Skip to main content

அழிவிலிருந்து ஆக்கம் 01 - ஊடகங்கள்




ஒரு சமூகமோ, அமைப்போ அல்லது ஒரு படைப்போ திருத்தங்களுக்கு உள்ளாவது என்பது வேறு ,அழிவுக்குள்ளான  ஒரு சமூகத்தை புதிதாக கட்டியெழுப்புவது  என்பது வேறு .

உதாரணமாக சொல்லப்போனால் நாம் செய்த விடயங்களில் தவறு இருந்தால் அதை திருத்தப்பார்ப்போம். சில விடயங்களை  திருத்த முடியாமலும் ,தவறுகளை சரிவரக் கண்டுகொள்ள  முடியாமலும் போகும் போது அதனை முற்றாக அழித்துவிட்டு மீண்டும் செய்ய முயல்வோம் . இது ஒருவித சௌகரியத்தை எமக்கு கொடுக்கும். புதிய அணுகுமுறைகளையும் பிரயோகப்படுத்துவது இலகு.

பொருளாதாரத்தில் இதை Creative destruction என்று சொல்வார்கள் . ஆனால் இந்த பதிவு பொருளாதாரம் பற்றியது அல்ல. மனிதர்களின் நாகரிகமும் கலாச்சாரமும் மனித சிந்தனைகளின் வளர்ச்சி பற்றியதும்.  

திருத்தங்களுக்கு உட்படுத்துவதை விட ,முழுதாக அழிவடைந்த ஒன்றை மீண்டும் கட்டியெழுப்பும் போது அது முற்றிலும் புதிய வடிவமாக உருவெடுக்கக் கூடும். மீண்டும் புதிதாய் உருவாக்கப்படும் போது அதில் நல்ல விடயங்களும்  இருக்கக்கூடும் அல்லது மக்களை பின்தங்கிய நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு அடிமைபப்டுத்தும் விடயங்களும் தீய விடயங்களும் இருக்கக் கூடும்.

சில சமூகங்களில் இந்த அழிவுகள் தானாகவே நிகழ்ந்து விடும். அதற்குப்  போர் ,இயற்கைச் சீற்றங்கள் என்று பல காரணங்கள் சொல்லலாம். அதன் பின்னர் மீண்டும் அந்த சமூகம் கட்டியெழுப்பப்படும் போது அதில் மிக முக்கிய பங்கு வகிப்போர் அந்த சமூகத்தின் புத்திஜீவுகளும் கற்றறிந்தோர் எனப்படுவோரும் ஊடகங்களுமே.

இதில் பாமரர்  , சிறுவர்கள் உள்ளடங்கலாக  அனைவரையும்   எளிதில் அடையக்கூடியவை ஊடகங்கள்.  ஊடகங்கள் சமூகத்தில்  முக்கிய பங்களிப்பு செய்வதால் ,ஊடகவியலாளர்களுக்கு மிகப்பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது . இதை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை . ஆனால் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

ஒரு சில ஊடகங்கள் மக்கள் எளிதில் அடிமையாகி விடக்கூடிய விடயங்களையே மீண்டும் மீண்டும் ஊட்டி வளர்க்கின்றன. மக்களை அடியமையாக்கும் எந்த விடயத்தையும் மீண்டும்  வளர்ப்பது ஆபத்தானது. இது அழிந்து மீண்டும் புத்துயிர்  பெறும் சமூகத்தின் சிந்தனையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒரு சமூகத்தை குறிப்பிட்ட சில விடயங்களுக்கு(உதாரணமாக சினிமா நடிகர்கள் , கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளலாம்) அடிமைப்படுத்தி வைத்திருக்கும் போது அவர்களின் சிந்தனையும்,சுய அறிவும் எந்த நிலைக்கு செல்லுமென்பதற்கு  உதாரணமாக சில நாடுகள் இருக்கின்றன .  

ஒருவரின் இன்னொன்றின் மீது வெறுப்பையும்  காழ்ப்புணர்ச்சியையும்  உண்டாக்கி அதன் மூலம் ஒரு போட்டியை உண்டாக்கி தொடர்ந்து நிலைத்திருப்பதே தற்போது பலரும் கையாளும் உத்தி. முக்கியமாக சில கருத்துகளும்  பயனுள்ள  விடயங்களும் நிகழ்ச்சிகளும் இருக்கும் போது அதே பொழுதுபோக்கு உத்தியை மீண்டும் மீண்டும் 24 மணித்தியாலமும் கையாளும் உத்தியை எப்போது இந்த தமிழ் ஊடகங்கள் கைவிடப்போகின்றன .?

ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தாம் சமூகத்தின் முதுகெலும்பு என்பதை உணராதவரை எத்தனை புதிய சிந்தனைகளை புத்திஜீவிகள் சமூகத்தில் தோற்றுவித்தாலும்  அவையனைத்தும் இல்லாது போய்விடும் . காரணம் ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் மக்களின் தரத்தினை தீர்மானிக்கும் சக்திகள்.

இதில் மக்களின் தரம் என்பது அவர்களின் பொருளாதார தரம் பற்றியதல்ல . சிந்தை ,தூரநோக்கு பார்வை , சுய அறிவு , எதையும் ஒப்பிட்டு பகுத்தறியும் தன்மை என அவர்களின் நாகரிகம் ,கலாச்சார வளர்ச்சி போன்ற மிகப்பெரிய வட்டத்தை உள்ளடக்கியது. 

Comments

வலைச்சரம் மூலமாக தங்களது வலைப்பூவினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...