Skip to main content

வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டமில்லாத நாளா ? - 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

உண்மைகள் அறிவியல் நோக்கில் வெளிவரவேண்டும் .. யார் மனதையும் புண்படுத்த அல்ல ..

13  ஆம் இலக்கம் அதிர்ஷ்டமற்றது ,13 ஆம் இலக்கத்தில் வீடு வாங்குவது நல்லதல்ல என்று  கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் கிறிஸ்தவத்தில் இன்னொரு கதையும் உண்டு . மேலைத்தேய நாடுகளிளும் வெள்ளிக்கிழமை  அதிர்ஷ்டமற்ற நாளாக நடைமுறையில் உள்ளது .




நேரத்தை சரியாக ஒழுங்கு படுத்த மனிதனால் தான் நாட்க்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தான்  7 நாட்களாக பிரிக்கப்பட்டு 12 மாதங்களாகவும் பிரிக்கப்பட்டது .

ஆனால் இந்த பதின்மூன்றாம் திகதி மர்மத்தின் படி இறைவன் முதலிலேயே நாட்க்காட்டி படைத்து விட்டு மனிதனை படைத்தது போலவே கதை உள்ளது .


paraskevidekatriaphobia என்றழைக்கப்படும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீதான பயம் மேல் நாட்டில்   பெரும் தொகையான மக்களால் நம்பப்படுகிறது .


இந்த பயங்களுக்கு கட்டுக்கதைகளே காரணம் (எந்தவித ஆதாரமும் அற்ற )...




இயேசு தனது 12 தோழர்களுடன் இருந்த போது பதின் மூன்றாவதாக வந்தவர் யூதாஸ் . அவர் தான் இயேசுவை காட்டி கொடுத்தவர் . 


வெள்ளிக்கிழமை மீதான பயத்துக்கு காரணம் ...


இயேசு  வெள்ளிக்கிழமை இறந்தமை ...
ஆதாம் ஏவாளும் பழம் உண்ட நாள் வெள்ளிக்கிழமை ..
பாரிய வெள்ளப்பெருக்கு வந்த நாளும் வெள்ளிக்கிழமை ..
பைபிளின் படி ...


இன்னொரு உறுதிப்படுத்தப்படாத கட்டுக்கதையும் உண்டு . கிட்டத்தட்ட பொய்யானது என்றும் சொல்லலாம் . 


பிரிட்டிஷ் கடற்ப்படை கப்பல் 1800 இல் H .M .S Friday  என்ற கப்பல் ஒரு வெள்ளிக்கிழமை புறப்பட்டதாம்.  அதுவும் அதன் கப்டன் பெயர் James Friday ஆம் . அந்த கப்பல் அப்படியே காணாமல் போய்விட்டதாம் .   


  கிறிஸ்தவம் எனும் சமயம் இருக்கும் முன்னர்  pagan (பகன் )என்னும் சமயம் இருந்தது . அதன் தழுவலில் இருந்து வந்தது தான் இந்த பதின் மூன்று  என்ற எண். காரணம் பகன் ( pagan lunar calendar.) நாட்காட்டியில் 13 மாதங்கள் என்றே பிரிக்கப்பட்டிருந்தது . 


ரோமானிய காலத்தில் வெள்ளிக்கிழமை வீனஸ் க்காக இருந்தது . வீனஸ் காதலின் கடவுள் . Norsemen எனப்படுபவர்கள் அதை சுட்டு அவர்கள் பிரிக்க் பிரேய என்று பெயர் வைத்தார்கள் . அது தான் பின்னாளில் ஃப்ரைடே என்று அழைக்கப்படுகிறது . 


காலம் காலமாக கட்டுக்கதையாகவும் ஒன்றுதொட்டு ஒன்றாக வந்த மதங்களும் மாற்றியமைத்த விளையாட்டு  தான் இவை .  

Comments

//காலம் காலமாக கட்டுக்கதையாகவும் ஒன்றுதொட்டு ஒன்றாக வந்த மதங்களும் மாற்றியமைத்த விளையாட்டு தான் இவை//

சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

மூடநம்பிக்கை ஒழிப்பு பணியை தொடர்ந்து செய்யவும்.
நன்றி தமிழ் ஓவியா :)

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...