Skip to main content

முடிவுகளைத் திருப்திப்படுத்தல் - சிறுபேச்சு 4

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஏராளமான முடிவுகளை எடுக்கிறோம். இன்றைக்கு என்ன கலர் ஆடை போடுவது, என்ன உணவை எடுத்துச்செல்வது, எந்தப் பக்கத்துக்கு காலுறையினை முதலில் போடுவது என ஏராளமான முடிவுகளை நம் மூளை எடுக்கும். சில முடிவுகள் தன்னிச்சையாக நிகழ்பவை. ஒரு பொருளை வாங்கும்போது மிகச்சிறந்தது எதுவென்று தேடுவதில்லை. காரணம், நம் முன்னே ஏராளாமான தெரிவுகள் இப்போது வந்திருக்கிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்டளவு முடிவுகளைத்தான் நம் மூளை எடுக்கிறது என்பது நியூரோலோஜிஸ்ட்களின் கருத்து. அதிலும் குறிப்பாக,  ஒரு விடயத்தை அதிமுக்கியமானது என தீர்மானிப்பதில்லையாம். 





1978ல் சைமன்(Herbert A.Simon) எனும் பொருளாதார வல்லுனருக்கு நோபல் பரிசு கிடைத்தது. நிறுவனங்களுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களையும், அவை எடுக்கப்படும் முறைமையினையும் ஆராய்ந்தவர்.  நாம் எல்லோரும் அவர் அறிமுகப்படுத்திய 'திருப்திப்படுதல்' என்கிற கருத்தை பின்பற்றுகிறவர்கள். ஒரு தீர்மானம் எடுக்கிறபோது நாம் எல்லோரும் பின்பற்றுகிற சிந்தனைச் செயற்பாட்டுக்கு அவர் ஒரு சுருக்கமான சொல்லைத் தேடினார். ஒரு மிகச் சிறந்த தெரிவினை எடுக்கமுடியாது போகும்போது நாம் இருப்பதிலேயே 'பரவாயில்லை' என்கிற முடிவை எடுப்போம். அதாவது ஒரு பொருளைத் தேர்வு செய்யும்போது இது இருக்கிறதிலேயே பரவாயில்லை ரகம் என்று தீர்மானித்துக்கொள்வோம்.

இருப்பதை, கிடைத்ததை  வைத்து திருப்திப்படுகிறவர்கள்தான் மகிழ்ச்சியானவர்கள் என்று மேற்கொள்ளப்பட்ட  சமூக உளவியல் ஆய்வுகள் சொல்கிறது. ஆனால் அதை நம் வாழ்வின் மிக முக்கியமான தீர்மானங்களில் செயற்படுத்த முடியுமா ? 

2015ம் ஆண்டிற்கான  பணக்காரர்கள் பட்டியலினை Forbes சஞ்சிகை வெளியிட்டது.  அதில் Warren buffet மூன்றாம் இடத்தினைப் பிடித்திருந்தார்.  1958ல் வாங்கிய அதே வீட்டில்தான் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். இருப்பதை வைத்து திருப்திகொள்ளவேண்டும் என்பது அவரது கருத்து. கிழமை நாட்களில் நியூயோர்க் நகரத்துக்குச் செல்லும்போது காலை உணவுக்காக  ஒரியோ குக்கீஸ் மற்றும் ஒரு கலன் பாலையும் கொண்டுசெல்வது வழக்கம் என ஒரு வானொலிப்பேட்டியின்போது  சொன்னார். ஆனால் முதலிடுதல் என்று வரும்போது அவரின் கொள்கைகள் வேறுவிதமானது. மிகச் சிறந்த முடிவுகளையே அவர் எடுத்திருக்கிறார்.  அவரைப் பொறுத்தவரை முக்கியத்துவம் பெறாத விடயங்களில் நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ள மட்டுமே நாம் திருப்தி அடையவேண்டும் என்பதுதான்  அவரது கருத்து. 

Warren buffet பற்றி ஒரு நல்ல ஆக்கம் . http://www.wsj.com/articles/lessons-from-50-years-of-buffett-1430527313

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...