Skip to main content

கங்குபாய் கத்தியவாடி




நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல.

காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள்.

இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும்.

கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தாலும், கங்குபாய் என்கிற இந்தப் படம், காமாத்திபுரா என்கிற இடத்தில் 1960 களில் நிகழ்ந்த கதையை மையமாக வைத்து புனையப்பட்ட கதை. கங்குபாய் கத்தியவாடி என்கிற பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.

பெரும்பாலும் இதுபோல விலைமாதர் விடுதிகளில் சட்டங்கள் இல்லை. அங்கு விலைமாதர்களாக இருக்கிறவர்களுக்கு தகுந்த வசதிகள் இல்லை. அப்போது, குறிப்பிடட ஒரு பகுதியிலேனும் சட்டபூர்வமாக்கப் படாததால் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. இதையெல்லாம் எதிர்த்து தங்களுக்கும் தகுந்த அங்கீகாரம் வேண்டுமென்று போராடியவர் கங்குபாய் கத்தியவாடி.

இப்பொழுதும் தனிநபர் விலைமாதராக இருப்பது சட்டவிரோதம் இல்லையென்றாலும், இலங்கை இந்தியா போன்ற நாடுகளில், பெரும்பாலான இடங்களில் விடுதியாக வைத்து(Brothel house) நடத்துவது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அப்படியிருக்கையில் விலைமாதர் பாதுகாப்பும், அவர்களுக்குரிய சட்டங்களும் இன்னமும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது.

அவர்களுடைய தொழிலையும் பிற தொழிலுக்குச் சமமான தொழில்களில் ஒன்றாகக் கருதி அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத்தருவது சவாலான ஒன்றாகவே இருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி, அலியா பட் நடித்து வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில், அலியா பட் மிக அழகாக நடித்திருக்கிறார். கண்ணுக்கு விருந்து தரும் காட்சியமைப்பு மற்றும் இசையென்று அழகாக எடுத்திருக்கிறார்கள்.

தருவது உடலென்றாலும் உள்ளமென்றாலும் அதற்குரிய மரியாதையை அவரவர்களுக்கு தந்து, தாமும் அதுபோல நடந்துகொள்ளும் கலாச்சாரம் இன்னும் வளரவேண்டும். செக்ஸின் அத்தனை சுகத்தையும் விலைமாதரிடம் அனுபவிப்பவர் எல்லோரும் அவர்களுக்கு மரியாதை தருவதில்லை. உழைப்புக்கு மரியாதையை இல்லை. அதுபோலவே, விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருப்பதால் அவர்களை வந்து சேருகிற மனிதர்களும் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். தரம் வெவ்வேறு ஆனாலும், மனிதரின் புரிதல் மாறாமல் நிறைய விடயங்களை மாற்றமுடியாது.

பெரும்பாலான மனிதர்களைப் போய்ச்சேரும் சினிமா ஊடகம் இந்தளவுக்கேனும் ஒரு கதையைப் பேசுவது மகிழ்ச்சி 




Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ