Skip to main content

மரணம் -வாழ்க்கையின் பின்னரான வாழ்க்கை

மரணம் எனும் பதம் இன்னமும் இறை நம்பிக்கையை ஊன்றுவதற்கு இன்னும் சாதகமாக இருக்கிறது. ஆனாலும் விஞ்ஞானிகள் சௌகரியமாக எல்லாமே இறைவன் என ஒரு முடிவு எடுத்து விட்டு அமைதியாக இருப்பதில்லை  . சிந்தனை ஆற்றலை பரிமாணத்தின் உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளவர்கள் .

மரணமும் கனவும் அன்றாடம் சந்திக்கும் ,ஆனால் மனித மனங்கள்  சிந்திக்கும் ஆற்றலை பயன்படுத்தாத  விடயங்கள் .


மரணத்தின் விளிம்பை தொட்டு வந்தவர்கள் பலர் உண்டு . மனித முயற்சியின்  உச்சத்தில் இருக்கும் விஞ்ஞானம் ,அறிவியல்  பரிமாணம் அடையாத கடவுள் மனங்களின் சௌகரியமும் ஆயுதமான மரணத்தை அடைய , அறிய முயற்சிகிறது .

வரைவிலக்கணம் கொடுக்க முடியாத மரணம் எனும்  பதம் இலகுவாக உடலை உயிர் விட்டு பிரிகிறது எனலாம் . உடல் என்று இருப்பது உண்மை ஆனால் உயிர் ?

உயிர் அல்லது மனது என்பார்கள் சிலர் .. மூளையும் செயல்ப்பாடு அற்றுப்போதல் முழுமையான மரணம் எனலாம் .ஆனால் உயிர் அப்படியே இருக்குமா ? அல்லது மேலே அலுவலகம் வைத்திருக்கும் கடவுளிடம் சென்று நரகம் ,சொர்க்கம் என செய்த வேலைகளை டேட்டா பேசில் பார்த்து கடவுள் தண்டனை கொடுப்பாரா ?

சமய ரீதியாகவும் ,விஞ்ஞான ரீதியாகவும் சற்று அலசுவோம் ......

மரணத்தை நெருங்கியவர்கள் (Near death experience )

அதாவது இறந்துவிட்டார்கள் என மருத்துவ ரீதியாக முடிவு செய்த பின்னர் ,சில நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்று வந்தவர்கள் கூறிய கருத்துகள் கிட்டத்தட்ட ஒன்றே ...
1 . குகையினூடான பிரயாணம்
2 .அமைதியும் பிரகாசமான ஒளியும் நிரம்பிய இடம்
3 . ஒருவித சாந்தி ,இதுவரை உணராத அமைதி நிலை ...
4 . ஒன்றும் கேட்க்க முடியவில்லை ,ஆனால் பிரகாசமான ஒளி தெரிந்தது 

மருத்துவம் 
மருத்துவ வாதங்கள் வேறுபட்டு தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன . மூளையின் செயல்ப்பாடு இருக்கும் போது ,மருத்துவத்தின் போது அவர்களுக்கு கொடுக்கப்படும்  மருந்துகள் போன்றவை இவ்வாறான தூண்டல்களை ஏற்ப்படுத்தலாம்.


ஆனால் மருத்துவ ரீதியான ஆதாரங்களை இதில் திரட்டுவதில் மருத்துவர் பின் வான் லோமேல் (Pin van lommel ,cardiologist  Ph .D) முன்னணியானவர் .

மூளை நினைவுகளையும் ,ஆழ்மனதையும் உற்ப்பத்தி செய்கிறது . அந்த வகையில் அதன் செயல்ப்பாடு அற்ற நிலையில் மனத்தால் ஒரு வித மாயத்தோற்றம் (Illusion ) உணரப்படுகிறது என்கிறது சில மருத்துவ தரப்பு .

மனோதத்துவவியலாளர் பேராசிரியர் புரூஸ் க்ரேசன் (Bruce greson ) மரணத்தின் பின்னரான வாழ்க்கை , மரணத்தின் விளிம்பு போன்றவற்றை ஆராய்வதில் முனைப்பு காட்டும் இன்னொருவர் .

இவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்தவர்களிடம் பெற்ற மேலும் பல குறிப்புகள் ....
1 .திரும்ப முடியாத ஒரு எல்லைகோட்டில் நிற்றல்
2 .உடல் தொடர்பான கவனத்தன்மையை இழத்தல்  .
3 .இன்னொரு பரிமாணத்துக்குள் நுழைந்தமை
4 . நேரம் நிற்ப்பதை உணர்தல்

இதில் முக்கியமான விடயம் சாதாரண வாழ்க்கையை விட அது மிகவும் அமைதி தன்மையாகவும் ஆனால் மிகவும் சக்தியானவர்களாகவும் இருந்திருக்கின்றனர் /உணர்ந்திருக்கின்றனர் .

உதாரணமாக சிலருக்கு தாம் இறந்து விட்டோம் என்பது தெரிந்திருந்திருக்கிறது .
1 . நேரம் ஆர்முடுகியது .
2 . தான் யார் என்ற உணர்வு இழப்பு
3 .பிரபஞ்ச அமைதி
சிலருக்கு தாம் வெளியில் மிதப்பதும் அவர்களை யாரோ இழுப்பதும் போன்ற உணர்வு ஏற்ப்பட்டுள்ளது  .

இதில் சிலருக்கு அமானுஷ்யமான பல விடயங்கள் நிகழ்திருக்கிறது .அதில் சிலரால் பல ஆயிரம்  வருடங்களுக்கு முன்னரான பார்வையையும் பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னரான பார்வையையும் பார்க்க முடிந்துள்ளது . ஆனால் இரண்டுமே ஒன்றாக இருந்துள்ளது .

இதை அறிவியலுடன்  ஒப்பிட முடியுமா ? அல்லது மூளையில் செயல்பாடுகள் தான் காரணமா ? இன்னொரு உலகத்தை இப்போதே அறியும் நோக்கோடு .... தொடரும் ..... 

Comments

Unknown said…
என்னய்யா இப்பிடி பயப்பிடுத்திறீங்க !!
விரைவில் மிகுதியையும் பதிவுசெய்யுங்கள்...

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...