Skip to main content

Posts

Showing posts from July, 2011

ஆடிப்பிறப்பு : தமிழர் திருநாள்

"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை" என்று நவாலியூர் சோமசுந்தர புலவரது பாடப்புத்தகங்களில் படித்தது நினைவு. இன்று ஆடிப்பிறப்பு (17.7.2011) பனங்கட்டிகூழ் குடித்து மகிழ்ச்சியாய் கொண்டாடும் நாள் . ஆடிப்பிறப்பு தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாள் . இன்றுவரை இது யாழ்பாண தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது .புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் கடைப்பிடித்து வருவது பாராட்டத்தக்கது . தமிழ் நாட்டு மக்கள் இதை பெரும்பாலும் மறந்துவிட்டனர் . மேலைத்தேய கலாசார திணிப்பு காரணமாக இருக்கலாம் . ஆரியர்களால் திணிக்கப்பட்ட தீபாவளி ,சித்திரை வருடப்பிறப்பு போல் அல்லாது தை திருநாளும் ,ஆடிப்பிறப்பும் தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாளாகும் .  அப்படி மாதத்தின் முதல் நாட்களை கொண்டாட வேண்டிய காரணம் என்ன என்பதை பார்ப்போம் . தமிழர்களின் திருநாள் எதுவும் அறிவியலுடன் பிழைக்காது . இயற்கையோடு தொடர்புபட்டவை அவை. உலகிலேயே தமிழ் கலாசாரம் சிறந்து விளங்கியது என்கிறோம் என்றால் அதற்கான காரணம் விவசாயம் ,இயற்கையை மக்கள் மதித்தமை . தமிழர்களின் கலாசாரத்தில் கடவுள் என்ற பதத்திற்கு இடம் கொடுக்காமல்  இயற்கையையே

காமராஜர் - சுய அறிவு பிறந்த தினம்

‘ ஆ றா வது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ - ஆர் வெங்கட்ராமன்  இன்று ஐயா காமராஜரின் பிறந்தநாள். சிலருடைய பிறப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் ,சிலருடைய பிறப்பு மற்றயவர்களுக்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கும் .இதில் இரண்டுக்கும் சொந்தக்காரார் காமராஜர் எனும் பெருந்தலைவர் .இன்னொருவர் சொல்லிக்கொடுத்து வந்த அறிவுக்கும் சுயமான அறிவுக்கும் உழல வித்தியாசத்தை காமராஜரை பார்க்கும் போது உணர முடியும் . காமராஜர் பற்றி படிக்க படிக்க சுவையாக இருக்கும் .அவரை பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறேன் . சினிமா என்றால் காமராஜருக்கு பிடிக்காதாம் .அதனால் தான் நிஜமாகவே நாம் சினிமாவில் பார்த்து மட்டுமே வியக்கும் போலி நாயகர்கள் போல அல்லாது நிஜத்தில் நாயகனாக வாழ்ந்திருக்கிறார் . படிப்பு ஏறாததன் காரணமாக 6 ஆம் வகுப்பிலேயே தனது படிப்பை நிறுத்தி விட்டார் . ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத