Skip to main content

Posts

Showing posts from January, 2015

தோட்டியின் மகன் - 3 / 36 ~ [புத்தகங்கள்2015]

"கன்னடத்தில் சிவராம காரந்தும் மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையும் இயல்புவாதத்தை முழுக்கமுழுக்க ஓர் இந்தியவகை அழகியலாக உருவாக்கிய மேதைகள் என்று சொல்லலாம்." - தகழி சிவசங்கரப்பிள்ளை பற்றி எழுத்தாளர் திரு.ஜெயமோகன்  இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்து மூன்று புத்தகங்களைப் படித்துமுடிக்க இயலுமானதாக இருந்தது. வேலை, கல்வி, மேலதிக வாசிப்பு மற்றும் இதரவேலைகளுக்கும் நடுவில் இதுவொரு நல்ல எண்ணிக்கை என்றே எனக்குத் தோன்றுகிறது.  இறுதியாக, தகழி சிவசங்கரப்பிள்ளை என்பவர் எழுதிய மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'தோட்டியின் மகன்' என்கிற நாவலைப் படித்துமுடித்தேன். 1946 இல் எழுதப்பட்ட இந்த நாவலை சுந்தர ராமசாமி அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருந்தார். எப்போதோ மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு இருந்தாலும், அதன் முதற் பதிப்பை 2000ஆம் ஆண்டில்தான் நாவலாக உருக்கொடுத்து வெளியிடமுடிந்திருக்கிறது. ஒரு நல்ல இலக்கியத்தைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுவந்த பெருமை சுந்தர ராமசாமியையே சாரும்.    எந்த இலக்கியவாதிகளாலும் பேசப்படாத  தோட்டியினுடையை வாழ்க்கையை ஒரு இலக்கியமாக வடித்திருக்

கோபல்ல கிராமம் 2/36 [புத்தகங்கள்2015]

சொற்களுக்கிடையேயான இடைவெளிகள், அவை ஒவ்வொன்றும் வந்துவிழும் போக்கு, ஒலிநயம் போன்றவை  வாசிப்பிற்கு அர்த்தம் சேர்க்கப் போதுமான காரணிகளில் சில எனலாம். கி. ராஜநாராயணனின் எழுத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிற வேலையை மட்டுமே "கோபல்ல கிராமம்" என்கிற அவரது நாவல் செய்தது. மிகுதியை அவரின் கதை சொல்லும் முறையும், ஒரு கதை சொல்லியைக் கையாள்கிற லாவகமுமே மேற்கொண்டது.  கணவனோடு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருகிற பெண்ணோடு  ஆரம்பிக்கிற கதை, பிரிட்டிஷ் மகாராணியின் நேரடி ஆட்சியின்  கீழ் இந்தியா கொண்டுவரப்படும் காலம்வரை நீள்கிறது.  அப்போதைய காலங்களில் கிராமங்களில்  நிலவிய நம்பிக்கைகள், ஆட்சி முறைகள், மனித உணர்வுகள், வட்டாரா மொழிகள் என அனைத்தையும் உள்வாங்கி வைத்திருக்கிறது இந்தக் கோபல்ல கிராமம். எழுத்தில் இருக்கும் இரசனைத்தன்மையை அனுபவிக்கிற அனிச்சையான 'அந்த' நிகழ்தலை எல்லா எழுத்துகளும் நிகழ்த்துவதில்லை. சாதாரண கிராம மக்களின் அன்றாடச்  செயற்பாடுகளை  விபரிக்கிற விதம்  அழகு. தொடுக்கப்படுகிற வசனங்களின் தொடர்ச்சியான அழகியல் அழகு. ஒரு நிறைவான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.

புத்தகங்கள் : இளமையில் கொல் 1/36 [புத்தகங்கள் 2015]

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் முதலாவதாக வாசிப்புக்குட்படுத்திய நூல், சுஜாதாவின் "இளமையில் கொல்." 'இளமையில் கல்' என்கிற ஔவையின் ஆத்திசூடியின் நினைவு தோன்றலாம். சுஜாதாவிடமிருந்து ஆரம்பிப்பதில் ஒரு திருப்தியும் புத்துணர்வும் கிடைப்பதுண்டு. அதேபோல சென்ற ஆண்டின் இறுதியும் சுஜாதாவின் உள்ளம் துறந்தவனோடு நிறைவடைந்தது. ராஜி என்கிற இளைஞன் , தனது வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்களால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நண்பனுக்கு எதிராக பொய் சாட்சி சொல்லுவதற்காக கூண்டில் ஏறுகிறான். அதன் தொடர் விளைவுகளால் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இப்படியானதொரு நெருக்கடியான சூழ்நிலையில் குடும்பங்களாலும் சுற்றியிருப்பவர்களாலும் கைவிடப்பட்டு பந்தாடப்படும் ஒருவனைப் பற்றிய கதை. இது சுஜாதா அவர்களினால் 1987 ல் எழுதப்பட்டது. அப்போதும் வேகத்துக்குக் குறைவில்லை என்றாலும் சுஜாதாவின் மற்றைய நாவல்கள் அளவுக்குத் திருப்திப்படுத்தவில்லை. இருந்தாலும் சுஜாதாக்கே உரிய  ஸ்டைல் இருப்பதால் சலிப்பூட்டவில்லை.  ஒரு கதைசொல்லியை நேர்த்தியாய்ப்  படைப்பது ஒரு கலை. கி.ராஜநாராய