Skip to main content

காமினிக்கு புரியாத புதிர் - (சவால் சிறுகதை ) அறிவியல் விளக்கம்

வழமைக்கு மாறாக நகரின் அரச  மருத்துவமனையில் ஒரே ஆரவாரம், கூச்சல் . மருத்துவ தாதி ,மருத்துவர் என  ஒவ்வொரு மனிதர்களும் தன்னிலை மறந்து அவர் அவர் உலகத்தில் வேகமாக வேலைகளை செய்துகொண்டிருந்தனர் .நோயாளிகள்  காத்திருக்கும் இடத்தில் மேலே தொங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்ச்சியில் அவசர செய்திகள் ஒலித்த வண்ணம் இருந்தன.

அவற்றுள்  மிகவும் வித்தியாசமாய் கறுப்பு ஆடையுடன்,வளர்ந்த மிடுக்கான தோற்றமுடைய  பரந்தாமன் பத்திரிக்கை முகத்தை மறைக்கும் படியாக அதனை விரித்து அதில்  இருக்கும் விளம்பர படங்களை சீரியஸாக பார்த்துக்கொண்டிருந்தார் .அவர் பெயர் ஆடையில் பொறிக்கப்பட்டிருந்தது .  

அவர் காதுகளுக்குள் இன்று காலை நகரத்தில் போலீசாருக்கும்,மாபியாவின் மிகப்பெரிய கடத்தல்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி துப்பாக்கி சமரில் காயமடைந்தவர்கள் அரச மருத்துவமையில் அனுமதி என்ற செய்தி கேட்டது ஆனால் அவர் மூளை அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏற்க்கனவே அதை அறிந்தவராய் சிந்தனைக்கும் பகுத்தறிவிற்கும் வேறு எங்கேயோ வேலை கொடுத்துக்கொண்டிருந்தார் .

அதற்க்கு  மேலே முதலாவது மாடியில் காயமடைந்தவர்கள் குளிரூட்டப்பட்ட தொடர் அறைகளில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர் .

அதில் ஒரு அறையில்  காமினி கையில் பட்ட பலத்த காயத்துடன் படுத்திருந்தாள்.அவள் உடல் விளையாட்டு வீராங்கனை போல திடமாக இருந்தது . அவளின் உறக்கத்தின் ஆரம்ப மயக்க நிலையில் டயமண்டை கைப்பற்ற  முடியவில்லை என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது .

 அப்படியே உறக்கத்தின் இரண்டாம் ,மூன்றாம் நிலைகளுக்கு சென்று நான்காம் நிலையில் தசை நார்கள் அசைவில்லாமல் இருக்க உறங்கிவிட்டாள் . 

 டாக்டர் இளமாறன் மட்டும் மருத்துவமனையில் தனித்துவமாக இயங்கினார் .அன்று ஓய்வு நாள் ,திடீரென வந்திருந்தார் .காயமடைந்திருந்த  கடத்தல்காரன் கைகளுக்குள் ஆபரேட் செய்து வைக்கப்பட்டிருந்த டயமண்டை பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக சாதாரண பெண்ணான காமினியின் காயமடைந்த கைகளுக்குள் செலுத்திவிடலாம் என எண்ணி 90 நிமிடங்களின் பின்னர் காமினியின் அறையில் பரிசோதிப்பது போல நுழைய அங்கிருந்த காவலர்கள் நகர்ந்தனர்  . 

90  நிமிடங்களில் ஐந்தாம் உறக்க நிலைக்கு சென்ற அவள் (REM sleep ) ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் . "கனவு காணும் நேரம் பெண்ணே நீ " என மனதிற்குள் டாக்ட்டர் பாடிக்கொண்டு மிக அருகில் வந்து  கையினுள்  டயமெண்டை செருக முடப்பட்ட போது அவர் அடிவயிற்றில் தொடர்ந்து இரு உதைகள் அவள் கால்களால் கொடுக்கப்பட்டது  .

ஐயோ அம்மா என்று டாக்ட்டர் கத்த,அவர் கை தசை நார்கள் விருந்து கொடுக்க டயமென்ட்  கீழே விழுந்தது .
 இவ்வளவுக்கும் அவள் இன்னும் உறக்கத்தில் ,ஆனால் டாக்ட்டர் வலி தாங்க முடியாமல் கத்தினார் . மடங்கி சுருண்டு கீழே விழுந்து விட்டார் .குளிரூட்டப்பட்ட அறை என்பதால் வெளியில் கேட்கவில்லை . ஆனால் காமினி விழித்து   விட்டாள் .

 டயமென்ட் உருளுவதை கண்ட அவள் எண்ணத்தில் எதுவும் தோன்றவில்லை ,எவரையும் எதையும் நம்பாதே தப்பித்துவிடு என அவள் அறிவு சொல்லியது . 

விழுந்திருந்த டாக்ட்டர் க்கு என்ன ஆச்சு என மனது கேள்வி கேட்டது , ஆனால் அறிவு சொல்வதையே அப்போது கேட்டாள் .  

உடனே பிஸ்டலை எடுத்தாள். இதை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் இருந்து மீளாது தன்னை   சுதாகரித்து கொண்டு வெளியே கோபம்,பயம் ,வஞ்சகம் கலந்த சிந்தனையோடு சென்றார் .  .

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

வெளியே சென்ற டாக்ட்டர் தமக்கு டயமென்ட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற கோபம் கலந்த விரக்தியுடன் போலீசாரிடம் " காமினியும்  அந்த கூட்டத்தில் ஒருத்தி டயமெண்டை வைத்திருந்தாள் ,தப்பித்து ஓடிவிட்டாள் என்ற முடிக்காத வசனங்களை விழுங்கினார்.

சுதாகரித்து  கொண்ட மருத்துவமனைக்கு வெளியே இருந்த போலீஸ் அதிகாரி சிவாவின் கண்களில் அகப்பட முதலில் பெண் என்று பார்த்தவன்  

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

கணப்பொழுதுகளில் சுதாகரித்த காமினியில் துப்பாக்கி சிவாவின் நெற்றியையும் பதம் பார்த்தது . இன்னொரு கையால் தனது அடையாள அட்டையை எடுத்து காட்டினால் .

சிவா சிரித்துக்கொண்டே" உனது வேகமும் வீரமும் நீ ஒரு புலனாய்வுத்துறை அதிகாரி என்பதை காட்டுகிறது " என வாழ்த்தினான்  ..
"வாழ்த்தும் நேரம் இல்லை மிகுதிப்பேரை கைது செய் "என காமினி கூற சிவா மருத்துவமனையுள்ளே  விரைந்தான்  .

அங்கே வந்த பரந்தாமன் 
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

பரந்தாமன் பாராட்டிக்கொண்டே தனது ரிவால்வரை  எடுப்பதை உணர்ந்த காமினி அவன் சிந்திக்க முதல் தனது செயலை துப்பாக்கியால் செய்துவிட்டாள் .

பாவம் பரந்தாமன் டாக்ட்டர் போல அவனும் அவள் யார் என்று அறிந்திருக்கவில்லை போல ...

காமினியும் புரியாத புதிர் போல டாக்ட்டர் ஏன் கீழே விழுந்தார் என யோசித்துக்கொண்டே சென்றாள் ..........


அறிவியல்  விளக்கம் :- சிலருக்கு REM (Rapid eye movement ) உறக்கத்தின் போது தசை நார்கள் அவர்கள் காணும் கனவை பொறுத்து தானாக இயங்கும் . கால் பந்தை உதைப்பது போல கனவு கண்டால் பக்கத்தில் இருப்பவருக்கு தான் உதை விழும் . .

Comments

கதை நல்லா இருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி சௌந்தர் ....பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும்
Valaakam said…
சூப்பரா இருக்கு...:)
<3
பட்... இது போதாது எனக்கு... இன்னும் வேனும்... :D கம் ஒன்... :D
சுதர்சன் கதை நடை அருமையாக இருக்கிறது... தங்களத ஆர்.இ.எம் பற்றி நானும் நன்கு அறிந்திருக்கிறேன்.. நான் ஞாபகசத்தி பற்றி ஆராய்கையில் canong என்ற பத்தகத்தில் தான் கிடைத்தது... அது பற்றித் தெரிந்ததை எழுதுங்கள்...
இதை சிறுபிள்ளைகளில் வடிவாக அவதானிக்கலாம்...
// வளாகம் said...
சூப்பரா இருக்கு...:)
<3
பட்... இது போதாது எனக்கு... இன்னும் வேனும்... :D கம் ஒன்... //

நிச்ச்சயம் நண்பா ... தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன் .. உற்சாகத்திற்கு நன்றி தோழா :)
//ம.தி.சுதா said...
சுதர்சன் கதை நடை அருமையாக இருக்கிறது... தங்களத ஆர்.இ.எம் பற்றி நானும் நன்கு அறிந்திருக்கிறேன்.. நான் ஞாபகசத்தி பற்றி ஆராய்கையில் canong என்ற பத்தகத்தில் தான் கிடைத்தது... அது பற்றித் தெரிந்ததை எழுதுங்கள்...
இதை சிறுபிள்ளைகளில் வடிவாக அவதானிக்கலாம்..//

நன்றி மதி சுதா நிச்சயம் .
வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...