Skip to main content

கவிதாஞ்சலி 2

இலக்கியக்காதல் போல அழகான மொழியமைப்பும் காதலும் கொண்ட பாடல்கள் சில வந்திருக்கின்றன. அதில் "என் சுவாசக்காற்றே" படத்தில் இடம்பெற்ற "தீண்டாய் மெய் தீண்டாய்" என்கிற பாடலும் குறிப்பிடத்தக்கது. இதில் "மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். வைரமுத்துவின் இந்த வரிகள் தவறென்று சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். அப்படியல்ல, இதன் பொருள் வேறு. கம்பராமாயணத்தில் சீதைக்கே இந்தச் சந்தேகம் வருகிறது. இராமன் வில்லை உடைப்பதற்கு முன்னமே அவனைக் கன்னிமாடத்திலிருந்து பார்த்துவிடுகிறாள் சீதை. அவன் மீது காதல் வயப்படுகிறாள். பிறகு, வில்லை ஒருவன் உடைத்துவிட்டான் என்கிற செய்தியைத் தனது தோழிகள் சொல்லித் தெரிந்துகொள்கிறாள். ஆனால் தான் அப்போது பார்த்தவனும் இவனும் ஒருவன்தானா என்கிற சந்தேகம் அவளுக்கு திடுக்கென்று வந்துபோகிறது. இருவரும் ஒருவரேயானால் மகிழ்ச்சி என எண்ணுகிறாள். சபையில் எல்லோர் முன்னாலும் அவனைத் தலைநிமிர்ந்து வேறு பார்க்கமுடியாது. பெரியவர்கள் ஏதேனும் எண்ணுவார்கள் என்கிற பயமும் நாணமும் காரணமாக இருக்கலாம். அதனால் தனது கைவளையைத் திருகுவதுபோல கடைக்கண்ணால் பார்க்கிறாள். அவளது சந்தேகம் தீர்ந்தது.
"எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்.
மெய் விளைவு இடத்து. முதல் ஐயம் விடலுற்றாள்.
ஐயனை. அகத்து வடிவே அல. புறத்தும்.
கைவளை திருத்துபு. கடைக் கணின் உணர்ந்தாள்."

அதேபோல, இந்தத்  திரைப்படத்திலும் தன்னைத் தீ விபத்திலிருந்து காப்பாற்றியவன் மீது காதல் கொள்கிறாள். அவன் முகத்தை அவளால்  பார்க்கமுடியவில்லை. தொட்டுத் தூக்கிய அவன் தொடுகை மட்டும்தான் நினைவிருக்கிறது. பிறகு, ஒருவன் தனது கவிதைகளை உச்சரிப்பதைக் கண்டு காதல் கொள்கிறாள். அந்தக் கவிதைக்காதலனை இவள் சந்திக்கிறாள். அச்சந்தர்ப்பத்தில் அவளை மீண்டும் அவன் தொட்டுவிடுகிறான். தொட்டுவிட இந்தக் கவிதைக்காதலனும் அவனும் ஒருவனா என்று திடுக்கிடுகிறாள். இருவரும் ஒரேவரேயானால் சீதையைப்போல இவளுக்கும் மகிழ்ச்சி.

அன்னவளை. ‘அல்லள்’ என.
   ‘ஆம்’ என. அயிர்ப்பான்.
கன்னி அமிழ்தத்தை எதிர்
கண்ட கடல் வண்ணன்.

சீதைக்கு வந்த அதே சந்தேகம் இராமனுக்கும் வருகிறது. நான் கன்னிமாடத்தில் கண்ட அந்தப் பெண்ணும் இவளும் ஒருத்தியா என்கிற ஐயத்தைப் பார்த்துத் தீர்த்துக்கொள்கிறான்.

"பலபேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்."

இப்படி தமிழ்த் திரைப்படங்களில் ரசனைகள் ஒன்றுசேர்த்த காதலர்கள் மிகக்குறைவு.
"நதியோரப் பூவின் மேலே ஜதி பாடும் சாரல்போலே என்னை இன்ப துன்பம் செய்குவதோ!"  காமத்தின் மென்மையைச் சொல்ல எத்தனை அழகான உவமை.

இந்தப் பாடல் தொடர்பான பேஸ்புக் பதிவு 

Comments

Anonymous said…
ஒரு கன்னம் தந்தேன் முன்னே..
மறு கன்னம் தந்தாய் பெண்ணே..
இயேசுநாதர் காற்று வந்து வீசியதோ..

இதை விட ஒரு கவிஞன் உவமையாகக் கையாள முடியுமா?
Anonymous said…
ஒரு கன்னம் தந்தேன் முன்னே..
மறு கன்னம் தந்தாய் பெண்ணே..
இயேசுநாதர் காற்று வந்து வீசியதோ..

இதை விட ஒரு கவிஞன் உவமையாகக் கையாள முடியுமா?

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ