Skip to main content

உகரச்சுட்டும்(முன்மைச்சுட்டு )ஈழத்தமிழும்

மொழிஞாயிறு என்றழைக்கப்படும்  ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய வேர்ச்சொற் கட்டுரைகள் படிக்க நேரிட்டது .   அதில் உ என்னும்  வேர்ச்சொல் பகுதியில் உகரச்சுட்டு பற்றி பகிர்ந்திருப்பார் . 






உகரம்  ஒலிக்கும் போது இதழ் குவிந்து முன்னோக்குவதால் உகரச்சுட்டும், பேசுபவரின் முன்னிடத்தை குறிக்கும் . 

ஒருவரை நோக்கி சொல்கிறோம் என்றால் அவர் முன்னிலையில் (மிக நெருக்கமாக ) உகரச்சுட்டு பயன்படுத்தப்படும் .

உதாரணமாக : உதுக்காண்
                               உந்தா
                               உந்த
                               உவன்
                               உது
                               உவை


உந்த ( இந்த ) சொற்கள் ஈழத்தமிழ் பேச்சுவழக்கில் இன்றும் உள்ள சொற்கள் . இந்த உகரச்சுட்டு யாழ்ப்பாணத்தில் உண்டு தமிழ் நாட்டில் வழக்கற்றதாகி விட்டது என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கார் தேவநேயப் பாவணார் .

ஈழத்தமிழில் இவற்றின் பயன்பாடுகள் :

உதுக்காண் ( என் முன் பார் ) இருக்கும் நல்லா தேடிப்  பார் .

உவனிட்ட(முன் நிற்ப்பவர் ) எத்தனையோ  தடவை சொல்லீட்டன் 

சும்மா உவ்விடமா (உ + இடம் ) வந்தனான் . அப்பிடியே உங்களையும் பாத்திட்டு போகலாம் எண்டு வந்தன் . 

என அன்றாட வழக்கில் இந்த உகரச்சுட்டு உண்டு . இலங்கை தமிழின் பழமைக்கு இதுவொரு எடுத்துக்காட்டு என சொல்லலாம் . 

காரணம் இந்த உகர சொற்கள் சில பல்லாயிரம் வருடங்கள் பழமையான குமரி நாட்டில் (லெமூரியா கண்டம் ) வழக்கில் இருந்ததாக சொல்கிறார் தேவநேயப்பாவனார் . அவற்றில் சில வழக்கில் இல்லை என்கிறார் .  




Comments

உகரச்சுட்டு பதிவு அழகு! வாழ்த்துக்கள்!:)

ஈழத் தமிழில் இந்த “உவன், உவள்” புழக்கம் நிறைய உண்டு! நாம தான் உவனைத் தொலைச்சிட்டோம்:(

ஈழத் தமிழ்: அட பெடியன்களா, “அந்த” வடிவான பெட்டைய, இந்த ஒளிஞ்சான் “உவனுக்கு”ப் பிடிச்சிருக்குதாம்:)

சென்னைத் தமிழில்: டேய் மச்சி, அந்த பிகரை, இதோ ஒளிஞ்சிக்கிட்டு இருக்கானே, இவன் (உவன்) ரூட் வுடறான்:)
----------------------

ஆங்கிலத்தில் பார்த்தீங்க-ன்னா ஒருத்தன் தொலைவில் இருந்தாலும் He தான்! கிட்டக்க இருந்தாலும் He தான்!
தமிழில் இடம் பொருள் ஏவல் உண்டு:)

எடுத்துக்காட்டாச் சொல்லட்டுமா?
நானும் TPKDஉம் பெங்களூருவில் நேரில் பேசிக் கொள்ளும் போது,

* ராகவன் அதே டேபிளில் கிட்டக்கவே உணவு உண்டால்
= “இவன்” புட்டு விரும்பிச் சாப்புடுவான்”
* ராகவன் அப்போ சென்னையில் இருந்தா
= “அவன்” புட்டு விரும்பிச் சாப்பிடுவான்!

* ராகவன் கிட்டக்க தான் இருக்காக, ஆனா டேபிளில் இல்ல, எனக்கும் TPKD க்கும் chicken vindaloo வாங்கியாற counter-க்கு போயிருக்காங்க-ன்னா
= “உவன்” புட்டு விரும்பிச் சாப்பிடுவான்
= உவனே பில்லும் கட்டீருவான்:))

உவன் = அண்மையில் சேய்மை! அருகில் தொலைவு:)
அதாச்சும்…
1st Person = தன்மை
2nd Person = முன்னிலை
3rd Person = படர்க்கை
உவன் = படர்க்கை போல் வரும் முன்னிலைச் சுட்டு!

பொதுவா
இ = முன்னிலை
அ = படர்க்கை
உ = நடுவில் வருவது!

இவன், இவள், இது, இவை
அவன், அவள், அது, அவை
உவன், உவள், உது, உவை
—-

மலையாளத்திலும் உவன் உண்டு-ன்னு நினைக்கிறேன்; அறிந்தவர், அறியத் தாருங்கள்
ஆயாளு அறியும், இவனும் உவனும் அறிகில்லா!

அ=சேய்மை, இ=அண்மை
இது ஆ, ஈ -ன்னு மலையாளத்தில் நீளும் = ஆயாளு, ஈயாளு
தமிழில் கூட நீளும்
அங்கு=ஆங்கு, இங்கு=ஈங்கு!

ஒடனே கேப்பீங்களே, உங்கு=ஊங்கு இருக்கான்னு?:))
----------

உங்கும் இருக்கு!
ஊங்கும் இருக்கு:)

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் “ஊங்கு இல்லை கேடு!
—-

அதே போலத் தான்
அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம்

ஊழையும் “உப்பக்கம்” காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்!
—-

இடக் குறியீடுகளுக்கு “அ”/ “இ” போடுவது போலவே, “உ”-வும் போடலாம்
உங்ஙனம், உவ்விடம், உங்கு, உப்பக்கம்…
ஆகா நண்பா . இவ்வளவு நீள பின்னூட்டமா :-)

நீங்க இன்னும் அழகா விபரிச்சு இருக்கீங்க :)

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ