Skip to main content

தேஜா வு .. முன்னரே பார்த்திருக்கிறேன் (Already seen ) ....

சாதாரணமாக இளைஞர்கள் பெண்களிடம் பாவிக்கும் வேண்டுமென்றே பாவிக்கும் சொல் . ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதை உணர்ந்திருப்போம் . சில இடங்கள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் !!! சிலரை ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் . 


அந்த நினைவுகள் வந்த நொடி எமக்கே வியப்பாக இருக்கும் . ஏற்க்கனவே இதே நிகழ்ச்சி நடந்திருக்கிறதே . இதே இடத்திற்கு வந்திருக்கிறேனே ? மீண்டும் அதே நிகழ்ச்சி நம் வாழ்வில் அந்த நிமிடம் நடப்பது போல உணர்வு . அனைவருக்கும் வாழ்க்கையில் சில தடவைகள் கட்டாயம் வந்திருக்கும் .




உதாரணமாக அதே உணர்வு மீண்டும் எழுவது போல இருக்கும் . திடீரென நண்பனுடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது ஏற்க்கனவே இந்த தலைப்பில் பேசியிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றும் .


அது தான் தேஜா வோ என அழைக்கப்படுகிறது . தேஜா வோ என்பது ஒரு நிகழ்வு முன்னர் நடந்தது போல நம் உணர்வில் தோன்றும் ஆனால் அது நடைபெறவில்லை என்று எமக்கு தெரிவது தான் .already experienced; déjà senti, already thought; and déjà visité, already visited  என பிரெஞ்சு விஞ்ஞானி Emile Boirac என்பவர்  இப்படி ஒன்று நம்முள் இருப்பதை  இனம்கண்டு வெளியில் கொண்டு வந்தார் . இதற்க்கு பெயரும் சூட்டினார் .


1  லிருந்து 30 செக்கன்கள் வரை நீடிக்கும் இந்த எண்ணம் .  


இதற்க்கு பல தியரிகள் இருந்தாலும் டாக்டர் அலன் பிரவுன் என்பவர் இதற்கான காரணத்தை விளக்கி செல்போன் தியரி என பெயர் வைத்தார் . இது அவருடைய கருத்து மட்டுமே .. மொத்தமாக 40 தியரிகள் உண்டு .


அதாவது நீங்கள் ஒரு வாகனத்தை ஓட்டிக்கொண்டு கைத்தொலைபேசியில் பேசும் போது இரு செயல்கள் ஒரே நேரத்தில் இடம்பெறும் போது நாம் உண்மையாக செய்து கொண்டிருக்கும் வேலை பார்வை , மனம், சத்தம் என்பவற்றிலேயே உணரப்படும் . திடீரென மீண்டும் போனை வைத்து விட்டு சாதாரண சூழலுக்கு வரும் போது அந்த இடங்கள் ஏற்க்கனவே பார்க்கப்பட்டது போல தோன்றும் .


இன்னொரு உதாரணமாக வீட்டு அறைக்குள் நாம் இன்னொருவருடன் பேசிக்கொண்டு நுழையும் போது அந்த அறையின் மீது பார்வையும் , சூழல்  சத்தமும் கவனிக்கப்படிருக்கும்  . திடீரென வீட்டுள் நுழையும் போது அது ஏற்க்கனவே உணரப்பட்டதாக இருக்கும் . ஏற்க்கனவே பார்த்த இடம் போல இருக்கும் . 


ஆனால் தேஜா வு (முன்னரே பார்த்தது ) மருத்துவ ரீதியாகவும்  விளக்கி விட முடியாது . அது மிகவும் ஆழமானது . எதிர்பார்க்கப்படாமல் உடனே நிகழ்வது . 


ஆனால் பல விஞ்ஞான   தியரிகள் நிகழ்வுகள் ஒரு கோர்வையில் இடம்பெறுவதையும் அவை ஒன்றுடனொன்று தொடர்பு பட்டவை என்றும் கூறுகின்றன . அயிங்ச்டேயினின் சமாந்தர உலகம் தியரி நாம் இந்த பாதையில் சென்றால் ஒரு நிகழ்வு இல்லை என்றால் இன்னொரு நிகழ்வு என கூறியுள்ளார் .  நிகழ்வுகள் எம் வாழ்வில் பல இடம்பெறுகின்றன . அவற்றில் கோர்வையில் ஏற்ப்படும் மாற்றங்கள் இவ்வாறு தோன்ற வைக்கலாம் . 


ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் இணைந்தது . உதாரணமாக நாம் சில பொருட்களை தொலைத்து விட்டு தேடுவதுண்டு . ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாட்கள் கடந்து அவை தேடிய இடத்திலேயே கிடைக்கும் . 


பல தியரிகள் இருந்தாலும் இன்னும் நிலையாக நிரூபிக்கப்படாத ஒன்று . நீங்களும் பல தடவைகள் உணர்ந்திருப்பீர்கள்  .. 
.

Comments

Valaakam said…
நல்ல பதிவு...
மற்ற தியரிகளையும் போடலாமே... ஆவலாக இருக்கிறேன்...
எனக்கும் ஒரு ஐடியா இருக்கு... அதை நான் பிறகு எழுதுறேன்... :)
déjà என்றால் already என்றுதான் அர்த்தம்... ( ஹீ...ஹீ... ஃப்ரென்ஞ் வேலை செய்யுது... )
நன்றி வளாகம் .நிச்சயம் இடுகிறேன் ... உங்கள் பதிவை வாசிக்க ஆவலாக உள்ளேன்

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ