Skip to main content

Posts

Showing posts from 2012

இசையமைப்பாளர் ,பாடகர் ரமேஷ் விநாயகம்

தமிழ் இயக்குனர்களால் சரியாக இனங்காணப்படாத ,பயன்படுத்தப்படாத  மிகவும் திறமையான இசையமைப்பாளர்கள் வரிசையில்  ரமேஷ் விநாயகத்துக்கும் ஒரு முக்கிய இடம் கொடுக்கலாம் .  இசையமைப்பாளரும் பாடகருமான  ரமேஷ் விநாயகம் பற்றிய அறிமுகம் பெரும்பாலானவர்களுக்கு  நளதமயந்தி , அழகிய தீயே திரைப்படங்களுக்கு பின்னர் கிடைத்திருக்கும். அதற்கு முன்னரே வசந்தின் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே " படத்தில் ஒரேயொரு பாடலுக்கு மட்டுமே இசையமைத்து இருக்கிறார். அவர் முழுமையாக இசையமைத்த முதல் திரைப்படம் யுனிவேர்சிட்டி. அவர் பாடி  இசையமைத்த பாடல்களில் சில எப்போது கேட்டாலும்  சுகமான இசை அனுபவத்தை தந்துவிட்டே செல்லும்.   "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே"   திரைப்படத்தில் ரமேஷ் விநாயகம் இசையமைத்து பாடிய   தொட்டு தொட்டு செல்லும் பாடல் அதிகமானோரைக் கவர்ந்தது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அவர் கொடுத்த மெல்லிசைகளை கேட்க்கும் போது , அதில்  இரண்டு எப்போதுமே தென்றலில் ஈரம் கலந்து  மனதை நனைத்துவிட்டே  செல்லும் .  இன்று கேட்டாலும் நம்மை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்

நீ தானே என் பொன்வசந்தம்

உறவுகள் ,உணர்வுகள் எனும் இரண்டு விடயங்களோடு உளவியலையும் சேர்த்து விட்டால் ஏராளமான படைப்புகள் கைகளில் கிடைக்கும் . அதைத் திறம்படக்  கோர்த்து ஒரு படைப்பாக தருவதில் கைதேர்ந்தவர்கள் என இயக்குனர்  பாலுமகேந்திரா, மறைந்த ஜீவா, கௌதம் மேனன் , மணிரத்னத்தை குறிப்பிட்டு சொல்லலாம் . இந்த தனித்துவத்துக்கு காரணம்  பெண்கள்  வெறும் காட்சிப்பொருள்கள் எனும் சித்தாந்தத்தை மாற்றியது தான். உறவுகளும் உணர்வுகளும் மிகவும் மென்மையானவை என்பதனால் தானோ என்னவோ அவர்களின் காட்சியமைப்புகளும் மெதுவாகவே மனதை ஆட்கொண்டு மென்மையாக்கிவிடும். ஆனால்  இந்த மென்மை எனும் விடயம் தமிழ் சினிமாவுக்கும் அதன் பெரும்பாலான இரசிகர்களுக்கும்  இன்னமும் பழக்கப்படாத ஒன்று. காதலுக்கு பிரச்சனை தருவது புறக்காரணிகளே எனும் உளவியலுக்குள்ளும் மிக ஆழமாக உந்தப்பட்டு இருப்பவர்கள். வழமையாக பெண்களை வெறும் அசையாத பொருளாக மையத்தில் வைத்துக்கொண்டு , ஆணின் மனோநிலையில் இருந்துகொண்டே சுழலும்  காதலை உடைத்து பெண்ணின் மனநிலையையும் ஆழமாக தொட்டவர் கவுதம் எனலாம். இதையே தான் நீ தானே என் பொன் வசந்தத்திலும் செய்திருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயாவில

பாஷோ..

பாஷோ ஹைக்கூவின் கம்பர் என்று சுஜாதா சொல்லுவார். அனைத்து  உணர்வுகளையும்  தன் பக்கம் குவிக்கும் திறன் கொண்ட ஹைக்கூ கவிதைகள் அவருடையது. ஒரு வித அமைதியை தந்துவிட்டுப் போகும். பாஷோவின் புகழ்பெற்ற ஹைக்கூ கவிதைகள் இவை : *** விருந்தினர் கூட மறந்து விட்ட மலையடி கிராமம் *** பழைய கிணறு தவளை குதிக்கையில் தண்ணீரில் சப்தம் *** நிசப்தம் கற்களில் ஊறிவிட பூச்சிகளின் சப்தம் *** கோடைப் புல்வெளி அந்த மாவீரர்களின் கனவுப் பாதைகள் *** இலையுதிர் காலத்தில்  இந்தப் பாதையில் யாரும் செல்வதில்லை என்னைத் தவிர   ஒரு பொருளை மேலாகப் பார்த்தால் போதாது .கவித்துவத்துக்கு ஆழமாக அந்தப் பொருளின் உள்ளே நோக்க வேண்டும் . வருணனை மட்டும் ஒரு காட்சியின் உள் அர்த்தத்தை பிடிக்க முடியாது என்பது பாஷோவின் கூற்று. அவற்றை அவரின் ஹைக்கூக்களிலேயே கவனிக்கலாம். எழுதும் போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது. எண்ணங்களை கலைய விடாமல் நேரடியாகச் சொல்" என்றார் . எஸ் ராமகிரிஷ்ணன் அவர்களின்  " கவிதை கேட்ட நரி " என்ற இந்தப் பகிர்வையும் படித்துப் பாருங்கள்.

அழிவிலிருந்து ஆக்கம் 01 - ஊடகங்கள்

ஒரு சமூகமோ, அமைப்போ அல்லது ஒரு படைப்போ திருத்தங்களுக்கு உள்ளாவது என்பது வேறு ,அழிவுக்குள்ளான  ஒரு சமூகத்தை புதிதாக கட்டியெழுப்புவது  என்பது வேறு . உதாரணமாக சொல்லப்போனால் நாம் செய்த விடயங்களில் தவறு இருந்தால் அதை திருத்தப்பார்ப்போம். சில விடயங்களை  திருத்த முடியாமலும் ,தவறுகளை சரிவரக் கண்டுகொள்ள  முடியாமலும் போகும் போது அதனை முற்றாக அழித்துவிட்டு மீண்டும் செய்ய முயல்வோம் . இது ஒருவித சௌகரியத்தை எமக்கு கொடுக்கும். புதிய அணுகுமுறைகளையும் பிரயோகப்படுத்துவது இலகு. பொருளாதாரத்தில் இதை  Creative destruction என்று சொல்வார்கள் . ஆனால் இந்த பதிவு பொருளாதாரம் பற்றியது அல்ல. மனிதர்களின் நாகரிகமும் கலாச்சாரமும் மனித சிந்தனைகளின் வளர்ச்சி பற்றியதும்.   திருத்தங்களுக்கு உட்படுத்துவதை விட ,முழுதாக அழிவடைந்த ஒன்றை மீண்டும் கட்டியெழுப்பும் போது அது முற்றிலும் புதிய வடிவமாக உருவெடுக்கக் கூடும். மீண்டும் புதிதாய் உருவாக்கப்படும் போது அதில் நல்ல விடயங்களும்  இருக்கக்கூடும் அல்லது மக்களை பின்தங்கிய நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு அடிமைபப்டுத்தும் விடயங்களும் தீய விடயங்களும் இருக்கக் கூடும்.

ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தல் ..

சமூக நிகழ்வுகள் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தி (எல்லாமே தொடர்புடையுடையவை ) அவை உளவியல் ரீதியில் சமூகத்தை எப்படி பாதிப்படைய செய்யும் , மாற்றத்தை ஏற்படுத்தும் , அதன் பின்னர் அந்த சமூகத்தை எப்படி கொண்டு செல்லுமென தொலைநோக்கில் எழுதப்படுவதோ பேசப்படுவதோ கிடையாது. சமுதாயமும் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தாத சமுதாயமாகவே வளர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் சில நிகழ்வுகளை ஆரம்பித்தில் நாம் தடுக்காத போது அவை வளர்ந்து மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் அபாயமுடையன . Domino effect , Snowball effect உம் இதைத்தான் சொல்கின்றன . Butterfly effect எல்லோரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் snowball effect , domino effect பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இவை மூன்றையும் ஒரு சங்கிலித்தொடர் விளைவுகள்னு பொதுவா ஒரு வகைக்குள்  சேர்த்திடலாம். ஒன்றோடொன்று தொடர்புடையன . மேலதிக விபரம் தேவைப்படுவோர் கூகிள் செய்து பாருங்கள் . விபரங்கள் தேவைப்படுமேயானால் அடுத்த  பதிவில் விளங்கப்படுத்துகிறேன். வண்ணத்துப் பூச்சி விளைவு என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம் கொடுத்திடலாம் என எண்ணுகிறேன் . பிரேசிலில

கம்பனின் கவிச்சுவை !

முன்னமே இரண்டு இலக்கிய தளங்களை பரிந்துரைத்திருந்தேன். எளிய முறையில் இலக்கியத்தின் சுவையை அனைவரும் புரிந்துகொள்ளும்படி விளங்கப்படுத்தியிருப்பார்கள். தினம் ஒரு பா வாக இதுவரை வலைத்தளங்களில் எழுதி வந்த என் சொக்கன் அவர்கள் இப்போது ஒலி வடிவில் கம்பராமாயணத்தை சுவை பட கூறி வருகிறார்.    இவர்களின் பகிர்வுகளில்  சுவை மட்டுமன்றி சுவாரசியமும் நிறைந்திருக்கும். உதாரணமாக  இந்த பாடலில் வேட்கை மிகுந்தவர்கள் நிகழும் செயல்களைத் தமக்குச் சாதகமாகவே நோக்குவார்கள் என்னும் உளவியலை கம்பன் அழகா சொல்லியிருப்பார் .  நாமத்தால் அழிவாள் ஒரு நன்னுதல். ‘சேமத்து ஆர் வில் இறுத்தது. தேருங்கால். தூமத்து ஆர் குழல் தூ மொழித் தோகைப ால் காமத்தால் அன்று. கல்வியினால்’ என்றாள்.   இராமன் சீதை மீது கொண்ட காதலால் வில்லை உடைக்கல , தான் கற்ற கல்வித் திறனை ( வில் உடைக்க முடியும்னு ) நிரூபிக்கவே உடைச்சிருப்பார்னு ராமர் மீது காதல் கொண்ட இன்னொரு பெண் நினைத்துக்கொள்கிறாள். தன்னை ஆறுதல்ப்படுத்த. இதை என் சொக்கன் மிக அழகா இன்னும் விபரமாக  ஒலி வடிவில் விளங்கப்படுத்தியிருக்கார் . கம்பனை வியப்போர் இவருடைய ஒலி வடிவங்களை பின்பற்றல

child prodigy பற்றிய தேடலில்

child prodigy பற்றிய தேடலில் பல அறியக்கிடைத்தது . குறைந்த வயதிலேயே சாதனை படைத்தார், குறைந்த வயதிலேயே பட்டம் பெற்றார் வளர்ந்தவர்களே சித்தியடைய கடினப்படும் பரீட்ச்சையில் எல்லாம் சித்தி பெற்றார்கள்னு கேள்விப்படுவோம்  இல்லையா ! இப்படிப்பட்டவர்களை தான்   child prodigies என அழைக்கின்றனர் .   சின்ன வயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவை பெற்றவர்கள் தான் இவர்கள் . ஆனால் இதில் நாம் அதிகம் கேள்விப்பட்டது கணித மேதை ராமானுஜன் , இசை மேதை பீத்தோவன், மொசார்ட்   பற்றி தான் .  ஆனால் விக்கியில் பெரியதொரு வரிசை இருக்கிறது . Wiki ஆனால் இவர்களில் அண்மையில் அதிகம் அறியப்பட்டவர் அண்மையில் ஜனவரி 2012 இல் தன்னுடைய 16 வயதில் மூளை பாதிப்பு ஏற்பட்டு இறந்து போன அர்பா கரீம் . பாகிஸ்தானை சேர்ந்தவர் 9 வயதிலேயே மைக்ரோசொப்டின்   MCP முடித்தவர் .   இயல்பாகவே குழந்தைகள் திறமைசாலிகள் ஆனால் மேலதிக எதிர்பார்ப்பால் / அழுத்தங்கள் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் போது அவர்கள் தொடர்ந்து சாதிக்க முடியாமல் போகிறது என்னும் கருத்து பல கட்டுரையாசிரியர்களால்  முன் வைக்கப்படுகிறது .  சின்ன வயதில் சாதிப்பவர்கள் பெரும்பாலானோ

உகரச்சுட்டும்(முன்மைச்சுட்டு )ஈழத்தமிழும்

மொழிஞாயிறு என்றழைக்கப்படும்  ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய வேர்ச்சொற் கட்டுரைகள் படிக்க நேரிட்டது .   அதில் உ என்னும்  வேர்ச்சொல் பகுதியில் உகரச்சுட்டு பற்றி பகிர்ந்திருப்பார் .  உகரம்  ஒலிக்கும் போது இதழ் குவிந்து முன்னோக்குவதால் உகரச்சுட்டும், பேசுபவரின் முன்னிடத்தை குறிக்கும் .  ஒருவரை நோக்கி சொல்கிறோம் என்றால் அவர் முன்னிலையில் (மிக நெருக்கமாக ) உகரச்சுட்டு பயன்படுத்தப்படும் . உதாரணமாக : உதுக்காண்                                உந்தா                                உந்த                                உவன்                                உது                                உவை உந்த ( இந்த ) சொற்கள் ஈழத்தமிழ் பேச்சுவழக்கில் இன்றும் உள்ள சொற்கள் . இந்த உகரச்சுட்டு யாழ்ப்பாணத்தில் உண்டு தமிழ் நாட்டில் வழக்கற்றதாகி விட்டது என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கார் தேவநேயப் பாவணார் . ஈழத்தமிழில் இவற்றின் பயன்பாடுகள் : உதுக்காண் ( என் முன் பார் ) இருக்கும் நல்லா தேடிப்  பார் . உவனிட்ட (முன் நிற்ப்பவர் ) எத்தனையோ  தடவை சொல்லீட்டன்  சும்மா  உவ்விடமா (உ + இடம் ) வ

கங்கை கொண்ட சோழபுரம் பயணம் - பகுதி 1

ஒரு வரலாற்று இடத்தின் சிறப்பை கேள்விப்பட்டு , அந்த தகவல்களை கொண்டு அந்த இடம் இப்படித்தான் இருக்குமென  மிகப்பெரிய  பிம்பத்தை முன்கூட்டியே ஏற்படுத்திக்கொண்டு அங்கு எப்போது செல்வோமென  எதிர்பார்த்திருப்பது ஒரு தனி சுகம் என்றால் , அதை நேரில் பார்த்து பிரமிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது என்பது அதை விட அதீத மகிழ்ச்சியும் ஆச்சரியமும்  தரும் . அப்படியானதொரு சந்தர்ப்பம் ,  இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு  பிரயாணம் செய்த போது கிட்டியது . இந்த தடவை கங்கை கொண்ட சோழபுரம் முதல்  தராசுரம் ,தஞ்சைப் பெருங்கோயில், மதுரை , குமரிமுனை  வரை செல்வதென  நீண்ட தெரிவை மேற்க்கொண்டேன். முதலாவது இலக்கு சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் நோக்கியதாக அமைந்திருந்தது . சென்னை நோக்கி மீண்டும் திரும்பி வரும் வழியில் மாமல்லபுரம் செல்லலாம் என எண்ணமிருந்தது. வாகனம் கங்கை கொண்ட சோழபுரத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது சோழப்பேரரசு பற்றிய எண்ண  ஓட்டமும் மனதில் தொற்றிக்கொண்டது . தரையில் தன் பேரரசை நிறுவியதோடு மட்டுமல்லாது மிகப்பெரிய கப்பற்படை கொண்டு கடல் தாண்டி மலேசியா , இலங்கை என அனைத்து நாடுகளை

ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா

சுஜாதா தன் கதைகளாக இருந்தால் கூட அதில் தனக்கு தெரிந்த  தகவல்களை பகிர்வது சாதாரணம் . கதையின் ஓட்டத்தின் வேகத்தையும் சுவராசியத்தையும் அவை இன்னும் அதிகரிக்க செய்யுமே தவிர குறைவடைய செய்யாது . அண்மையில் வாசித்த சுஜாதாவின் " ஒரு லட்சம் புத்தகங்கள் " கதை மிக சுவாரசியமானது. சமூகத்தில் உள்ள அத்தனை கதாப்பாத்திரங்களையும் ,அத்தனை அழுக்குகளையும் ஒரே கதையில் சுட்டிக்காட்டுவது என்பது மிக கடினம் . மாகாகவி பாரதி போன்றவர்களை சமூகம் எப்படி பார்த்தது ,பார்க்கிறது என்பதிலிருந்து யாழ் நூலகம் , இலங்கை தமிழர் ,தனி நபர்களின் அரசியலும் நாட்டின் அரசியலும் எப்படி இந்த சமூகத்தை கையாள்கிறது என்பது வரை இந்த கதையில் தொட்டுவிட்டு சென்றிருப்பார் . நம்ம சமூகத்திலை ஒரு பழக்கம் ஒன்றிருக்கு , ஏதாவது ஒன்றை சின்னதாக கடமைக்கு செய்து விட்டு செய்து விட்டேன் செய்து விட்டேன் என்று இறக்கும் வரை  சொல்லிக்கொண்தே இருப்பது . அதை அரசியல் வாதிகள் பார்வையில்  " நாங்க தான் கடையடைப்பு நடத்தினோமே " என்று சொல்வதோடு அவர்கள் கடமை முடிந்து போவதை சுட்டிக்காட்டி இருப்பார் . இதனை சமூகத்தில் இருந்து கண்டறிய நுணுக்கமானதொ

இரண்டு இணையத்தளங்கள்

நான் தினமும் வாசிக்கும் தளங்களில் புதிதாக இணைந்திருக்கும் தளங்கள் இவை . தமிழின் சுவையை எளிமையாக்கி அனைவரையும் சேரும் வண்ணம் பகிர்ந்து வருகிறார்கள். தினம் ஒரு பா  வலைத்தளம் :  தினம் ஒரு பா  நன்னூல் ,கம்பராமாயணம் , சிலப்பதிகாரம் ,அகநானூறு ,நளவெண்பா , தேவாரம்  என அதில் வரும் பாடல்களை  எளிமையான உரை நடையில் விளக்கம் கொடுக்கும் தளம் . கம்பனின் தமிழ் மீது அதிக ஈர்ப்பு ஏற்ப்பட காரணமான தளமும் கூட . தமிழ் பாடல்களில் சுவாரசியம் நிறைந்த கணக்கதிகாரம் , புதிர்   போன்றவை மிகவும் பிடித்தமானவை . எழுத்தாளர் என் சொக்கன் அவர்கள் இதனை தொகுத்து பகிருகிறார் . குறுந்தொகை குறு டுவீட்டுகளாக  குறுந்தொகைகளை எளிய உரைநடையில் பகிருவதோடு ,அதனை இன்னமும் சுருக்கி 2 வரிகளில் எளிமைப்படுத்தி விடுவார் . குறுந்தொகைகளை   வரலாற்று ஆவணமாக அணுகாமல் கவிதைகளாக  உணர வைப்பது  சிறப்பு. குறுந்தொகைகள்  எந்த காலத்துக்கும் , எவருக்கும் பொருந்தக்கூடியது . அதனை சுவை குன்றாது எளிமைப்படுத்துவது என்பது தனி சிறப்பு . இவற்றை தொகுத்து வரும் விஜய் ரெங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் . வலைத்தளம்  : குறும்பா  குறுந்தொகைகளை க

காரணங்கள்

காரணங்கள் சௌகரியமானவை  மறதி என்பது மறக்கப்படாத தருணம்  மறுக்கிறேன் என்பதை மறைக்க    தவறுகளை நியாயப்படுத்த காரணங்கள் தேடுகிறேன்  அனைவரும் செய்வதுதானென இன்னொரு காரணத்தை வைத்துக்கொண்டு !

The Way Home (2002) - கொரிய திரைப்படம்

நாம் சிறுவர் பிராயத்தில் கடந்து வரும் நபர்கள் , உறவுகளில் எம் மீது அதீத அன்பு வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அன்பை சரியாக புரிந்துகொள்வதில்லை.காலங்கடந்த பின்னரே இந்த உறவுகளின் அன்பின் ஆழம் எமக்கு தெரியவரும் . அவர்களின் இன்மையை உணரும் போது இது இன்னும் அதிகமாகும் . அவர்கள் மீதான வெறுப்பிற்கு அவர்களின் தோற்றம் , நடத்தைகள் காரணமாக இருக்கலாம் . ஆனால் அவர்கள் வைத்திருக்கும் அன்பு ஆழமானது . எமக்கு எதுவெல்லாம் சின்ன சின்ன மகிழ்ச்சியை தருமோ அதையெல்லாம் அவர்கள் மனம் கோணாது செய்வார்கள் . அந்தளவு முதியவர்கள் எம் மீது வைக்கும் அன்பு சிறிது கூட சுயநலமில்லாத அன்பு எனலாம் . ஆனால் அவற்றை நிறைவேற்ற அவர்கள் என்ன என்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்பதை நாம் உணர்வதில்லை .எமது விருப்பங்களை அவர்கள் நிறைவேற்ற நிறைவேற்ற எமக்கு விருப்பங்கள் அதிகரிக்குமே தவிர அவர்கள் நிலையை புரிந்துகொள்வதில்லை . அப்படிப்பட்ட ஒரு சிறுவன் பாட்டியுடன் தங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறான் . அந்த சிறுவனுக்கும் அவனது கிராமத்து பாட்டிக்கும் இடையேயான பாசம் , வெறுப்பு ,கலந்த உறவுப்பயணம் தான் இந்த திரைப்படம்

சென்றவார பேஸ்புக் ,டுவிட்டர் பகிர்வுகள் சில ... [ 22/04 - 30 /04 ]

சென்ற வார (22/04 -30/04) பேஸ்புக், டுவிட்டர் பகிர்வுகள் சிலவற்றின் தொகுப்பு இவை . முன்னையை பகிர்வுகளை வாசிக்க தவற விட்டிருந்தால் .. இதை அழுத்தவும்   " எங்கெங்கு காணினும் சக்தியடா ஏழு கடல் அவள் வண்ணமடா ! " எனும் முதலாவது கவிதையை சமர்ப்பித்த போது பாரதியாரின் தராசு 'எழுக புலவன்' என ஆசீர்வதித்தது ! #புதுமைப்பித்தன் எழுத்தும் அழகு தான் !  புதுமைப்பித்தன் பாரதிதாசன் பற்றி எழுதியதை படிக்க  ======================================================================== டுவிட்டர் பகிர்வுகள்  @ SSudha_ படிப்பறிவு தரும் புத்தகங்களுக்கும் பரந்த அறிவு தரும் புத்தகங்களுக்கும் இடையே வேறுபாடு பலர் உணர்வதில்லை  # Bookday @ SSudha_ கல்வி முறை குழந்தைகளை புரட்டிப்பார்த்து கற்றுக்கொண்டிருக்கிறது . #நிலை இல்லா தன்மை @ SSudha_ எந்த வரைவிலக்கணமும் அற்ற வாழ்விற்க்கு அர்த்தம் தருவது தேடல் ஒன்றே ! மனதிற்கு பிடித்த வேலை ,மூளைக்கு பிடித்த வேலை , கடமைக்கு செய்யும் வேலை மூன்றையும் நிர்வகிக்க கூடிய ஆளுமை வேண்டும். எதிரில் வந்தவர் உதிர்த்து சென்ற புனைவு இல்லா புன்னகையை

அறிந்துகொண்டவற்றில் பகிர்ந்துகொண்டவை ! தொகுப்பு (14/04 - 22/04 )

சென்ற வாரம்(15/04 - 22/04) பேஸ்புக்கிலும் டுவிட்டேரிலும் பகிர்ந்த சில முக்கிய தகவல்களை இதில் தொகுத்துள்ளேன் . என் பகிர்வுகளை தவற விடுபவர்கள் வாராவாரம் இந்த வலைப்பதிவில் வந்து பார்க்கலாம் . ======================================================================== எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் கோபிநாத் அவர்கள் மேற்கொண்ட அரிய கலந்துரையாடல் இது . தனக்கு எழுத்தின் மீது எப்படி ஆர்வம் உண்டானது என்பது பற்றியும் , தன் படைப்புகள் பற்றியும் ஆரம்பம் பற்றியும் மனம் திறக்கிறார் சுஜாதா அவர்கள் . ======================================================================== தில் படத்தில் ஒரு பாடலில் " ஹிட்லர் காலத்தில் அந்த சாலி சாப்ளின் தில் " என்று ஒரு வரி வரும் . அந்த கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என அறிய கீழே உள்ள தகவலை வாசியுங்க . சார்லி சாப்ளினை அனைவருக்கும் நகைச்சுவையாளனாக தான் அறிந்திருப்பீர்கள் . ஆனால் அவரின் சிந்தனைகள் உயரியவை . உலகை மாற்றும் ,சமாதானத்தை கொண்டுவருவதற்காக தயாரிக்கும் வீடியோக்கள் அனைத்திலும் சாப்ளினின் இந்த வார்த்தைகள் இல்லாமல் வருவதை கவனித்ததில் லை .

இந்திய அறிவியல் நாள் நோக்கம், அறிவியல் பற்றி சுஜாதா எளிமையாக ...

தளத்தில் தொடர்ந்து ஆக்கங்கள் எழுதி வருவதால் வலைப்பதிவில் இப்போது பகிர்வதில்லை . மீண்டும் வலைப்பதிவில் ஆக்கம் எழுத ஆரம்பிக்கும் போது பழைய நினைவுகள் மீள்கிறது. சரி நேரடியாக விடயத்துக்கு வருவோம் . இன்று(28/02) இந்தியாவின் தேசிய அறிவியல் நாள் . இந்த நாள் இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்க்கும் புகழைத்தேடி தந்த நாள் . இன்று தான் சேர் சி வி இராமன் அவர்கள் "ராமன் விளைவை" கண்டுபிடித்தார் .  அதன் நினைவாக தான் அறிவியல் என்பது அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டுமென்று, இந்த நாள் இந்திய தேசிய அறிவியல் நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது . ஆனால் இதை எழுத்து வடிவில் மிகவும் அழகாக பாமரர்களிடமும் கொண்டு சேர்த்தவர் குரு சுஜாதா அவர்களே . தமிழர்களை அறிவியல் பால் ஈர்த்த பெருமை அவர்களையே சாரும் . சுஜாதா அவர்கள் அறிவியல் என்றால் என்ன என்று அனைவருக்கும்  விளங்கும் வகையில் தெளிவுபடுத்தியிருப்பார் . வாசித்ததை உங்களோடு பகிர்கிறேன் . "அறிவியல் -சயன்ஸ் என்பது பரிசோதனைகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியது . சில விஷயங்களை உன்னிப்பாக பார்த்து அவற்றை பற்றி ஒரு கோட்பாடு அமைப்பது .அந்தக்கோட்பா

சைபைகூ வகை கவிதைகளின் தொகுப்பு

சைபிகூ வகை கவிதைகள் என்பது விஞ்ஞான கற்பனைகள் பற்றி ஹைக்கூ வடிவில் எழுதுவது . உதாரணமாக எதிர்கால நூற்றாண்டு கவிதைகள் எப்படி இருக்கும் /எப்படி எழுதப்படும் என கற்பனையாக எண்ணி எழுதுவது .  அந்த வகையில் எழுதிய சில சைபைகூ கவிதைகளை தொகுத்துள்ளேன் .  சைபைகூ கவிதைகளில் நல்ல தகவல்களும் இருக்க வேண்டும்/பயனுள்ளதாக இருக்கக் வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை இவை . தெரியாத விடயங்கள் இருந்தால் கூகிள் செய்து பாருங்கள் :)  சைபைகூ  இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் ; எம் தியரியும் எம்(M) தியரியும் ஒன்று தான் .  சிந்தடிக் டெலிபதியில் பேசிக்கொண்டன இரு மனங்கள் சிந்திக்காத காதல் என்பது பிழையானது  இருபத்தியிரண்டாம் நூற்றாண்டில் .. செவ்வானத்தின் வனப்பு : வாங்கிப் பொருத்திய கண்களினூடு ஊறியது  நேரத்தில் பயணித்து இறந்தகாலம் சென்றுவிட்டேன் ;  அடையாளம் தொலைத்துவிட்டேன் ; காலம் காட்டும் கடிகாரங்கள் அங்கில்லை .! பொதுவான சில கவிதைகள்  மெய்யின் மையத்தில் மையல் கொள்ளும்  இதயம் தைக்கும் தையலின் கொள்ளை #காதல் வளி ஊடுருவும் இதயத்தில் வலிகள் சுமக்கிறான் மனிதன் ,  சிறகுகள் கொண்டு வளியை கி