் எவ்வளவு அடிமையாகி இருக்கிறார்கள் என தெரியும். பேஸ்புக் வாலில் கவிதை கிறுக்கல்கள் ,எஸ் எம் எஸ் என அனைத்திலும் அதன் அடிமைத்தன வெளிப்பாடு பார்த்திருபீங்க . எதனால் இப்படி ? ஏன் இவ்வாறான அடிமைத்தனம் என்ற கேள்விகளுக்கு சேதன இரசாயனத்தோட கொஞ்சம் அறிவியலையும் குழைத்து பயணம் செய்து பார்ப்போம் . எதிர்ப்பு பதிவல்ல ,காரணம் தெரிந்துகொள்வதில் தவறும் இல்லை . குருநாதர் சுஜாதா அவர்கள்  ஆயுத எழுத்தில் எழுதிய வசனம்  சுருக்கமாக இருக்கும் .  காதல்னு ஒன்னு கிடையவே கிடையாது . நாம் பிறந்ததெல்லாம் , நாமண்ணா நான் நீ இதோ இந்த பச்சை சட்டை மஞ்ச சுடிதார் போலீஸ்காரர் எல்லாரும் பொறந்தது எதுக்காக நம்மோட நலத்துக்காக . இந்த காதல், பாட்டு, ஓவியம் ,கண்ணீர் இதெல்லாமே இருட்லையும் ,ஹோடேல்லையும் ,பெட்லையும் முடியிறது தானே . estrogen    testosterone   Vasopressin   வெறும் ஒர்கனிக் கெமிஸ்ட்ரி . x கிரோமொசொம் y கிரோமொசொம் xx ,xy அவ்வளவு தான் மேட்டர்" .என்று

இமான் மலேகி(Realistic painter) - ஒரு ஓவியனின் ரசனை

நவீன ஓவியங்களை(Modern Arts) பெரிதாக ரசிப்பதில்லை . காரணம் ஒன்றுமே புரிவதில்லை அதை வரைந்தவர்  விளக்கினால் மட்டுமே விளங்கும். ஆனால் நான் பார்த்து பிரம்மித்த ஓவியங்கள் அப்படி அல்ல. சாதாரண கண்களுக்கு ரசிப்புத்தன்மை என்பதை விட வியப்பை தரக்கூடியது . ஓவியங்களில் பல வகைகள் இருக்கலாம் அதில் இமான் மலேகி  என்ற மிகச்சிறந்த ஓவியனை  R ealistic painter   என்ற வகைக்குள் சேர்க்கலாம் .அதாவது ஒரு நிகழ்வை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் ஓவியங்கள் .   வியப்புக்கான காரணங்களை  பகிர்ந்துகொள்கிறேன் . இந்த படத்தில் சுவரிலிருந்து தரை வரை வந்திருக்கும் நிழல் .சீமெந்து தரையின் மீது இருக்கும்  வெடிப்புகள் , சுவரில் இருக்கும் அழுக்குகள் ,மாலை வேளை அல்லது காலை வேளையில் வெயில் மரக்கிளைகள் இடையே  வரும் அழகு . தரையில் ஊற்றப்பட்டிருக்கும் நீர் சில இடங்களில் காய்ந்திருக்கிறது என ஒவ்வொன்றையும் ரசிக்கலாம் . . அமைதியான பெண் போன்ற  முக பாவனை ,தோலில் இருக்கும் மென்மை,உடையில் இருக்கும் மடிப்புகள்,ஓரத்தில் இருக்கும் முடி ஆடைகளில் பட்டு தெறிக்கும் வெளிச்சம் .ஒரு பொருளை பிடித்திருக்கும் போது கை

மதன் கார்க்கி : நெஞ்சுக்குள் பெய்திடும் தமிழ் மழை

இறுதியாக வெளியாகிய  பயணம்  பாடலுக்கு  கீழே செல்லவும்  ... பூச்சியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு என்று பைனரிக்குள் பூவாசத்தை கொண்டு வந்து தமிழையும் அழகாக தொழில்நுட்பத்தோடு ஒருமைப்படுத்தி என்னை மிகவும் கவர்ந்தவர் மதன் கார்க்கி . ஏன் பெரும்பாலானவர்கள் அறிந்துகொண்டதும் இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ என்ற இந்த பாடல் மூலம் தான் . ஆனால் அவர் தான் கண்டேன் காதலே பட பாடல்  ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன் என்ற பாடலை எழுதினார் என்று பிறகு தான் தெரியும் . ஆனால் அப்போதே அவர் புதிய ஆரம்பங்களை வரிகளுக்கு கொடுக்க எத்தணித்தது பாராட்டுக்குரியது. மிதவை மனமே.. மிதவை மனமே.. என்னை முந்திச் செல்லாதே என்று ஆரம்பிக்கப்பட்ட அந்த பாடல் இசையமைப்பாளர் வித்தியாசாகரின் வேண்டுகோளுக்கு இணங்க மாற்றியிருக்கிறார் . எந்திரனில் தன் திறனை காட்டிய மதன் கார்க்கியின் பயணம் நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ விலும் தொடர்ந்தது . வரிகள் அனைத்தும் புதிது .ஏதோ ஒன்று இருக்கிறது வரிகளில்  . தமிழ் அழாகான மொழி என வெளிப்படுத்தும் எழுத்து , அவரின் பார்வையில் இருந்து பார்க்கும் போது ஆச்சரியம் . ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில் விழியில் விள