Skip to main content

மெய்தொட்டுப் பயிறல் - கவிதாஞ்சலி 4





இலக்கியத்தில் களவொழுக்கத்தின்போது   தலைவியின் வேட்கையை உணர்ந்த தலைவன் எண்வகைச் செயல்களை ஆற்றுவான். தலைவிக்கும் காதல் உடன்பாடு இருக்கிறது. ஆனால் அவள் பெண்மையின் நலன்கள் அவளைத் தடுக்கிறது. அவற்றை நீக்கவேண்டும். அதன்பின்னரே கூடல் நிகழும்.இவற்றை மெய்தொட்டுப் பயிறல்,பொய்பாராட்டல்,இடம்பெற்றுத்தழாஅல்,இடையூறு கிளத்தல்,நீடுநினைந்திரங்கல்,கூடுதலுறுதல்,சொல்லியநுகர்ச்சி,தீராத்தேற்றம் என்று எண்வகைச் செயல்களாக வகைப்படுத்துகின்றன.

தலைவியின் அச்சமும் மடமும் நாணமும் நீங்கும் பொருட்டு அவளைத் தீண்ட முற்படல் மெய்தொட்டுப் பயிறல் எனப்படும். 'பயிறல்' என்பது தீண்ட முயலுதல் எனும் பொருள் கொள்ளும் என்கின்றனர். இவ்வாறு முயலும்போது தலைவியிடம் பலவகை மாற்றங்கள் நிகழும். "நிலவே கேளு! உன்  ஒளி இவளின்  முகத்தை விட பிரகாசமாய் இருந்தால் நான் உன்னையே மணப்பேன்" என்றெல்லாம் பொய்பாராட்டல்  நிகழும். இதில் பொய் சொல்லி நெருங்குதல் பற்றிக் கூறும் பாடல்கள் நிறைய இருக்கின்றன. அவள் மேல் அமர்ந்த வண்டைத் துரத்தும் சாக்கில் அவள் கூந்தல் திருத்தி, நுதல்  தடவி, வண்டினையும் ஓட்டிவிட்டு மெல்லடிகளைத் தடவுகிறான். 'இடம்பெற்றுத்தழாஅல்' என்பது பொய்பாராட்டலை தலைவி கேட்டுக்கொண்டே இருக்கும்போது அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை நெருங்குதலைக் குறிக்கும்.

இந்திரா படத்தில் இடம்பெற்ற "தொடத் தொட மலர்ந்ததென்ன" பாடலில் இந்த அழகியலைக் காணலாம். அத்தனை மெலிதான வரிகள். "தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே" என்று இலக்கியம் சொல்லும் மெய்தொட்டுப் பயிறலை வரிகளில் அத்தனை நயம்பட சொல்கிறது  வைரமுத்து வரிகள். "மழை வர பூமி மறுப்பதென்ன" எனத் தொழுகிறான். "பனிதனில் குளித்த பால்மலர் காண இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்" என்று பொய்பாராட்டி நெருங்குகிறான்."இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே.மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே"  என்கிற வரிகள் இடையூறு கிளத்தலை அழகாகச் சொல்கிறது. "இடையூறு கிளத்தல்" என்பது தலைவி நாணி தன்னை மறைத்துக்கொள்ளுதலை சொல்கிறது.

இந்தப் பாடலில் வார்த்தைகளை உச்சரிப்பதற்கு ஒரு கண்ணியமான ஆண் குரல் வேண்டும். காரணம், கவிதையில் காமம் மட்டும் இல்லை . அன்பும் மிகுந்து இருக்கிறது. இதையெல்லாம் சேர்த்து  வார்த்தைகளில் தெய்வத்தன்மையைக் கொண்டுவந்தது பாலசுப்ரமணியத்தின் குரல்.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ