Skip to main content

ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தல் ..



சமூக நிகழ்வுகள் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தி (எல்லாமே தொடர்புடையுடையவை ) அவை உளவியல் ரீதியில் சமூகத்தை எப்படி பாதிப்படைய செய்யும் , மாற்றத்தை ஏற்படுத்தும் , அதன் பின்னர் அந்த சமூகத்தை எப்படி கொண்டு செல்லுமென தொலைநோக்கில் எழுதப்படுவதோ பேசப்படுவதோ கிடையாது.

சமுதாயமும் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தாத சமுதாயமாகவே வளர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் சில நிகழ்வுகளை ஆரம்பித்தில் நாம் தடுக்காத போது அவை வளர்ந்து மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் அபாயமுடையன .

Domino effect , Snowball effect உம் இதைத்தான் சொல்கின்றன . Butterfly effect எல்லோரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் snowball effect , domino effect பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

இவை மூன்றையும் ஒரு சங்கிலித்தொடர் விளைவுகள்னு பொதுவா ஒரு வகைக்குள்  சேர்த்திடலாம். ஒன்றோடொன்று தொடர்புடையன . மேலதிக விபரம் தேவைப்படுவோர் கூகிள் செய்து பாருங்கள் . விபரங்கள் தேவைப்படுமேயானால் அடுத்த  பதிவில் விளங்கப்படுத்துகிறேன்.

வண்ணத்துப் பூச்சி விளைவு என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம் கொடுத்திடலாம் என எண்ணுகிறேன் .

பிரேசிலில் பறந்துகொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் பட படப்பில் ஏற்ப்படும் சல்சலப்புக்கும் டெக்சாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்புண்டு என்று  Edward lorenz என்பவர் கணித ,வானியல் முறைப்படி நிறுவிக்காட்டினார்.

மேலோட்டமாக பார்த்தால் இது பயித்தியக்காரத்தனமாக தோன்றலாம் . ஆனால் அன்றாடம் நாம் இதை எதிர்கொள்கிறோம். இதுபோலவே சமூக நிகழ்வுகளும் சமூக வளர்ச்சியை தீர்மானிக்கிறது.

இதில் உளவியல் மாற்றங்கள் , சிந்தனை வளர்ச்சியை பின்னோக்கித் தள்ள பல முனைப்புகளை( சின்ன சின்ன  நிகழ்வுகளை )நம்மை அறியாமலேயே நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம் .

உளவியல் தாக்கம் என்று ஒன்றை எடுக்கும் போது உதாரணமாக நாம் விளையாட்டாக பார்க்கும் கிரிக்கெட் என்போம் . ஆனால் இதிலுள்ள நுணுக்கத்தை சுஜாதா அழகா சொல்வார். நம்மிடமிடம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் ஒரே விடயம் கிரிக்கெட் என்று. எவ்வளவு பெரிய உண்மை இது. இது ஒரு மறைமுக விளைவு. விளையாட்டு  ,உளவியல் ,அரசியல் இதுமூன்றும் இப்போதையை உலகில் மிகவும் தொடர்புடையன . நாடுகளுக்கிடையே நிகழ்ந்த 2012 ஒலிம்பிக் சர்ச்சைகளை கவனித்தவர்களுக்கு தெரியும்.

ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தி பார்க்கும் திறன் சாதாரண  மக்களிடம் இல்லை. அதனை வளர்க்க வேண்டியது சின்ன வாயசைப்பில் கையசைப்பில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஊடகங்களே !

இந்த திறன் தொலைநோக்கு பார்வையை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை . சமூகத்தின் தொலைநோக்கு பார்வை வளர்க்கப்படும் போதே அந்த சமுதாயம் உயர்ந்த நாகரிகமும் அபிவிருத்தியும் உடைய சமுதாயமாகும்.

தொலைநோக்கு சிந்தனையில் நம்  தமிழ் சமூகம் வளர பல சிறகுகளின் படபடப்புகள் நிகழ வேண்டும். அதே நேரம் அதற்கு இணையாக அதனை பின்னோக்கித் தள்ள தொலைநோக்கற்ற நிகழ்வுகளும் நடந்தவண்ணமே இருக்கும் . அவற்றையும் கடந்து வரவேண்டும்.

Comments

யோசிக்க வைக்க பதிவு... நன்றி...

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...