Skip to main content

வீராவின் காதல் - மணிரத்னம்


பேஸ்புக்கில் எழுதிய பதிவு
ஆண்டாளுக்கு, கண்ணன்மீது நெருக்கமான காதல் உணர்வு இருந்தது. இதை, 'Limerence' என்றும் சொல்லலாம். வேட்கை அதிகமுள்ள காதல். அவனுடைய மார்பில் அணிந்த மாலையைக் கொணர்ந்து என் மார்பில் புரட்டுங்கள் என்று கேட்பாள். அவன் மார்பு தொட்டாடிய பூக்களைத் தன் மார்புமீது பூசிக்கொள்வாள். 
இன்னும் கொஞ்சம் மோகத்தோடு, அவனின் அரையில் தவளும் ஆடையைக் கொண்டுவந்து அங்கமெங்கும் வீசுங்கள் என்பாள். அந்த வாசத்திலே தன் வாட்டம் தணியும் என்று சொல்வாள். அவள் நினைவு மற்றும் உடலெங்கும் அவனின் நினைவே சூழ்ந்திருக்கும். 
வைரமுத்து எழுதிய, "துருவி என்னைத் துளைச்சுப்புட்ட தூக்கம் இப்போ தூரமய்யா
தரைக்கு வெச்சு நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா" என்கிற வரிகளில் எல்லாம் கொஞ்சம் ஆடையின் நேசம் உண்டு. விஞ்ஞானத்தின்படி, ஆடையில் ஆடும் வியர்வை வாசனைகளை இந்தக் காதல் நெருக்கம் விரும்பும்.

எப்பொழுதும் உடலைத் தொட்டாடும் ஆடைகளென்றால் காதலுக்கு மிகப்பிடித்தம். உள்ளாடை இறுக்கங்கள்மீது முத்தம் வைக்குமளவு உம்மத்தம் வளர்க்கும். காதலியின் உள்ளாடைகளை, உள்ளங்கைக்குள் செலுத்தித் துவைப்பதையும் விரும்பும்.
பிரிவுத் துயரால் வாடும்போதும், கற்பனைகள் வளர்த்துக் காத்திருக்கும்போதும் அந்த ஆடைகள் மீதான மோகம் இன்னும் அதிகமாகும். அவளிடமிருந்து கொஞ்சம் தள்ளிநின்று கனவுகளை வளர்க்கும்போது, "உன் ஆடையின் பொன் நூலிலே என் ஜீவனும் துடிக்கும்" என்கிற கவிதை வரியின் பொருள் விளங்கும்.
இந்த நெருக்கமான காதல் உணர்வினைக் கொண்டு, ராவணன் சீதையின் ஆடைமீது கொள்ளும் மோகத்தின் அழகினை அடுத்தடுத்த காட்சிகளில் அழகாய் மொழிந்திருப்பார் மணிரத்னம்.

Comments

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...