Skip to main content

ஐங்ஸ்டெயின் கேள்விகள் ?? - சீனத்தத்துவம்

ஒருவன் தானாக தன்னை உணர்ந்து தானாக சிந்திக்க தொடங்கும் போது தான் ஒரு பூரண அறிவை எட்ட முடியும் என்பது உண்மை என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் ஐங்ஸ்டெயின் ஒரு சிறந்த உதாரணம் என்பது சிறு குழந்தைகளில் இருந்து அவர்களது பெற்றோர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும் .

வெறும் புள்ளிகளிலும் , வேறு ஒருவர் சொல்லிக்கொடுத்த விடயங்களிலும்,மனப்பாடங்களிலுமே  தற்போதைய அறிவு நிர்ணயிக்கப்படுகிறது . இவை அனைத்திற்கும் விதிவிலக்கு ஐங்ஸ்டெயின்  எனலாம் ..


ஐங்ஸ்டெயின் தனது ஆரம்பக்கல்வியிலேயே பல கேள்விகளையும் தேடலையும் தொடங்கியவர் . " ஏன் மாணவர்கள் எல்லோரும் பதில்  சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் , ஆசிரியரை பார்த்து  கேள்விகள் கேட்க்காமல் " என மனதிற்குள் இருத்திய முதல் கேள்வி , இறுதிவரை அவரை கேள்வி கேட்க்க வைத்தது .
"He who asks a question is a fool for five minutes; he who does not ask a question remains a fool forever."
என்று ஒரு சீனத்தத்துவம் உண்டு . "யார் ஒருவன் கேள்வி கேட்க்கிறானோ அவன் ஐந்து நிமிடம் தான் முட்டாள் , கேள்வியே கேட்க்காமல் இருப்பவன் முழுநேர முட்டாள் ".

ஐன்க்ச்டேயின் படிப்பில் உருப்படப்போவதில்லை என அவனுடைய தலைமை அதிகாரி அவர் தந்தைக்கு சொன்னார் .

வீட்டிலேயே கல்வி தொடர்ந்தாலும் அவருடைய தந்தை அவனுக்கு முதன் முதலாக வாங்கி கொடுத்த கொம்பாஸ் இலிருந்த முனை முள் வடக்கு நோக்கியே இருந்தது .

இது ஏன் எப்போதும் வடக்கு நோக்கியே உள்ளது ..? அப்படியானால் இதற்க்கு எதோ ஒரு விசை எங்கிருந்தோ  பிரயோகிக்கப்பட வேண்டும் . இதை சுற்றி எதோ உள்ளது என அப்போதே சுயமாக சிந்திக்க தொடங்கியவர் .

கல்லூரிகளிலும் வேறு நண்பர்களிடம் குறிப்புகளை எடுக்க சொல்லி விட்டு வகுப்பில் இருக்க மாட்டார் .. பாடத்திட்டத்தில் இல்லாதா புத்தகங்களை தேடித்தேடி படித்தார் . வெளியில் இருந்து அவராக உணர்ந்து படித்ததே அதிகம் எனலாம் . 

அவருடைய வரலாறு எழுதிய கிளார்க் என்பவர் he “found his real education elsewhere, in his own time.” என குறிப்பிட்டு இருந்தார் .

இவ்வாறு தன்னை தானே மேம்படுத்திக்கொண்ட மனிதன் எனலாம் . குழந்தைகளுக்கும் சரி யாருக்கும் சரி உண்மையான வழிகாட்டியாக எப்போதும் ஐங் ஸ்டெயினை எனலாம் ..

இந்த சமுதாயத்திற்கு ஒரு மனிதனை எடை போடும் அளவுக்கு அறிவு கிடையாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர் . 
தொடரும் ...

Comments

கணேஷ் said…
நல்ல தகவல்கள்...அடியேனும் ஐன்ஸ்டீன் அவர்கள் பற்றி எல்ய்ஹி இருக்கிறேன்..நேரம் இருந்தால் பாருங்கள்...
Anonymous said…
Why do we change foriegn place names to other than the real name? Example being Munchen or Munich?
Unknown said…
heyyy .... sooopppprrrrr :)

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...