Skip to main content

Posts

Showing posts from June, 2010

மண்ணில் விண்மீன்கள் - மழலை பூக்கள்- தொலைந்த திரைப்படம்

சில பதிவுகள் காணாமல் போவது போல சில படங்களும் காணாமல் போவதுண்டு .. அதற்க்கு காரணமில்லாமல் இல்லை .. 3 இடியட்ஸ் படம் போலவே ஒரு அருமையான படைப்பு தான் அமீர்கானின் தரே சமீன் பர் (Tare zameen par ). . குப்பைகளுக்கு நடுவே கமல் போலவே சிந்தனை உடைய படைப்பாளி அமீர் கான்.. இந்த படம் தமிழ் வடிவிலும் உள்ளது . இந்த படத்திற்கு விமர்சனம் எழுத எனக்கு தகுதியே இல்லை .. தயவு செய்து பார்க்காதவர்கள் பாருங்கள் . இந்த படம் மழலைகளின் வாழ்க்கை விதையிலேயே கிள்ளி எறியப்படுவதை உணர்த்துகிறது .. கல்வி முறையையும் அன்பையும் உணர்த்துகிறது .. இலங்கை இந்திய கல்வி முறைகளுக்கு விழுந்த செருப்படி இந்த படம் .. இந்த பாடல் தமிழில் கேட்க்கும் போதுமிக மிக கவர்ந்தது .. கேளுங்கள் .. வரிகள் நான் எழுதியதால் சிலவை தவறவிட்டிருப்பேன் .. பெற்றோர்கள் சமூகம் எவ்வாறு குழந்தைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் திரைப்படம் ... பார்க்க வேண்டிய காட்ச்சியும் பாடலும் ...காட்சி மாத்திரம் வேறு (காட்ச்சிக்கு நன்றி ) லோட் ஆகினால் யூ டியூபில் சென்று பார்க்கவும் http://www.youtube.com/watch?v=opNSFkcciFg யார் இந்த பாக்கள் ? வேரில்லா பூக்கள்

இயற்கையின் தேர்வு - பரிணாமம் - விடாமுயற்ச்சி

அனைவரும் விளங்கும் படியாக எழுதியிருப்பதால் விஞ்ஞான சொற்க்கள், சிலவை எளிய விளக்கங்களுடன் எழுதி உள்ளேன் . இயற்க்கை நிகழ்வுகள் , இயற்க்கை விபத்துகள் போன்றன நம் வாழ்க்கையை தீர்மானிப்பது போல உலகில் உயிரினத்தோற்றத்தையும் உருவாக்கியது .டார்வின் போன்ற விஞ்ஞானிகள் கூர்ப்பு கொள்கைகள் சர்ச்சையை கிளப்பினாலும் சமூகத்தில் இருந்து உயிரினங்கள் மூட பழக்கவழக்கங்களை தூக்கி எறிந்தது .   100 மில்லியன் ஆண்டுகளுக்கு முதல் உலகில் உயிரினங்கள் தரையில் இருந்ததில்லை . உதாரணமாக உலகில் மீன் வகை , முலையூட்டிகள் , பறவையினங்கள், ஊர்வன வகை போன்ற உலகில் முதன் முதல் தோன்றிய உயிரின வகைகள். இவை கூட தரையில் இருந்ததில்லை . இவை அனைத்திற்கும் நீர் தான் மூல ஆதாரமாக இருந்தது . நீர் வாழ் உயிரினங்கள் தான் இவ்வுலகில் முதல் முதல் தோன்றியது . இரசாயன பிணைப்புகளே உயிரினங்களை உருவாக்கியது . சரியான பிணைப்பு வரும் வரை உயிரினங்கள் தோன்றவில்லை . ஒரு விபத்து போலவே உயிரினங்களின் தோன்றியது . ஒரேயொரு ஆதாரத்தை முன் வைக்கலாம் காரணம் உலகம்  தோன்றி பல மில்லியன் வருடங்களுக்கு பிறகே உயிரினம் தோன்றியது . சரி இனி மனிதன் எப்படி மனிதன் ஆனான் ?

ஜோதிடம் - அறிவோம் உண்மைகள் - ஒரு குட்டி கதையும்

வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை. இதை தான் சமாந்தர உலக தியரியும் கயோஸ் தியரியும் பறை சாற்றி நிற்க்கின்றன . இந்த நிகழ்வுகள் அனைத்தும் வெறும் நிகழ்வுகள் , அதாவது உயிரினங்கள் எவ்வாறு  இந்த உலகில் ஒரு விபத்தால்(எதிர்பாராத உயிர் பிணைப்புகள் ) உருவாகியதோ அதே போல தான்நிகழ்வுகளும் விபத்து போன்றது . ஏனைய உயிரினங்கள் போலவே மனிதனின் வாழ்க்கையும் , இருந்தாலும் இந்த அறிவும் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால் ஏமாற்று வேலைகள் , தனக்கேற்ப  நிகழ்வுகளை சாதகமாக்கி கொள்ளல் போன்றவற்றில் கில்லாடியாகி அதற்க்கு ஜோதிடம் என்றும் பெயர் வைத்தான். புரோகிதர்களும் ஜோதிடர்களும் சேர்ந்து அடிக்கும் கூட்டு கொள்ளை நிகழ்வுகளை எதிர்வு கூறி கட்டம் பார்த்து இடம்பெறுகிறது .  எந்த ஒரு விடயத்தையும் ஆதாரத்துடன் காட்டுவது அறிவியல் . ஜோதிடம் உண்மை என்பதற்கு ஆதாரம் என்ன ? புரோகிதனிடம் கேட்க்கும் ஜோதிடமும் ஜோதிடனிடம் கேட்பதும் வேறுபடும். ஏன் வேறுபடுகிறது ? வெறுமனே 50 % நிகழ்தகவு  வைத்து கூறப்படுகிறது . ஒரேயொரு ஆதாரம் இப்போதும் உறுதியாக இருக்கிறது . இரட்டையர்கள் பிறப்பு . இருவரும் பிறப்பது ஒரே ராசி ஒரே நட்சத்திரம