Skip to main content

2017 இல் விஜயதசமி ..

பிரபஞ்சத்தின் இருண்ட பக்கம் திரும்பியிருந்த பூமியின் ஒரு பக்கம்  சூரியன்  நோக்கி திரும்ப ஒளி கசிந்தது . கசிந்த சூரிய ஒளி எல்லையில்லாத வெட்ட வெளிக்கு நீல நிறத்தை கொடுத்தது . கூடுதலான செய்மதிகளின் கண் பார்வை படாத கிராமத்தில் ஆங்காங்கே கோவில்களிலும் தேவாலயங்களிலும் பக்திப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன . 

தெருவெங்கும் விழாக்கோலம் , திருவிழா சுவரொட்டிகள் அருகில் திறக்க இருக்கும் புதிய தொழில்நுட்பப கல்லூரியின் விளம்பரத்தை மறைத்துக்கொண்டிருந்தது .

அன்று விஜதசாமி ஆகையால் காலையிலேயே விழித்துக்கொண்டது குட்டிநேசனின் குடும்பம் . 

வானம் விடிந்துவிட்டது இன்னும் என்னம்மா தூக்கம் என தமிழ்ச்செல்வியை தட்டி எழுப்பினாள் பாக்கியம் பாட்டி .

பாட்டி ! பொய் சொல்லாதீங்க பாட்டி வானம் எண்டு ஒண்ணுமே இல்லை பாட்டி . நேற்று தான் மனோபிரியா டீச்சர் சொன்னாங்க . என்று தமிழ்ச்செல்வியின் அண்ணன்  சொல்ல பாட்டி திகைத்துப்போனாள் .வானம் கடவுள் படைச்சதல்லோ? ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை .

அவன் கொஞ்சம் சுட்டி , சொல்லிக்கொண்டே ஓடி விட்டான் .

சத்தத்தில் திகைத்து எழும்பிய தமிழ்ச்செல்வி , கொஞ்ச நேரம் கண்ணை கசக்கிவிட்டு கட்டிலை விட்டு எழுந்து நடந்தாள் . ஏதோ ஒரு நினைப்பு அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது . நேற்று அவள் அப்பா சொன்ன ஏடுதொடக்கும்  விடயம் ஞாபகம் இருந்தது . எங்கேயோ வெளியில் போகிறோம் என்ற சந்தோசம் அவளுக்குள் . 

 அம்மா அவளுக்கு முகம் கழுவி விட்டுவிட்டு சாமியை கும்பிட்டுவிட்டு வா அம்மா  என்றாள் . அவள் தாய் விஞ்ஞான ஆசிரியை .

சாமி அறைக்கு வந்த அவள் சாமி முன்னிலையில் அடுக்கப்பட்டு இருந்த புத்தகங்களில் அட்டையில் இருக்கும் படங்களை ஒவ்வொன்றாக தலையசைத்து பார்த்தாள் . சிலது அறிவியல் புத்தகங்கள் .நவராத்திரி  பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது .  ஐங்ஸ்டேயினும் நியூட்ட்டனும் சிரித்துக்கொண்டிருக்க அதன் மீது பூ வைக்கப்பட்டிருந்தது . பூவை  விலக்கிவிட்டு அவளும் அவர்களை பார்த்து கொஞ்சம் புன்னகைத்தாள் . 

சிரிக்கும் அவள் முகத்தில் குழி விழ பேபி ஷாலினி போல இருக்கிறாய் என் கண்ணே என அப்பா வந்து கட்டியணைத்து தூக்கிக்கொண்டு சென்றார் ஹோலிட்க்கு .

ஹோலில் இருந்து அண்ணன் சில படங்கள் புரட்டுவதை பார்த்த அவளும் அப்பாவிடம் இருந்து இறங்கி ஆர்வத்தோடு சென்று பார்த்தாள் . அது அவளது மச்சானின் படங்கள் . அவனுக்கும் இவளின் வயது . ஆனால் அவன் கனடாவில் இருக்கிறான் . இவர்கள் பார்ப்பதற்கு அனுப்பி வைத்திருந்தார்கள் .

வீட்டில் உள்ளவர்கள் விஜயதசமிக்கு தயாராகி கொண்டிருக்க ராஜா மாமாவும் அவர்களோடு இணைந்து பூசை பொருட்கள் தயார் பண்ணிகொண்டிருந்தார் .ராஜா மாமா தான் ஏடு தொடக்க இருப்பவர் . அவருக்குள்ளும் ஒரு சிந்தனை . இந்தப்பிள்ளை படிக்காட்டி என்னை ராசியில்லாதவன் ன்னு சொல்லீடுவானுன்களோ என்று .

கனடா மச்சான் ஒவ்வொரு படத்திலும் மிக  சிறிய கணணியை மடியில் வைத்து அமர்ந்திருந்தான் .

அவள் அண்ணன் ஆர்வத்தோடு அருகில் இருந்த செல்விக்கு  சுட்டு விரலால் இது தான் சின்ன பிள்ளைகள் கொம்பியூட்டர் .நல்லா விளையாடலாம்,படிக்கலாம்  என்றான் . 

(ஐந்து வயது பிள்ளைகளுக்கென மிகவும் இலகுவான முறையில் ஆங்கிலம் கற்க கணணியை அறிமுகப்படுத்தி இருந்தனர் .அதை தான் அவன் மடியில் வைத்திருந்தான் .)
அவளும் சின்னக்கைகளால் அதை எடுத்து பார்த்துக்கொண்டிருக்க அப்பா வந்து தூக்கினார் . முதுகுப்பக்கமாக அவளை தூக்கி வைத்திருந்தார் . 

ஒரு கையில் செல்வியும் இன்னொரு கையில் அரிசியில் எழுதுவதற்காக அரிசிப்பையையும் அப்பா கோயிலுக்கு தூக்கிக்கொண்டு புறப்பட்டார் . "அ" எழுதுவதற்காக ......
.
 கைகளுக்குள் மடங்கியிருந்த கணணிப்படத்தையே  பார்த்துக்கொண்டிருந்தது அவள் கண்கள் ......

Comments

// . இந்தப்பிள்ளை படிக்காட்டி என்னை ராசியில்லாதவன் ன்னு சொல்லீடுவானுன்களோ என்று .//
its true . thanks for sharing.
Valaakam said…
நன்றாக இருக்கிறது... இன்னும்... ஹை லெவெலில் வேனும் எனக்கு... :)
தொடர்ந்து எழுதுங்கள்... சொந்த முயற்சி பப்ளிஸ் ஆகல என்கிற கவலை வேண்டாம்...
ஆரம்பத்தில் எல்லாம் இப்படித்தான் இருக்கும்... காரணம்... நீங்கள் ஒன்றும் சினிமாவை பற்றி எழுதவில்லையே... :)
வாழ்த்துக்கள்.
நன்றி சரவணன் :)
மிக்க நன்றி பிரபு ..ஊக்கத்திற்கு நன்றிகள் .. நிச்சயமாய் உங்கள் எதிர்பார்ப்புக்கு இன்னும் எழுத முயற்ச்சிக்கிறேன் ... :)
ஆம். எமது பிள்ளைகள் பெரும் தூரம் கடக்க வேண்டியுள்ளது. ஆயினும் முயற்சித்தால் சாத்தியமாகும். மடிக் கணணி உட்பட.
roshaniee said…
பகிர்வுக்கு நன்றி
உங்க எழுத்து நடை அருமை,இலங்கைத்தமிழ் கலந்து இருக்கறதால வாசிக்க புதுமையா இருக்குகதையில் இன்னும் வேகத்தை கூட்ட சூழ்நிலைகள் வர்ணனைகளை குறைக்கவும் சுஜாதா போல் வர வாழ்த்துக்கள்

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...