Skip to main content

தேஜா வு .. முன்னரே பார்த்திருக்கிறேன் (Already seen ) ....

சாதாரணமாக இளைஞர்கள் பெண்களிடம் பாவிக்கும் வேண்டுமென்றே பாவிக்கும் சொல் . ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதை உணர்ந்திருப்போம் . சில இடங்கள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் !!! சிலரை ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் . 


அந்த நினைவுகள் வந்த நொடி எமக்கே வியப்பாக இருக்கும் . ஏற்க்கனவே இதே நிகழ்ச்சி நடந்திருக்கிறதே . இதே இடத்திற்கு வந்திருக்கிறேனே ? மீண்டும் அதே நிகழ்ச்சி நம் வாழ்வில் அந்த நிமிடம் நடப்பது போல உணர்வு . அனைவருக்கும் வாழ்க்கையில் சில தடவைகள் கட்டாயம் வந்திருக்கும் .




உதாரணமாக அதே உணர்வு மீண்டும் எழுவது போல இருக்கும் . திடீரென நண்பனுடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது ஏற்க்கனவே இந்த தலைப்பில் பேசியிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றும் .


அது தான் தேஜா வோ என அழைக்கப்படுகிறது . தேஜா வோ என்பது ஒரு நிகழ்வு முன்னர் நடந்தது போல நம் உணர்வில் தோன்றும் ஆனால் அது நடைபெறவில்லை என்று எமக்கு தெரிவது தான் .already experienced; déjà senti, already thought; and déjà visité, already visited  என பிரெஞ்சு விஞ்ஞானி Emile Boirac என்பவர்  இப்படி ஒன்று நம்முள் இருப்பதை  இனம்கண்டு வெளியில் கொண்டு வந்தார் . இதற்க்கு பெயரும் சூட்டினார் .


1  லிருந்து 30 செக்கன்கள் வரை நீடிக்கும் இந்த எண்ணம் .  


இதற்க்கு பல தியரிகள் இருந்தாலும் டாக்டர் அலன் பிரவுன் என்பவர் இதற்கான காரணத்தை விளக்கி செல்போன் தியரி என பெயர் வைத்தார் . இது அவருடைய கருத்து மட்டுமே .. மொத்தமாக 40 தியரிகள் உண்டு .


அதாவது நீங்கள் ஒரு வாகனத்தை ஓட்டிக்கொண்டு கைத்தொலைபேசியில் பேசும் போது இரு செயல்கள் ஒரே நேரத்தில் இடம்பெறும் போது நாம் உண்மையாக செய்து கொண்டிருக்கும் வேலை பார்வை , மனம், சத்தம் என்பவற்றிலேயே உணரப்படும் . திடீரென மீண்டும் போனை வைத்து விட்டு சாதாரண சூழலுக்கு வரும் போது அந்த இடங்கள் ஏற்க்கனவே பார்க்கப்பட்டது போல தோன்றும் .


இன்னொரு உதாரணமாக வீட்டு அறைக்குள் நாம் இன்னொருவருடன் பேசிக்கொண்டு நுழையும் போது அந்த அறையின் மீது பார்வையும் , சூழல்  சத்தமும் கவனிக்கப்படிருக்கும்  . திடீரென வீட்டுள் நுழையும் போது அது ஏற்க்கனவே உணரப்பட்டதாக இருக்கும் . ஏற்க்கனவே பார்த்த இடம் போல இருக்கும் . 


ஆனால் தேஜா வு (முன்னரே பார்த்தது ) மருத்துவ ரீதியாகவும்  விளக்கி விட முடியாது . அது மிகவும் ஆழமானது . எதிர்பார்க்கப்படாமல் உடனே நிகழ்வது . 


ஆனால் பல விஞ்ஞான   தியரிகள் நிகழ்வுகள் ஒரு கோர்வையில் இடம்பெறுவதையும் அவை ஒன்றுடனொன்று தொடர்பு பட்டவை என்றும் கூறுகின்றன . அயிங்ச்டேயினின் சமாந்தர உலகம் தியரி நாம் இந்த பாதையில் சென்றால் ஒரு நிகழ்வு இல்லை என்றால் இன்னொரு நிகழ்வு என கூறியுள்ளார் .  நிகழ்வுகள் எம் வாழ்வில் பல இடம்பெறுகின்றன . அவற்றில் கோர்வையில் ஏற்ப்படும் மாற்றங்கள் இவ்வாறு தோன்ற வைக்கலாம் . 


ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் இணைந்தது . உதாரணமாக நாம் சில பொருட்களை தொலைத்து விட்டு தேடுவதுண்டு . ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாட்கள் கடந்து அவை தேடிய இடத்திலேயே கிடைக்கும் . 


பல தியரிகள் இருந்தாலும் இன்னும் நிலையாக நிரூபிக்கப்படாத ஒன்று . நீங்களும் பல தடவைகள் உணர்ந்திருப்பீர்கள்  .. 
.

Comments

Valaakam said…
நல்ல பதிவு...
மற்ற தியரிகளையும் போடலாமே... ஆவலாக இருக்கிறேன்...
எனக்கும் ஒரு ஐடியா இருக்கு... அதை நான் பிறகு எழுதுறேன்... :)
déjà என்றால் already என்றுதான் அர்த்தம்... ( ஹீ...ஹீ... ஃப்ரென்ஞ் வேலை செய்யுது... )
நன்றி வளாகம் .நிச்சயம் இடுகிறேன் ... உங்கள் பதிவை வாசிக்க ஆவலாக உள்ளேன்

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...