Skip to main content

Posts

Showing posts from May, 2013

கதை நேரம் : பாலுமகேந்திரா

மேசை மீது  ஒரு  paperweight , அதன் கீழே பறக்கும் ஒரு சில கடதாசிகள், பேனை,புல்லாங்குழல் இசை என அனைத்தும் இன்னமும் நினைவில் இருந்தால் நீங்களும் பாலுமகேந்திராவின் 'கதை நேரம் ' தொடருக்கு இரசிகர் தான். அந்தளவுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அந்தத் தொடர். ஒவ்வொரு கதாப்பத்திரங்களுக்கும் செயற்கைத் தன்மை அற்ற உணர்வை கொடுத்திருப்பார் . நான் பார்த்த போது என் வயது நுண்ணிய உணர்வுகளை எல்லாம் உற்றுநோக்கும் அளவில் இருக்கவில்லை . இயற்கையாகவே ,கதையின் போக்கிலேயே பாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலித்ததால் இன்று வரை அந்தக் கதாப்பாத்திரங்கள் கூட நினைவில் இருந்து அகலவில்லை. எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காத திரைக்கதை,இயக்கம். அது பாலுமகேந்திராவுக்கே உரிய  வித்தை. இப்போது அந்தத் தொடர்களை  மீண்டும் பார்க்கும் போது Lighting இல் இருந்து எத்தனை விடயங்களை இந்த மனுஷன் கவனித்திருக்கிறார் என வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு ஜீனியஸ். அவர் தொடக்கி வைத்த புதிய அத்தியாயத்தை யாரும் பின்பற்றவில்லை என்பது தான் கவலைக்குரியது.   மனதினில் கொஞ்சம் அமைதி நிலவும் வேளையில் 'கதை நேரம் 'த

பாடிண்ட ஈனம் நீயானு...

மலையாளப்  பாடல்கள் மீது கொஞ்சம் ஈடுபாடு உண்டு. அண்மையில் காதுகளுக்கும் கண்ணுக்கும் இனிமை தரும் ஒரு பாடல் கேட்டேன். இந்தப் பாடல் வந்தது 2012 ல். என் கண்ணில் இப்போது தான் பட்டது.  'Yuvvh" எனும் பாடல் தொகுப்பிலிருந்து   "நெஞ்சோடு சேர்த்து பாட்டொன்னு பாடாம்" என்றொரு பாடல் . மீண்டும் மீண்டும் பல தடவைகள் கேட்டுவிட்டேன்."பாடிண்ட ஈனம்(tune) நீயானு", "நீ வரு ஈ  பாட்டின் ராகமாய்", "விரியுன்ன சித்ரம் நீயானு " என்று அழகான வரிகள் கொண்டு கட்டப்பட்ட பாடல்.     பாடலின் காட்சியமைப்பின் அழகுக்கு ஒரு காரணம் Nazriya Nazim .ஒவ்வொரு அசைவுகளையும் அழகாக படம்பிடித்திருக்கிறார்கள். 'நேரம்' என்றொரு தமிழ் திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். மம்முட்டி நடித்த 'Palunku' எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் இனி பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம். பாடலுக்கு இசையமைத்தது ஸ்ரீஜித்,சச்சின். பாடலைப் பாடியது ஆலப் ராஜு.