Skip to main content

The Way Home (2002) - கொரிய திரைப்படம்



நாம் சிறுவர் பிராயத்தில் கடந்து வரும் நபர்கள் , உறவுகளில் எம் மீது அதீத அன்பு வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அன்பை சரியாக புரிந்துகொள்வதில்லை.காலங்கடந்த பின்னரே இந்த உறவுகளின் அன்பின் ஆழம் எமக்கு தெரியவரும் . அவர்களின் இன்மையை உணரும் போது இது இன்னும் அதிகமாகும் .

அவர்கள் மீதான வெறுப்பிற்கு அவர்களின் தோற்றம் , நடத்தைகள் காரணமாக இருக்கலாம் . ஆனால் அவர்கள் வைத்திருக்கும் அன்பு ஆழமானது . எமக்கு எதுவெல்லாம் சின்ன சின்ன மகிழ்ச்சியை தருமோ அதையெல்லாம் அவர்கள் மனம் கோணாது செய்வார்கள் . அந்தளவு முதியவர்கள் எம் மீது வைக்கும் அன்பு சிறிது கூட சுயநலமில்லாத அன்பு எனலாம் .

ஆனால் அவற்றை நிறைவேற்ற அவர்கள் என்ன என்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்பதை நாம் உணர்வதில்லை .எமது விருப்பங்களை அவர்கள் நிறைவேற்ற நிறைவேற்ற எமக்கு விருப்பங்கள் அதிகரிக்குமே தவிர அவர்கள் நிலையை புரிந்துகொள்வதில்லை .


அப்படிப்பட்ட ஒரு சிறுவன் பாட்டியுடன் தங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறான் . அந்த சிறுவனுக்கும் அவனது கிராமத்து பாட்டிக்கும் இடையேயான பாசம் , வெறுப்பு ,கலந்த உறவுப்பயணம் தான் இந்த திரைப்படம் .

முதியவர்கள் இளம் சமுதாயம் மீது செலுத்தும் எல்லையற்ற அன்பை, சற்றும் தொய்வில்லாத நேர்த்தியான திரைக்கதையினூடு சொல்லியிருக்கிறார் அந்த பெண் இயக்குனர் .

தென் கொரியாவின் தலை நகர் சியோலில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம் நோக்கி ஒரு தாயும் மகனும் பயணம் செய்வதோடு கதை ஆரம்பிக்கிறது . அமைதியற்ற ,குழப்படியான சிறுவன் என்பது அவன் நடத்தைகளை வைத்தே சொல்லப்படுகிறது . இருவரும் ஒரு கிராமத்தில் உச்சியில் தனியான இருக்கும் ஒரு வீட்டை அடைகின்றனர் .

அங்கிருக்கும் வயதான பாட்டியிடம் , தான் வேலை  தேடிக்கொண்டிருப்பதாகவும் அதுவரை தன்னுடைய பிள்ளையை பார்த்துக்கொள்ளும் படியும் சொல்லிவிட்டு தலைநகர் சியோலிட்க்கு செல்கிறார் தாய் .

முதல் சந்திப்பிலேயே 'என்னை தொடாதே அழுக்காக இருக்கிறாய்' என்கிறான் சிறுவன் . அவனுக்கு அந்த பாட்டி மீது விருப்பமில்லை . படிப்படியாக அவரது அன்பை எப்படி உணருகிறான் என்பதை நேர்த்தியான காட்சி அமைப்புகள் ,சம்பவங்களை வைத்தி சொல்லியிருக்கிறார் இயக்குனர் . மிகுதியை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .


இதில் வரும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் எம்மை ஈர்த்து விடுவது தான் இயக்குனரின் வெற்றி. அதுவும் ஒவ்வொரு காட்சியும் எம்மை பிரதிபலிப்பதாக திரைக்கதையின் உதவியோடு கொண்டு செல்வது தான் படத்தின் வெற்றி .

இடையிடையே சிறுவனிடையே இருக்கும் ஈகோவையும் நகைச்சுவையான காட்சி அமைப்புகள் மூலம் காட்டியிருப்பார் இயக்குனர் .

எந்தவித ஆர்ப்பாட்டமும் , அழுது புரளும் காட்சிகளும் இல்லை . ஆனாலும் மனதை மென்மையாக வருடவும் செய்யும் , ஓங்கி அடித்தால் போல இறுக்கமாக்கவும் செய்யும் காட்சிகள் .

இப்போதிருக்கும் தலைமுறை இடைவெளியில் இது போன்ற படங்களை அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும் .

இந்த படத்தை ஆங்கில உப தலைப்போடு இங்கு பார்க்கலாம் ...

Comments

பாலா said…
இந்த படத்தை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அருமையான பகிர்வு

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ