Skip to main content

மனதோடு பேசலாம் - நிகழ்ச்சி

கட்டைப் பஞ்சாயத்து எல்லாம் ஆலமரம், செம்புன்னு காலம்  போய், சோபா செட்டு கண்ணாடி கிளாஸ்னு ட்ரெண்டு மாறிப்போச்சு. அதனாலேயே கொஞ்சக் காலமாக மற்றவர்கள் பிரச்னையை தீர்க்கிறேன்  என்று ஆரம்பிக்கப்படும் நிகழ்ச்சிகள் மீது எதிர்மறையான கருத்து வைத்திருந்தேன். எந்த  டிவி சானலுக்கு மாற்றினாலும் 'இதோ அறிவுரை சொல்லுகிறேன்' என்று பலபேர் காத்திருக்கிறார்கள். இன்ஸ்டன்ட் சாமியார்கள் மாதிரி, நிபுணத்துவம் அற்றவர்கள் எல்லோரும் மற்றவர்களின் வாழ்வில் தலையிட்டு  ஏதேதோ குழப்பம் செய்து பணம் பார்க்கிறார்கள். தங்கள் டிஆர்பி ரேட்டினை  உயர்த்திக்கொள்ளவதற்கு பிரச்சனைகளை அணுகுகிறார்கள்.  எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அதே நோக்கம் இருந்தாலும் சில நிகழ்ச்சிகளில் கொஞ்சமேனும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கும் என்றே நம்புகிறேன்.

தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் 'மனதோடு பேசலாம்' எனும் நிகழ்ச்சியினைத் தற்செயலாகக் காணக்கிடைத்தது. நான் பார்த்தவரையில் நிபுணத்துவம் பெற்ற உளவியல் ஆலோசகர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். எந்தக் கேள்வி கேட்டாலும் பொதுவான ஒரு பதிலைக் கொடுத்துவிட்டு, அருகிலிருக்கும் உளவியல் நிபுணரைப் பாருங்கள் என்கிறார்கள். 

"நான் விரும்பி கல்யாணம் செய்துகிட்டேன். என் கணவர் பிரச்சனை பண்ணுகிறார். அவரோடு சேர்ந்து வாழலாமா? வேண்டாமா?"  என்று உளவியல் ஆலோசகரிடம் ஒரு பெண் தொலைபேசியில் கேட்டு வைத்தார்.

உண்மையில் உளவியல் நிபுணர்கள் என்பவர்கள் இன்ஸ்டன்ட் சாமியார்கள் மாதிரி தீர்ப்புச் சொல்லுபவர்கள் அல்ல. பிரச்சனைகளைச் செவிமடுப்பவர்கள். தங்களின் பயிற்ச்சிகளின் மூலம் தகுதியான கேள்விகள் கேட்டு, பாதிக்கப்பட்டவர்களைப்  பேசவைத்து, அவர்களிடமிருந்தே தீர்வை எதிர்பார்ப்பவர்கள். டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்கு ஏதும் புரட்சி பண்ணிடுவாரோ என்று நினைத்தேன். "தீர்மானம் நீங்கள் தான் எடுக்கவேண்டும். எந்த உளவியல் நிபுணரும் முடிவு சொல்லமாட்டார்கள். நீங்களாக ஆராய்ந்துதான் முடிவு எடுக்கவேண்டும். ஒரு நல்ல உளவியல் நிபுணராகப் போய் பாருங்கள்" என்று  இயல்பாகப் பதில் சொன்னார். அழகான பதில். 

நல்லவேளை அந்தப் பெண் கடும்போக்கு  மாதர் சங்கப் பக்கம் ஏதும் போகவில்லை. போயிருந்தால், அவர்களே முடிவைச் சொல்லியிருப்பார்கள்!

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ