Skip to main content

Posts

Showing posts from April, 2013

'நெஞ்சினிலே' - மூர்சிங்

உயிரே படத்தில் நெஞ்சினிலே பாடலில்  மலையாளம் கலந்து வருவது இனிமை தருவது போல, ஆரம்பத்தில் இருந்து தனித்து,பின் பிற வாத்தியங்களோடு இணைந்து  ஒலிக்கும் மோர்சிங் இசை இனிமை. இந்த மூர்சிங்(ஆபிரிக்க வாத்தியம்) இசை பற்றி சுஜாதா பகிர்ந்திருக்கிறார் . இதை ரஹ்மான் அவ்வப்போது திறமையாகப் பயன்படுத்துவார் என்கிறார். கேட்பதற்கு 'டொன்ட்டி டொன்ட்டி' என்று சுவர்ப்பூச்சி போலத்தான் ஒலிக்கும். இந்த மூர்சிங் இசையை உற்றுக் கவனித்தால் தான் லய வின்னியாசங்கள் புரியுமாம். இதனை வாசிப்பது கடினமாம். உள்ளுக்குள்ளே கொன்னக்கோல் போல அந்தத் தாளத்தை சொல்லிக்கொண்டு வரவேண்டுமாம். வாசித்த பின் கேட்டுப்பார்த்தேன். இயற்கை ஒலிகளோடு ஆரம்பமாகும் மூர்சிங் ஏதோ புரிகிறது.

தேநீர் வாசம் - மதன் கார்க்கி

வாழ்வில் ஒரு நிமிடம் நின்று இரசிக்க மறந்த, சின்னச்  சின்ன இரசனைகள் கொண்டு கட்டப்பட்ட நல்ல வரிகள்(புதிய பாடல்) கேட்டுப் பல நாட்களாகிறதே எனத் தோன்றியது. கவிதாயினி  தாமரை/ கவிஞர் மதன் கார்க்கி அவர்கள்  ஏதாவது புதிய பாடல்  வரிகள் எழுதியிருப்பார்கள்  என்று புதிதாக வந்த பாடல்களைக்  கொஞ்சம் தேடிப் பார்த்தேன். 'கூட்டம்' திரைப்படத்தில் 'இத்தனை தூரம் எப்படி வந்தேன்' என்ற  பாடலைக் கேட்க நேர்ந்தது. ஜேம்ஸ் வசந்தனின், வரிகளை மீறாத  மெல்லிசையில் புதிய வார்த்தைகள் மனதில் எளிதாக ஊடுருவியது. இசை தமிழுக்கு இடையூறாக இருந்தால், வரிகளை மீறினால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஹரிச்சரன், சுவேதா மோகன்  குரலும் உச்சரிப்பும் வரிகளுக்குத் துணை. "கொய்து வந்த பூவின் வாசம் கைது செய்த கையில் வீசும்" உறங்கும் நாசி மேலே தேநீர் வாசம் போலே மனதின் தூக்கம் போக்கும் இவளின் வாசம் உறங்கும் நாசி மேலே தேநீர் வாசம் போலே எனும் உவமை அன்றாடம் உணரும் ஒன்று தான். தேநீர் வாசம் உறங்கவிடாமல் தனக்கும் புலன்களுக்குமிடையே ஒரு ஈர்ப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும். சாதாரணமாக நம் வாழ்வில் கடந்து

'தமிழன் விருதுகள்'

புதிய தலைமுறை தொலைகாட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை, தமிழில் இப்படியொரு ஊடகம் வராதா என்ற ஏக்கத்தை  படிப்படியாக குறைத்துக்கொண்டே வருகிறது. என் எதிர்பார்ப்புகளை மீறி முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு பஞ்சமில்லை. அதை ஆரோக்கியமாக முன்வைப்பவர்களுக்குத் தான் தட்டுப்பாடு. தமிழ் ஊடகங்களில் 'புதிய தலைமுறை' ,தன் பெயருக்கு ஏற்றபடி பல படிகள் முன்னோக்கித் தான் இருக்கிறது. சக தமிழர்களைத் தூக்கிவிடும் ஊடகமாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது. ஒரு தமிழ் ஊடகம் தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் தரத்தோடு ஒத்துப்போகாமல், அந்தச் சமூகத்தையும் சேர்த்து அரவணைத்துக்கொண்டு  செல்கிறது என்பது ஆரோக்கியமான விடயம் அல்லவா. இன்று சித்திரைத் திருநாளை முன்னிட்டு புதிய தலைமுறையில் ஒளிபரப்பான 'தமிழன்  விருதுகள்' நிகழ்ச்சியை  பார்க்கக் கிடைத்தது.  இலக்கியம் ,கலை ,அறிவியல் என்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்களுக்கு, தமிழன் விருதுகளை வழங்கி கௌரவித்தது புதியதலைமுறை. ஓர் ஊடகம் கேளிக்கை  நிகழ்ச்சிகளை தவிர்த்து ,சமூகத்துக்கு பயன்தரக் கூடிய விடயங்களை முன்ன

நெடு வெண்ணிலாவே ! :குறிஞ்சி : தோழி கூற்று

"கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. " -  நெடுவெண்ணிலவினார். கரிய அடியையுடைய வேங்கை மரத்துடைய மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல் நிலவொளியில் ,பெரிய புலிக்குட்டி போலக் காணப்படுமாம். அதைப் புலின்னு நினைச்சு தன் தலைவன் அஞ்சுவான் என எண்ணுகிறாள். இது இரவில் திருட்டுத்தனமாக வரும் தன் தலைவனுக்கு  நன்மை தருவதாய் இல்லை என்கிறாள். எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள்! அவ்வளவு காதல் :) ஆனால் இங்கு 'நெடு வெண்ணிலாவே' என்று கூறுகிறாள். இயல்பாகவே  தனக்குரிய பொழுதில் தான் நிலவு எறிக்கும் .பின் ஏன் நெடு வெண்ணிலாவே என்கிறாள்?  தன் தலைவனின்  களவொழுக்கத்திற்கு இடையூறாக இருக்கும் வெண்ணிலவை அவள் விரும்பவில்லை. அது விரைவில் மறைய வேண்டுமென விரும்பினாள். அதனால் அதை நெடு வெண்ணிலா என கூறுகிறாள். இந்தச் சிறப்பால் இந்தச் செய்யுளை இயற்றியர் ' நெடுவெண்ணிலவினார்' எனப் பெயர் பெற்றார்.   உவமைகளைக்  கையாண்டிருக்கும் விதம் பிரம்மிப்பாகவும், இனிமையாகவும் இருக்கிறது. கரிய பாறையையும்,உதிர்ந்த வேங்க

சில்வியா பிளாத் effect

சுருக்கமாகக் கூறினால், மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவராக கருதப்படும் சில்வியா பிளாத், உளவியல் பிரச்சனையால் (மனப்பிறழ்வு - Bipolar disorder ) பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டவர்.சில்வியா பிளாத் பற்றி மேலதிக விபரங்கள்  அறிய ஆர்வமிருந்தால் தேடிப்  படித்துக்கொள்ளுங்கள். எழுத்தாளர்  சுஜாதா 'சில்வியா' என்றொரு நாவலிலும் சில்வியா பிளாத் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த நாவலும் இது போன்றதொரு உளவியல் பிரச்சனையோடு தொடர்புபட்டது.  ஆனால் creativity தொடர்பான ஆய்வுகளின் மூலம் அதிகமாக அறியப்படும் உளவியலாளர்  ' James  Kaufman  ' என்பவர் 'சில்வியா பிளாத் effect ' எனும் சமாச்சாரத்தை முன்வைத்திருக்கிறார். ஏனைய படைப்பாளிகளை விட பெண் கவிஞர்களே அதிகமாக இது போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள் என்கிறார்.  கூகிள்  செய்ததில் நிறையத் தகவல்கள் கிடைத்தன. ஆன் செக்ஸ்டன் ( Anne Sexton) ,  Amy Levy  (அமி லெவி ) ,  Sara Teasdale   ,  Alfonsina Storni ,  Virginia Woolf  எனத்  தற்கொலை செய்துகொண்ட பெண் கவிஞர்கள் ஏராளம்.  ஏன் ஓவியர் வான் கோ கூடத்  தற்கொலை செய்துகொண்டவர் தான்.