Skip to main content

முடிவுகளைத் திருப்திப்படுத்தல் - சிறுபேச்சு 4

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஏராளமான முடிவுகளை எடுக்கிறோம். இன்றைக்கு என்ன கலர் ஆடை போடுவது, என்ன உணவை எடுத்துச்செல்வது, எந்தப் பக்கத்துக்கு காலுறையினை முதலில் போடுவது என ஏராளமான முடிவுகளை நம் மூளை எடுக்கும். சில முடிவுகள் தன்னிச்சையாக நிகழ்பவை. ஒரு பொருளை வாங்கும்போது மிகச்சிறந்தது எதுவென்று தேடுவதில்லை. காரணம், நம் முன்னே ஏராளாமான தெரிவுகள் இப்போது வந்திருக்கிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்டளவு முடிவுகளைத்தான் நம் மூளை எடுக்கிறது என்பது நியூரோலோஜிஸ்ட்களின் கருத்து. அதிலும் குறிப்பாக,  ஒரு விடயத்தை அதிமுக்கியமானது என தீர்மானிப்பதில்லையாம். 





1978ல் சைமன்(Herbert A.Simon) எனும் பொருளாதார வல்லுனருக்கு நோபல் பரிசு கிடைத்தது. நிறுவனங்களுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களையும், அவை எடுக்கப்படும் முறைமையினையும் ஆராய்ந்தவர்.  நாம் எல்லோரும் அவர் அறிமுகப்படுத்திய 'திருப்திப்படுதல்' என்கிற கருத்தை பின்பற்றுகிறவர்கள். ஒரு தீர்மானம் எடுக்கிறபோது நாம் எல்லோரும் பின்பற்றுகிற சிந்தனைச் செயற்பாட்டுக்கு அவர் ஒரு சுருக்கமான சொல்லைத் தேடினார். ஒரு மிகச் சிறந்த தெரிவினை எடுக்கமுடியாது போகும்போது நாம் இருப்பதிலேயே 'பரவாயில்லை' என்கிற முடிவை எடுப்போம். அதாவது ஒரு பொருளைத் தேர்வு செய்யும்போது இது இருக்கிறதிலேயே பரவாயில்லை ரகம் என்று தீர்மானித்துக்கொள்வோம்.

இருப்பதை, கிடைத்ததை  வைத்து திருப்திப்படுகிறவர்கள்தான் மகிழ்ச்சியானவர்கள் என்று மேற்கொள்ளப்பட்ட  சமூக உளவியல் ஆய்வுகள் சொல்கிறது. ஆனால் அதை நம் வாழ்வின் மிக முக்கியமான தீர்மானங்களில் செயற்படுத்த முடியுமா ? 

2015ம் ஆண்டிற்கான  பணக்காரர்கள் பட்டியலினை Forbes சஞ்சிகை வெளியிட்டது.  அதில் Warren buffet மூன்றாம் இடத்தினைப் பிடித்திருந்தார்.  1958ல் வாங்கிய அதே வீட்டில்தான் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். இருப்பதை வைத்து திருப்திகொள்ளவேண்டும் என்பது அவரது கருத்து. கிழமை நாட்களில் நியூயோர்க் நகரத்துக்குச் செல்லும்போது காலை உணவுக்காக  ஒரியோ குக்கீஸ் மற்றும் ஒரு கலன் பாலையும் கொண்டுசெல்வது வழக்கம் என ஒரு வானொலிப்பேட்டியின்போது  சொன்னார். ஆனால் முதலிடுதல் என்று வரும்போது அவரின் கொள்கைகள் வேறுவிதமானது. மிகச் சிறந்த முடிவுகளையே அவர் எடுத்திருக்கிறார்.  அவரைப் பொறுத்தவரை முக்கியத்துவம் பெறாத விடயங்களில் நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ள மட்டுமே நாம் திருப்தி அடையவேண்டும் என்பதுதான்  அவரது கருத்து. 

Warren buffet பற்றி ஒரு நல்ல ஆக்கம் . http://www.wsj.com/articles/lessons-from-50-years-of-buffett-1430527313

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ