Skip to main content

Posts

Showing posts from August, 2010

மனிதன் ஏன் இரண்டு கால்களால் நடக்கிறான் ??

மனிதன் ஏன் இரண்டு கால்களால்  நடக்கிறான் ?? மனிதன் உருவாக்கிய கடவுளும் இரண்டு கால்களுடன் இருப்பதாலா ? டார்வினி கூர்ப்பு கொள்கைக்கு எதிராக  சில கேள்விகள் கேட்க்கப்பட்டு மதவாதிகளால் அலட்ச்சியப்படுத்தப்பட்டாலும் இன்றும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இறைவன் இந்த பூமியை ப்ராஜெக்ட் எடுத்து மனிதனை படைத்து அவனுக்காக எல்லாம் படைத்தது என்று பல ஆண்டுகளுக்கு முன் பகுத்தறிவு குறைவான காலத்தில் எழுதியவற்றை இன்றும் பின் பற்றி வருகிறான் . அப்படியானால் எதற்கு மனிதனுக்கு முதல்  டைனோசர்களை  படைத்தார் ? இவ்வாறான கேள்விகளை மீண்டும்  கேட்டாலும் அவற்றிற்க்கு பதில் அளிப்பதில்லை .. ஆனால் மனிதன் இரண்டு காரணங்களால் இன்று மற்றைய உயிரினங்களை விட அறிவாலும் அனைத்து விடயங்களாலும் முன்னேறி  உள்ளான். அதற்க்கு  முக்கிய காரணம் மனிதனின் சிந்தனை . இதில் முக்கிய பங்கு பகுத்தறிவு ... ஆபிரிக்காவில் 4 மிலியன் ஆண்டுகளுக்கு முதல் ஒரு வகை குரங்குகளில் (Apes ) இருந்தே கூர்ப்பின் அடிப்படையில் மனிதன் முழுமையாக ஆனான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது ஆய்வாளர்களால் ...  australopithecine என்ற இனத்தை சேர்ந்த தெற்க்கு குரங்குகளின்

எது செய்ததாலும் பிழைக்குதா? - விதி இல்லை- முர்பியின் விதி

ஒரு உதாரணத்தோடு தொடங்கலாம் .... நீங்கள் ஒரு தெருவில் வாகனத்தில் ஒரு வரிசையில் காத்திருக்கும் போது அருகில் இருக்கும் வரிசையில் வாகனங்கள்  நகரும் . அருகில் இருக்கும் வரிசைக்கு மாறினால் அந்த வரிசை நின்றி விடும் . ஏனைய வரிசைகள் யாவும் வாகனங்கள்  அசையும் . இன்னொரு உதாரணம் சொல்லலாம் . யாருக்காவது கால் பண்ணலாம் எண்டு பார்த்தா அந்த நேரம்பார்த்து பண மீதி போதாததா இருக்கும் . இல்லாவிட்டால் பட்டெரி தீர்ந்து  விடும் . முர்பியின் விதி இதை தான் சொல்க்கிறது .ஒருவிடயம் பிழையாக செல்ல வேண்டுமானால் பிழையாகவே செல்லும் . மொழி நடையில் சொன்னால் , சுதப்பினால் தொடர்ந்து சுதப்புவது பற்றி தான் அந்த விதி சொல்கிறது . இது அனைவருக்கும் நடந்திருக்கும் . உண்மையில்  மூர்பியின் விதி முன்னரே பிரபல்யம் அடையவில்லை . முர்பி எனும் அமெரிக்கா விமான படை அதிகாரி ஒருவர் இருந்தார்(இறந்த வருடம் 1990 ) . அவர் விமான பாதுகாப்பு பற்றி ஆராய்ச்சி மேட்க்கொள்ளும் போது  விமான விபத்தில் மனிதர்களின் நிலையை அறியும் பரிசோதனையும்  நடை பெற்றது .  அதற்ட்க்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார் . அதற்க்கு முர்பியையே தெரிவு செய்தனர் . அந்த பரிசோதனைய

ட்ரோஜன் குதிரைகள் - இணைய பாதுகாப்பு

ற்றோஜோன் ஹோர்செஸ் வைரஸ்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் சிலர் . ஆனால் அவை எவ்வாறு இயங்குகின்றன எப்படி தடுக்கலாம் பார்ப்போம் . இவை சாதாரண வைரஸ்கள் போல  அல்ல .   முதலில் ஒரு கதையை சொல்லி விட்டு பின்னர் தகவலை வழங்கினால் விளங்கும் என்று எண்ணுகிறேன்  .  கிரேக்கர்கள் ஒரு காலத்தில் ற்றோஜங்களிடம் மிகப்பெரிய குதிரையை கொண்டு செல்ல முயன்றனர் . அந்த மரத்தாலான பெரிய குதிரையை பார்த்தவர்கள் அதை தமது வெற்றி பரிசு என்று எண்ணி உள்ளே வரவைத்தனர் . அதன்  பின்னர் அந்த குதிரைக்குள் இருந்த கிரேக்கர்கள் படபடவென இறங்கி சண்டை இட தொடங்கினர் . இந்த கதை அனைவரும் கேட்டிருப்பீர்கள் .  அதே போல தான் இந்த ற்றிஜோன் குதிரை வைரஸ்களும் . சாதாரண வைரஸ்களை கணனியின் fire wall (பயர் வோல்) அனுமதிப்பதில்லை . அதனால் இவை வேறு ஒரு வடிவிலோ அல்லது எமக்கு தெரிந்த பழகிய ஏதாவது ஒன்றாகவோ உள்ளே நுழைய பார்க்கும் . முக்கியமாக அவை எம்மை கவரும் வகையிலே பெரும்பாலும் இருக்கும் .     இவை உள்ளே வந்தவுடன் தமது வேலையை ஆரம்பிக்கும் .  எமது கணனியில் உள்ள தகவல்களை அதன் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கும் . அவரா

மனிதனை விட திறமையான விலங்கு - புறா 1

மிகவும் நீட தூர பிரயாணத்திற்கு பின்போ ஏன் குறுகிய தூர பிரயாணத்தின் பின்பே நாம் வந்த வழியை மறந்துவிடுவோம் . ஆனால் புறாக்கள் எவளவு தூரம் பறந்தாலும் அதே இடத்தை வந்தடையுமாம். 1100 மயில்கள் எந்த வித வழிகாட்டியும் இல்லாமல் வந்தடையும் . இதற்க்கு அவற்றிற்க்கு உதவி புரிவது அவற்றின் சொண்டுகளில் காணப்படும் இரும்பு தாது பொருந்திய கட்டமைப்பே . இவை அவற்றிற்க்கு பூமியின் மின்காந்த  அலைகளை உணர  செய்கின்றன . அவற்றின் மூலம் அவை புவியியல் தன்மையை இனம் கண்டு கொள்கின்றன . புறா பறக்கும் போது அதன் திசையை மாற்றும் போது வடக்கு நோக்கியே இரும்பு மூலக்கூறுகள் திரும்பும் .எப்போதும் பூமியின் மின்காந்த அலையை திசையை நோக்கிய படியே இருக்கும் . முதன் முதலாக புறா மூலமே எகிப்தியர்களால் தகவல் பரிமாறும் சேவையும் ஆரம்பிக்கப்பட்டது . மிகவும் திறமையான புறாக்கள் ஒரு நாளைக்கு 500 மைல் தூரம் பறக்குமாம் . படத்தில் காட்டியுள்ளது போல சொண்டின் மேற்ட்பகுதியில் உள்ள இரும்பே கூடுதலான உணர்திறன் கொண்டது . European Robins, domestic chickens, and Silvereyes  போன்ற பறவைகளுக்கும் இவ்வாறான அலகே உள்ளது .  நன்றி :-  Accor