Skip to main content

Posts

Showing posts from October, 2013

மூடர் கூடம்

அண்மையில் வெளியான திரைப்படங்களில் இயக்குனர்  நவீன் அவர்கள் இயக்கிய 'மூடர் கூடம் '  மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முயற்சியையும் புதிது என அறிமுகப்படுத்துவது கொஞ்சம் பழசாகப்படுகிறது. Quentin Tarantino வினுடைய படங்கள் போல என்கிற அறிமுகத்துக்கு  எல்லாம் அவசியமில்லை. இந்த அறிமுகங்கள்,விளக்கங்கள் எதுவுமில்லாமல் படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள். தமிழில் ஒரு புதுமையான திரைப்படம் பார்த்த அனுபவம் கிட்டும். படத்தில் அப்படி என்ன இருக்கு ? . ஒரு ஆர்வத்தில், 'படத்தின் கதை என்ன ?' எனக் கேட்பவர்களுக்காக கதையைச் சொல்லிடலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாலு பேரும்  சேர்ந்து திருடப்போறாங்க.படத்தின் கதையே அவ்வளவுதான்.ஆனால் கதை சொல்லும் விதத்தில் புதுமை செய்திருக்கிறார் நவீன். அந்த நான்கு பேரில் இயக்குனர் நவீனும் ஒரு பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.படத்தில் வருகிற அத்தனை பேரின் நடிப்பும்,Deadpan expressions உம் பிரமாதம்.ஒவ்வொரு சிறிய கதாப்பத்திரத்துக்கும் படத்தில் முக்கியத்துவம் உண்டு. நாய்க்கு ஒரு பாடல் கூட உண்டு. Flashback எல்லாம் உண்டு. விலங்குகளை

கம்பன் கவிச்சுவை

சுவாரசியமான கம்பராமாயண பாடலொன்று. மேற்குல சூரியன் உதிக்குமா?. அதான் கம்பன். கம்பனின் கவிச்சுவையை கொஞ்சம் இரசிப்போம் என்று யூடியூபில் தேடியபோது ராகவன்(  @ RagavanG  )  அவர்கள் தொகுத்த ஒரு காணொளி கிடைத்தது.   வேறு வேறு time zone பற்றி கம்பன் சொல்லுகிறார்.வடக்கே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் குறையும், உலகம் உருண்டைன்னு எப்படி அந்தக் காலத்தில் தெரிஞ்சிருக்கும்! வால்ம ீகி ராமாயணத்தில் இல்லாமல் கம்பராமாயணத்தில் மட்டுமே உள்ள காட்சி. எத்தனையோ யோசனைகளைக் கடந்து இலங்கையில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் அனுமனுக்கு வடதுருவத்தை அடைந்ததும் திசை மாறுகிறது. கீழுள்ள பாடலும் பொருளும் இன்னொரு இணையப்பக்கத்தில்( https://groups.google.com/forum/#!msg/mintamil/-MA8upTnKKA/vrLUjNRhyaEJ )  இருந்து எடுக்கப்பட்டது.   அத்தடங் கிரியை நீங்கி, அத்தலை அடைந்த வள்ளல், உத்தரகுருவை உற்றான். ஒளியவன் கதிர்கள் ஊன்றி, செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி, வித்தகன், 'விடிந்தது!' என்னா, 'முடிந்தது, என் வேகம்!' என்றான். மேருமலையை நீங்கி அப்பால் சென்று உத்தரகுருவ