Skip to main content

இசையமைப்பாளர் ,பாடகர் ரமேஷ் விநாயகம்




தமிழ் இயக்குனர்களால் சரியாக இனங்காணப்படாத ,பயன்படுத்தப்படாத  மிகவும் திறமையான இசையமைப்பாளர்கள் வரிசையில்  ரமேஷ் விநாயகத்துக்கும் ஒரு முக்கிய இடம் கொடுக்கலாம் . 

இசையமைப்பாளரும் பாடகருமான  ரமேஷ் விநாயகம் பற்றிய அறிமுகம் பெரும்பாலானவர்களுக்கு  நளதமயந்தி , அழகிய தீயே திரைப்படங்களுக்கு பின்னர் கிடைத்திருக்கும்.


அதற்கு முன்னரே வசந்தின் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே " படத்தில் ஒரேயொரு பாடலுக்கு மட்டுமே இசையமைத்து இருக்கிறார். அவர் முழுமையாக இசையமைத்த முதல் திரைப்படம் யுனிவேர்சிட்டி.

அவர் பாடி  இசையமைத்த பாடல்களில் சில எப்போது கேட்டாலும்  சுகமான இசை அனுபவத்தை தந்துவிட்டே செல்லும். 

 "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே"   திரைப்படத்தில் ரமேஷ் விநாயகம் இசையமைத்து பாடிய  தொட்டு தொட்டு செல்லும் பாடல் அதிகமானோரைக் கவர்ந்தது.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அவர் கொடுத்த மெல்லிசைகளை கேட்க்கும் போது , அதில்  இரண்டு எப்போதுமே தென்றலில் ஈரம் கலந்து  மனதை நனைத்துவிட்டே  செல்லும் . 

இன்று கேட்டாலும் நம்மை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்த பாடல்கலென அவரே பாடி இசையமைத்த   "விழிகளின் அருகினில் வானம்"  , " என்ன இது என்ன இது " வை சொல்லலாம் .

விழிகளின் அருகினில் வானம் எப்படி  உள் அழைத்துச் சென்று ஒரு அதிசய அனுபவத்தை வழங்குகிறதோ அதே போல "என்ன இது என்ன இது" பாடலும்  ஒரு இனிமையான காதல் அனுபவத்தை நெஞ்சமெங்கும்  படரச் செய்யும். 

அழகான ஹம்மிங்குடன் ஆரம்பித்து மெல்ல மெல்ல மனதை ஆட்கொள்ளும் மெல்லிசை. உறவுகளுக்கிடையேயான உணர்வுகளின் மென்மையை இசையே மெதுவாய் உணர்த்திவிடும். திரைப்படத்தோடு சேர்ந்து கேட்க்கும் போது இதை உணரலாம்.

இனி எந்த இயக்குனர்கள்  அவரை சரியாக பயன்படுத்துவார்கள்  என்பதை உறுதியாக சொல்லமுடியவில்லை . ராதாமோகன் , வசந்த் போன்ற இயக்குனர்கள் கையாண்டால் நம் காதுகளுக்கு  இன்னும் மெல்லிசைகள் கிடைக்கும் .

அவரின் குரலையும் தவிர்த்துவிட்டு பேசிவிட முடியாது . தொட்டி ஜெயா படத்தில் "யாரிடமும் தோன்றவில்லை" என்ற பாடலை தன் குரலால் இன்னும் மெருகூட்டியவர்.

கமகங்கள் தொடர்பிலும் ஒரு ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார் ரமேஷ் விநாயகம் . அது பற்றி வாசிக்க : Times Of India

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...