Skip to main content

Posts

Showing posts from August, 2016

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ

வடமாகாணத்தின் நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணம்

தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான இலங்கையின் வடக்கு மாகாணம் புவியியல், அரசியல், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. அத்தோடு நீண்டகால அபிவிருத்தி, ஆண்டாண்டு காலமாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும்  தமிழ் மக்களின் எதிர்காலம், கட்டமைப்பு ஆகியவை மிகப்பெரும் அபாயத்தையும் சந்தித்து நிற்கிறது.  இவற்றைக் கட்டியெழுப்பவும் தகர்த்து எறியவும்  வேண்டிய கடப்பாடு உலகெங்கிலும் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொருளாதார வல்லுனர்கள், தனியார் நிறுவனங்கள், சுயதொழிலில் ஈடுபடுவோர், சமூக நலன்விரும்பிகள், பிரதேச மக்கள், புலம்பெயர் தமிழர்கள்  எல்லோரையும் சந்தித்துப் பேசியதில் ஒரு பிரதான குறைபாடு ஒன்றைக் காணமுடிந்தது. இவர்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைப்பதற்குரிய கட்டமைப்புகள் இன்னமும் சரியாக உருவாக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் தன்னிச்சையாகச்  சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தத் தனிமனித முயற்சிகள் ஒன்றாகச் சேரும்பொழுதே  பலம்பொருந்திய ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும். அப்பொ