Skip to main content

Posts

Showing posts from December, 2012

இசையமைப்பாளர் ,பாடகர் ரமேஷ் விநாயகம்

தமிழ் இயக்குனர்களால் சரியாக இனங்காணப்படாத ,பயன்படுத்தப்படாத  மிகவும் திறமையான இசையமைப்பாளர்கள் வரிசையில்  ரமேஷ் விநாயகத்துக்கும் ஒரு முக்கிய இடம் கொடுக்கலாம் .  இசையமைப்பாளரும் பாடகருமான  ரமேஷ் விநாயகம் பற்றிய அறிமுகம் பெரும்பாலானவர்களுக்கு  நளதமயந்தி , அழகிய தீயே திரைப்படங்களுக்கு பின்னர் கிடைத்திருக்கும். அதற்கு முன்னரே வசந்தின் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே " படத்தில் ஒரேயொரு பாடலுக்கு மட்டுமே இசையமைத்து இருக்கிறார். அவர் முழுமையாக இசையமைத்த முதல் திரைப்படம் யுனிவேர்சிட்டி. அவர் பாடி  இசையமைத்த பாடல்களில் சில எப்போது கேட்டாலும்  சுகமான இசை அனுபவத்தை தந்துவிட்டே செல்லும்.   "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே"   திரைப்படத்தில் ரமேஷ் விநாயகம் இசையமைத்து பாடிய   தொட்டு தொட்டு செல்லும் பாடல் அதிகமானோரைக் கவர்ந்தது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அவர் கொடுத்த மெல்லிசைகளை கேட்க்கும் போது , அதில்  இரண்டு எப்போதுமே தென்றலில் ஈரம் கலந்து  மனதை நனைத்துவிட்டே  செல்லும் .  இன்று கேட்டாலும் நம்மை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்

நீ தானே என் பொன்வசந்தம்

உறவுகள் ,உணர்வுகள் எனும் இரண்டு விடயங்களோடு உளவியலையும் சேர்த்து விட்டால் ஏராளமான படைப்புகள் கைகளில் கிடைக்கும் . அதைத் திறம்படக்  கோர்த்து ஒரு படைப்பாக தருவதில் கைதேர்ந்தவர்கள் என இயக்குனர்  பாலுமகேந்திரா, மறைந்த ஜீவா, கௌதம் மேனன் , மணிரத்னத்தை குறிப்பிட்டு சொல்லலாம் . இந்த தனித்துவத்துக்கு காரணம்  பெண்கள்  வெறும் காட்சிப்பொருள்கள் எனும் சித்தாந்தத்தை மாற்றியது தான். உறவுகளும் உணர்வுகளும் மிகவும் மென்மையானவை என்பதனால் தானோ என்னவோ அவர்களின் காட்சியமைப்புகளும் மெதுவாகவே மனதை ஆட்கொண்டு மென்மையாக்கிவிடும். ஆனால்  இந்த மென்மை எனும் விடயம் தமிழ் சினிமாவுக்கும் அதன் பெரும்பாலான இரசிகர்களுக்கும்  இன்னமும் பழக்கப்படாத ஒன்று. காதலுக்கு பிரச்சனை தருவது புறக்காரணிகளே எனும் உளவியலுக்குள்ளும் மிக ஆழமாக உந்தப்பட்டு இருப்பவர்கள். வழமையாக பெண்களை வெறும் அசையாத பொருளாக மையத்தில் வைத்துக்கொண்டு , ஆணின் மனோநிலையில் இருந்துகொண்டே சுழலும்  காதலை உடைத்து பெண்ணின் மனநிலையையும் ஆழமாக தொட்டவர் கவுதம் எனலாம். இதையே தான் நீ தானே என் பொன் வசந்தத்திலும் செய்திருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயாவில

பாஷோ..

பாஷோ ஹைக்கூவின் கம்பர் என்று சுஜாதா சொல்லுவார். அனைத்து  உணர்வுகளையும்  தன் பக்கம் குவிக்கும் திறன் கொண்ட ஹைக்கூ கவிதைகள் அவருடையது. ஒரு வித அமைதியை தந்துவிட்டுப் போகும். பாஷோவின் புகழ்பெற்ற ஹைக்கூ கவிதைகள் இவை : *** விருந்தினர் கூட மறந்து விட்ட மலையடி கிராமம் *** பழைய கிணறு தவளை குதிக்கையில் தண்ணீரில் சப்தம் *** நிசப்தம் கற்களில் ஊறிவிட பூச்சிகளின் சப்தம் *** கோடைப் புல்வெளி அந்த மாவீரர்களின் கனவுப் பாதைகள் *** இலையுதிர் காலத்தில்  இந்தப் பாதையில் யாரும் செல்வதில்லை என்னைத் தவிர   ஒரு பொருளை மேலாகப் பார்த்தால் போதாது .கவித்துவத்துக்கு ஆழமாக அந்தப் பொருளின் உள்ளே நோக்க வேண்டும் . வருணனை மட்டும் ஒரு காட்சியின் உள் அர்த்தத்தை பிடிக்க முடியாது என்பது பாஷோவின் கூற்று. அவற்றை அவரின் ஹைக்கூக்களிலேயே கவனிக்கலாம். எழுதும் போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது. எண்ணங்களை கலைய விடாமல் நேரடியாகச் சொல்" என்றார் . எஸ் ராமகிரிஷ்ணன் அவர்களின்  " கவிதை கேட்ட நரி " என்ற இந்தப் பகிர்வையும் படித்துப் பாருங்கள்.