Skip to main content

கவிதாஞ்சலி 2

இலக்கியக்காதல் போல அழகான மொழியமைப்பும் காதலும் கொண்ட பாடல்கள் சில வந்திருக்கின்றன. அதில் "என் சுவாசக்காற்றே" படத்தில் இடம்பெற்ற "தீண்டாய் மெய் தீண்டாய்" என்கிற பாடலும் குறிப்பிடத்தக்கது. இதில் "மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். வைரமுத்துவின் இந்த வரிகள் தவறென்று சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். அப்படியல்ல, இதன் பொருள் வேறு. கம்பராமாயணத்தில் சீதைக்கே இந்தச் சந்தேகம் வருகிறது. இராமன் வில்லை உடைப்பதற்கு முன்னமே அவனைக் கன்னிமாடத்திலிருந்து பார்த்துவிடுகிறாள் சீதை. அவன் மீது காதல் வயப்படுகிறாள். பிறகு, வில்லை ஒருவன் உடைத்துவிட்டான் என்கிற செய்தியைத் தனது தோழிகள் சொல்லித் தெரிந்துகொள்கிறாள். ஆனால் தான் அப்போது பார்த்தவனும் இவனும் ஒருவன்தானா என்கிற சந்தேகம் அவளுக்கு திடுக்கென்று வந்துபோகிறது. இருவரும் ஒருவரேயானால் மகிழ்ச்சி என எண்ணுகிறாள். சபையில் எல்லோர் முன்னாலும் அவனைத் தலைநிமிர்ந்து வேறு பார்க்கமுடியாது. பெரியவர்கள் ஏதேனும் எண்ணுவார்கள் என்கிற பயமும் நாணமும் காரணமாக இருக்கலாம். அதனால் தனது கைவளையைத் திருகுவதுபோல கடைக்கண்ணால் பார்க்கிறாள். அவளது சந்தேகம் தீர்ந்தது.
"எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்.
மெய் விளைவு இடத்து. முதல் ஐயம் விடலுற்றாள்.
ஐயனை. அகத்து வடிவே அல. புறத்தும்.
கைவளை திருத்துபு. கடைக் கணின் உணர்ந்தாள்."

அதேபோல, இந்தத்  திரைப்படத்திலும் தன்னைத் தீ விபத்திலிருந்து காப்பாற்றியவன் மீது காதல் கொள்கிறாள். அவன் முகத்தை அவளால்  பார்க்கமுடியவில்லை. தொட்டுத் தூக்கிய அவன் தொடுகை மட்டும்தான் நினைவிருக்கிறது. பிறகு, ஒருவன் தனது கவிதைகளை உச்சரிப்பதைக் கண்டு காதல் கொள்கிறாள். அந்தக் கவிதைக்காதலனை இவள் சந்திக்கிறாள். அச்சந்தர்ப்பத்தில் அவளை மீண்டும் அவன் தொட்டுவிடுகிறான். தொட்டுவிட இந்தக் கவிதைக்காதலனும் அவனும் ஒருவனா என்று திடுக்கிடுகிறாள். இருவரும் ஒரேவரேயானால் சீதையைப்போல இவளுக்கும் மகிழ்ச்சி.

அன்னவளை. ‘அல்லள்’ என.
   ‘ஆம்’ என. அயிர்ப்பான்.
கன்னி அமிழ்தத்தை எதிர்
கண்ட கடல் வண்ணன்.

சீதைக்கு வந்த அதே சந்தேகம் இராமனுக்கும் வருகிறது. நான் கன்னிமாடத்தில் கண்ட அந்தப் பெண்ணும் இவளும் ஒருத்தியா என்கிற ஐயத்தைப் பார்த்துத் தீர்த்துக்கொள்கிறான்.

"பலபேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்."

இப்படி தமிழ்த் திரைப்படங்களில் ரசனைகள் ஒன்றுசேர்த்த காதலர்கள் மிகக்குறைவு.
"நதியோரப் பூவின் மேலே ஜதி பாடும் சாரல்போலே என்னை இன்ப துன்பம் செய்குவதோ!"  காமத்தின் மென்மையைச் சொல்ல எத்தனை அழகான உவமை.

இந்தப் பாடல் தொடர்பான பேஸ்புக் பதிவு 

Comments

Anonymous said…
ஒரு கன்னம் தந்தேன் முன்னே..
மறு கன்னம் தந்தாய் பெண்ணே..
இயேசுநாதர் காற்று வந்து வீசியதோ..

இதை விட ஒரு கவிஞன் உவமையாகக் கையாள முடியுமா?
Anonymous said…
ஒரு கன்னம் தந்தேன் முன்னே..
மறு கன்னம் தந்தாய் பெண்ணே..
இயேசுநாதர் காற்று வந்து வீசியதோ..

இதை விட ஒரு கவிஞன் உவமையாகக் கையாள முடியுமா?

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...