Skip to main content

கனவுகள் - காரணங்கள்

கனவுகள் இதுவரை யாராலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட முடியாத ஒன்று . விஞ்ஞானிகளின் கருத்துப்படி மூளையில் ஏற்ப்படும் மாற்றங்களே கனவுகளுக்கு காரணம் எனப்படுகிறது . இருந்தாலும் சரியாக இதுவென கணித்து கூற முடியாத இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கும் விடயம் தான் கனவுகள் .


முதலாவது  பதிவு   


ஆனால் கனவுகள் பற்றிய  தொடர் ஆய்வாளர்கள் ஒவ்வொரு கனவும் எமது எண்ணங்களின் வெளிப்பாடு எனவும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களும் கொண்டன என கண்டறிந்துள்ளனர் .


பொது இடத்தில் ஆடை இல்லாமல் இருத்தல் 

நாம் பொது இடங்கள் பாடசாலை அல்லது வேலைத்தளத்தில் இருப்போம் திடீரென ஆடை இல்லாதது போல உணர்வு தோன்றும் .

இவ்வாறான கனவுகள் நாம் எமது நிஜ வாழ்க்கையில் இருந்து எதையாவது  மறைக்க முற்ப்படும் போது இவ்வாறான கனவுகள் தோன்றும் .

நாம் அந்த விடையத்தை மறைக்க இன்னும் தயாராகவில்லை என உள் மனதில் எண்ணம் தோன்றும் போதும் அவ்வாறான கனவுகள் தோன்றும் .

விழுந்துகொண்டிருப்பது போல கனவு ....
ஏதாவது உயரமான இடத்திலிருந்து விழுவது போல கனவு தோன்றும் ,திடீரென எழுவோம் .

ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் போது அதை எம்மால் தடுக்க முடியாவிட்டால் இவ்வாறான கனவுகள் தோன்றும் .
பாடசாலையில் அல்லது வேலைத்தளத்தில் ஏதாவது தோல்விகள்  ஏற்ப்பட்டால் அந்த பிரச்சனையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இவ்வாறான கனவுகள் தோன்றும் .
யாராவது துரத்துவது போல 


என்ன பிரச்சனை என்ன காரணம் என்று தெரியாது . துரத்துவது போல கனவு  தோன்றும் .

இது கூடுதலாக நாம் செய்யும் வேலைகளிலும் தங்கி உள்ளது .
உதாரணமாக 
கூடுதலாக குடித்தால் , குடிப்பது ஒரு பிரச்சனையாக உங்களை தொடர்ந்து வருகிறது என்பதை குறிப்பிடும் .

பரீட்ச்சை எழுதுவது  போல (அல்லதுபரீட்ச்சை இருப்பதை மறந்து போதல் ) 
ஒரு பரீட்ச்சை இருப்பதை உணர்வீர்கள் . ஆனால் சில நேரங்களில் வகுப்பறையி சென்றடைய முடியாமல் இருக்கும் .

ஒரு சவாலை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போது அதற்க்கு நீங்கள் தயாராகவில்லை என்று உணர்ந்தால் அல்லது அந்த சவாலை புறக்கணித்தால் இவ்வாறான  கனவுகள் தோன்றும் .

ஓடுவது போல தோன்றல் 
ஓடுவது போல தோன்றும் ஆனால் எங்கும் செல்வதோ அல்லது அசைவது போலவோ தோன்றாது .

அதாவது ஒர்றேநேரத்தில் பல வேலைகள் செய்யும் போது எதுவும் கவனத்தில்கொள்ளப்படாத நிலைமைகளில் இவ்வாறான கனவுகள் தோன்றும் .

அடுத்த பதிவில் "Lucid  கனவு பற்றியும் அறிவியல் பார்வையினூடும் பார்ப்போம் ..




Comments

இந்த பகல் கனவா பதியும் அப்படியா கொஞ்சம் சொல்லுங்க ...
ம்ம் .. நிச்சயம்
S.M.ராஜ்

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...