Skip to main content

Posts

Showing posts from January, 2012

சைபைகூ வகை கவிதைகளின் தொகுப்பு

சைபிகூ வகை கவிதைகள் என்பது விஞ்ஞான கற்பனைகள் பற்றி ஹைக்கூ வடிவில் எழுதுவது . உதாரணமாக எதிர்கால நூற்றாண்டு கவிதைகள் எப்படி இருக்கும் /எப்படி எழுதப்படும் என கற்பனையாக எண்ணி எழுதுவது .  அந்த வகையில் எழுதிய சில சைபைகூ கவிதைகளை தொகுத்துள்ளேன் .  சைபைகூ கவிதைகளில் நல்ல தகவல்களும் இருக்க வேண்டும்/பயனுள்ளதாக இருக்கக் வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை இவை . தெரியாத விடயங்கள் இருந்தால் கூகிள் செய்து பாருங்கள் :)  சைபைகூ  இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் ; எம் தியரியும் எம்(M) தியரியும் ஒன்று தான் .  சிந்தடிக் டெலிபதியில் பேசிக்கொண்டன இரு மனங்கள் சிந்திக்காத காதல் என்பது பிழையானது  இருபத்தியிரண்டாம் நூற்றாண்டில் .. செவ்வானத்தின் வனப்பு : வாங்கிப் பொருத்திய கண்களினூடு ஊறியது  நேரத்தில் பயணித்து இறந்தகாலம் சென்றுவிட்டேன் ;  அடையாளம் தொலைத்துவிட்டேன் ; காலம் காட்டும் கடிகாரங்கள் அங்கில்லை .! பொதுவான சில கவிதைகள்  மெய்யின் மையத்தில் மையல் கொள்ளும்  இதயம் தைக்கும் தையலின் கொள்ளை #காதல் வளி ஊடுருவும் இதயத்தில் வலிகள் சுமக்கிறான் மனிதன் ,  சிறகுகள் கொண்டு வளியை கி