Skip to main content

Posts

Showing posts from October, 2010

ஐங்ஸ்டெயின் கேள்விகள் ?? - சீனத்தத்துவம்

ஒருவன் தானாக தன்னை உணர்ந்து தானாக சிந்திக்க தொடங்கும் போது தான் ஒரு பூரண அறிவை எட்ட முடியும் என்பது உண்மை என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் ஐங்ஸ்டெயின் ஒரு சிறந்த உதாரணம் என்பது சிறு குழந்தைகளில் இருந்து அவர்களது பெற்றோர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும் . வெறும் புள்ளிகளிலும் , வேறு ஒருவர் சொல்லிக்கொடுத்த விடயங்களிலும்,மனப்பாடங்களிலுமே  தற்போதைய அறிவு நிர்ணயிக்கப்படுகிறது . இவை அனைத்திற்கும் விதிவிலக்கு ஐங்ஸ்டெயின்  எனலாம் .. ஐங்ஸ்டெயின் தனது ஆரம்பக்கல்வியிலேயே பல கேள்விகளையும் தேடலையும் தொடங்கியவர் . " ஏன் மாணவர்கள் எல்லோரும் பதில்  சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் , ஆசிரியரை பார்த்து  கேள்விகள் கேட்க்காமல் " என மனதிற்குள் இருத்திய முதல் கேள்வி , இறுதிவரை அவரை கேள்வி கேட்க்க வைத்தது . " He who asks a question is a fool for five minutes; he who does not ask a question remains a fool forever ." என்று ஒரு சீனத்தத்துவம் உண்டு . "யார் ஒருவன் கேள்வி கேட்க்கிறானோ அவன் ஐந்து நிமிடம் தான் முட்டாள் , கேள்வியே கேட்க்காமல் இருப்பவன் முழுநேர முட்டாள் " . ஐன்க்ச்டேயி

2017 இல் விஜயதசமி ..

பிரபஞ்சத்தின் இருண்ட பக்கம் திரும்பியிருந்த பூமியின் ஒரு பக்கம்  சூரியன்  நோக்கி திரும்ப ஒளி கசிந்தது . கசிந்த சூரிய ஒளி எல்லையில்லாத வெட்ட வெளிக்கு நீல நிறத்தை கொடுத்தது . கூடுதலான செய்மதிகளின் கண் பார்வை படாத கிராமத்தில் ஆங்காங்கே கோவில்களிலும் தேவாலயங்களிலும் பக்திப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன .  தெருவெங்கும் விழாக்கோலம் , திருவிழா சுவரொட்டிகள் அருகில் திறக்க இருக்கும் புதிய தொழில்நுட்பப கல்லூரியின் விளம்பரத்தை மறைத்துக்கொண்டிருந்தது . அன்று விஜதசாமி ஆகையால் காலையிலேயே விழித்துக்கொண்டது குட்டிநேசனின் குடும்பம் .  வானம் விடிந்துவிட்டது இன்னும் என்னம்மா தூக்கம் என தமிழ்ச்செல்வியை தட்டி எழுப்பினாள் பாக்கியம் பாட்டி . பாட்டி ! பொய் சொல்லாதீங்க பாட்டி வானம் எண்டு ஒண்ணுமே இல்லை பாட்டி . நேற்று தான் மனோபிரியா டீச்சர் சொன்னாங்க . என்று தமிழ்ச்செல்வியின் அண்ணன்  சொல்ல பாட்டி திகைத்துப்போனாள் .வானம் கடவுள் படைச்சதல்லோ? ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை . அவன் கொஞ்சம் சுட்டி , சொல்லிக்கொண்டே ஓடி விட்டான் . சத்தத்தில் திகைத்து எழும்பிய தமிழ்ச்செல்வி , கொஞ்ச நேரம் கண்ணை கசக்கிவிட்டு கட்டிலை வ

விவேகானந்தர் சொன்ன கதைகள் ....

விவேகானந்தர் சாதாரண குருமார்கள் சுவாமிமார்கள் வழியில் அல்லாது தான் கடவுள் என்ற பேச்சுக்கு அப்பால் நீங்கள் நீங்கள் தான் சிறந்தவர்கள் என கூறியவர் . மிகவும் தைரியசாலி ஆனால் ஆழ்ந்த சிந்தனை உடையவர் . அவரிடம் ரசித்த சில கதைகள் .. ஒரு முறை தனது தோழியுடன் குளக்கரையில் இருந்த போது அவள் குளத்தில் இருந்த நீரை தனது ஒரு கையால் அள்ளி எடுத்து வைத்துக்கொண்டு .... " பார்த்தீர்களா இந்த நீர் எனது கைக்குள் அடக்கமாக உள்ளது, இது தான் காதலின் அடையாளம் " என்றாள்  பொறுமையாக பார்த்து விட்டு சிந்திக்கலானார் விவேகானந்தர் ... உள்ளே இருக்கும் அந்த நீர் கையை அதே போல திறந்து இலேசாக விடும் போது எப்போதும் அதனுள்ளேயே இருக்கும் ... ஆனால் அதை அழுத்தி பிடிக்க முற்ப்படும் போது அது காணும் முதல் துவாரத்திநூடோ வெடிப்பினூடோ  வெளியேறும் . அதே போல தான் அன்பும் காதலும் , முழுமையான சுதந்திரம் அன்பிற்கு இருக்க வேண்டும் . முடிந்தவரை கொடுக்க வேண்டும் ..எதிர்பார்ப்பில்லாது .. யார் மீதாவது அன்பு செளுத்துவோராக இருந்தால்.... "அன்பை கொடுங்கள் -எதிர்பார்க்க வேண்டாம் " "அறிவுரை சொல்லலாம் - கட்டளையிட

மரணம் -வாழ்க்கையின் பின்னரான வாழ்க்கை

மரணம் எனும் பதம் இன்னமும் இறை நம்பிக்கையை ஊன்றுவதற்கு இன்னும் சாதகமாக இருக்கிறது. ஆனாலும் விஞ்ஞானிகள் சௌகரியமாக எல்லாமே இறைவன் என ஒரு முடிவு எடுத்து விட்டு அமைதியாக இருப்பதில்லை  . சிந்தனை ஆற்றலை பரிமாணத்தின் உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளவர்கள் . மரணமும் கனவும் அன்றாடம் சந்திக்கும் ,ஆனால் மனித மனங்கள்  சிந்திக்கும் ஆற்றலை பயன்படுத்தாத  விடயங்கள் . மரணத்தின் விளிம்பை தொட்டு வந்தவர்கள் பலர் உண்டு . மனித முயற்சியின்  உச்சத்தில் இருக்கும் விஞ்ஞானம் ,அறிவியல்  பரிமாணம் அடையாத கடவுள் மனங்களின் சௌகரியமும் ஆயுதமான மரணத்தை அடைய , அறிய முயற்சிகிறது . வரைவிலக்கணம் கொடுக்க முடியாத மரணம் எனும்  பதம் இலகுவாக உடலை உயிர் விட்டு பிரிகிறது எனலாம் . உடல் என்று இருப்பது உண்மை ஆனால் உயிர் ? உயிர் அல்லது மனது என்பார்கள் சிலர் .. மூளையும் செயல்ப்பாடு அற்றுப்போதல் முழுமையான மரணம் எனலாம் .ஆனால் உயிர் அப்படியே இருக்குமா ? அல்லது மேலே அலுவலகம் வைத்திருக்கும் கடவுளிடம் சென்று நரகம் ,சொர்க்கம் என செய்த வேலைகளை டேட்டா பேசில் பார்த்து கடவுள் தண்டனை கொடுப்பாரா ? சமய ரீதியாகவும் ,விஞ்ஞான ரீதியாகவும்

மதன் கார்க்கியின் எந்திரன் ... செல்லெல்லாம் சொல்லாகி ....

எந்திரன் திரைப்படத்தில்  அதன்  நோக்கையும்  குறிக்கோளையும் இழக்காத இரு விடயங்கள் உண்டு . ஒன்று சுஜாதாவின் வசனங்கள் , இன்னொருவர்  பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி. முதலாவது சுஜாதாவின் வசனங்கள் தொழில்நுட்பத்தை, அறிவியலை எளிமையான  தமிழில் அனைவரையும் சென்றடையும் விதமாக அமையும் . அவர் எழுத்துலகின்  நோக்கமும் , திரைப்படத்துக்கு வசனம் எழுதியதன் நோக்கமும் அதே ,... இரண்டாவது பாடல் ஆசிரியரும் ,அண்ணா பல்கலைக்கழக துணை விரிவுரையாளருமான  மதன் கார்க்கியிடம்   மாத்திரமே உண்டு . எந்திரன் பாடல்களை ஒரு நோக்கோடு எழுதியிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது . தமிழிலும் தொழில்நுட்பப வார்த்தைகளை கொண்டு வரமுடியும்(அழகாக ) என காட்டியுள்ளார் . எந்திரன் எனும் அறிவியல் படத்தில் பாதை மாறாது பயணித்த இரண்டாமவர் . இரும்பிலே ஒரு இருதயம் பாடலில் பூச்சியம் ஒன்றோடு ... பூவாசம் இன்றோடு .. . இந்த எளிமையான வரிகள் எந்திர மொழிகளுடன் (பூச்சியம் ஒன்று(01010101 )) காதல் கலந்ததை உணர்த்துகிறது . எளிமையான,ஆழமான  கற்பனை கவர்ந்தது .. என் நீல பல்லாலே உன்னோடு சிரிப்பேன்  என்று Bluetooth தொழில்நுட்பத்தை அழகு தமிழில் எழுதிக்காட்டியமை ஆன

காமினிக்கு புரியாத புதிர் - (சவால் சிறுகதை ) அறிவியல் விளக்கம்

வழமைக்கு மாறாக நகரின் அரச  மருத்துவமனையில் ஒரே ஆரவாரம், கூச்சல் . மருத்துவ தாதி ,மருத்துவர் என  ஒவ்வொரு மனிதர்களும் தன்னிலை மறந்து அவர் அவர் உலகத்தில் வேகமாக வேலைகளை செய்துகொண்டிருந்தனர் .நோயாளிகள்  காத்திருக்கும் இடத்தில் மேலே தொங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்ச்சியில் அவசர செய்திகள் ஒலித்த வண்ணம் இருந்தன. அவற்றுள்  மிகவும் வித்தியாசமாய் கறுப்பு ஆடையுடன்,வளர்ந்த மிடுக்கான தோற்றமுடைய  பரந்தாமன் பத்திரிக்கை முகத்தை மறைக்கும் படியாக அதனை விரித்து அதில்  இருக்கும் விளம்பர படங்களை சீரியஸாக பார்த்துக்கொண்டிருந்தார் .அவர் பெயர் ஆடையில் பொறிக்கப்பட்டிருந்தது .   அவர் காதுகளுக்குள் இன்று காலை நகரத்தில் போலீசாருக்கும்,மாபியாவின் மிகப்பெரிய கடத்தல்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி துப்பாக்கி சமரில் காயமடைந்தவர்கள் அரச மருத்துவமையில் அனுமதி என்ற செய்தி கேட்டது ஆனால் அவர் மூளை அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏற்க்கனவே அதை அறிந்தவராய் சிந்தனைக்கும் பகுத்தறிவிற்கும் வேறு எங்கேயோ வேலை கொடுத்துக்கொண்டிருந்தார் . அதற்க்கு  மேலே முதலாவது மாடியில் காயமடைந்தவர்கள் குளிரூட்டப்பட்ட தொடர் அறைகளில்

விஞ்ஞான புனை கதை ! - மகா பாரதம்

தற்போதையை உயர்ந்த ஐரோப்பிய / மேலைத்தேய நாகரிகம் ,முன்னர்  இந்து நாகரிகம் விஞ்ஞானத்திலும் மற்றும் கணிதத்திலும் சரி நாகரிகத்திலும் சரி சிறந்து விளங்கிய  போது   நாகரிகத்தில் மிகவும் பின் தங்கிய காட்டு மிராண்டிகளாக ஐயோரோப்பிய   நாகரிகத்தை சேர்ந்தவர்கள்   இருந்தார்கள்  . பூச்சியத்தை அறிமுகப்படுத்திய   ஆர்யபட்டாவின்     (கி மு 500 ஆண்டுகளில்) காலத்துக்கு முன் பட்ட தொல்பொருள் சான்றுகள் இவற்றை பறைசாற்றி நிற்கின்றன .  இந்து சமய வேத நூல்  ரிக் வேதத்தில் ( Rig Veda 10:129 )   கடவுளுக்கான பதிலை விட கடவுள் மீதான கேள்விகளே அதிகம் . உலகம் தோன்றி பல ஆண்டுகள் என்பதை ஒப்புக்கொள்ளும் மில்லியன்களில் அளவிட்ட ஒரே பழமை விஞ்ஞானம் இந்து சமய வேதங்கள்  . பிக் பாங் நடைபெற்ற சுமார் 12 -19 பில்லியன் கால ஆண்டுகளுடன் ஒத்துப்போகின்றது.  இதில் கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இவற்றில் பெரும் பாலான நிரூபணங்கள்  ஆங்கிலேயனாலேயே மீண்டு கண்டுபிடிக்கப்படுவது/வெளிக்கொண்டுவரப்படுவது தான்  .  இதற்கும் முற்ப்பட்ட காலத்தில் நடந்ததாக கூறப்படும் மகாபாரத யுத்தம் வெறும் யுத்த கதையாகவும் ,உண்மையிலேயே கடவுள் சம்மந்தப்பட்ட கதையாக

விமர்சனம் - எந்திரன்- சுஜாதா ?! அறிவியல் ?!!

திரைப்படங்கள், சிறந்த படைப்பு என்பது வெறுமனே ஒரு தனிமனிதனை மட்டும் கொண்டு நிர்மாணிக்கப்படுவதில்லை. ஆனால்  எல்லா வியாபார நோக்கர்களும் சேர்ந்தால் ஒரு படம் எப்படி வரும் என்பது எந்திரனில் தெரிகிறது . வெறும் ரஜனி என்கிற மாயையை வைத்து ஒரு சிறந்த எழுத்தாளர் கற்பனையை  மழுங்கடிக்கும் நிகழ்வு எந்திரனில் நடந்தேறியிருக்கிறது . தொழில்நுட்பம் பாவித்தமை ,சுஜாதாவின் எழுத்தை பாவித்தமைக்கு மட்டுமே பாராட்டுகள் . எந்திரனை அனைத்து திறமையுடனும் உருவாக்கும் விஞ்ஞானி ரஜனி , அதற்க்கு தேவை ஏற்ப்படும் போது உணர்வுகள் பற்றி  சொல்லி கொடுக்க ஐஸ்வர்யாராயை காதலிக்கிறது . இதனால் அதே விஞ்ஞானி ரஜனி அந்த எந்திர ரஜனியை அழிக்க ,அதே எந்திர ரஜனி வேறொரு விஞ்ஞானியால் இன்னொரு வில்லன் ரஜனியாக உருவெடுக்கிறார் . எல்லாமே ரஜனி மயம் . இது போதாதென்று அந்த ரஜனி உருவாக்கும் நூற்றுக்கணக்கான எந்திரன்களும் ரஜனி தான் . முழுவதுமாக ரஜனி தான் .அந்த கதையே ரஜனி கதை தான் . சுஜாதாவினது அல்ல . படத்தின் முதல் பாதி நேர்த்தியாக சென்றது .பல இடங்களில் சுஜாதாவின் வசனங்கள்  மின்னியது . வீதி  போலிஸ்  உன்னுடைய முகவரி என்ன என எந்திரனிடம் கேட்க்க   எனக்கு