Skip to main content

பொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பேசலாம்

பேசுவதற்கு  கூச்சமா ?அதுவும் ஒரு சமூகத்தில், வேலை பார்க்கும் இடங்களில் அல்லது முதன்முதலாக ஒரு மேடையில் ஏறி பேசுவதோ அல்லது ஒரு குழு முன்பாக கதைப்பதற்கோ பலருக்கு தயக்கம் உண்டு .. ஆனால் இவற்றை இல்லாமல் செய்யலாம் .

முன்னோர்கள் உரைகளை பின்பற்றல் 


நீங்கள் எதிர் காலத்தில் மேடையில் ஏறி  பேசுவதற்கு  வாய்ப்பு கிடைத்தால் கூச்சம் வேண்டாம் . மிகத்திறமையான பேச்சாளர்களை இப்போதே பின்பற்றுங்கள் .அவர்களின் நடை உடை பாவனை ,கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் என்பவற்றை கவனியுங்கள் ..
அப்பிள் நிறுவன CEO வின் பல்கலைக்கழக உரை .- ஸ்டீவ் ஜொப்ஸ் 


கூர்மையான கவனம் - நிலைத்திருத்தல் 

சுய நினைவை நிலை நிறுத்த வேண்டும் . ஒரு பொது அறையில் பேசும் போது அனைவரும் உங்களையே கவனிப்பார்கள் என்பதை ஞாபகப்படுத்தவேண்டும். நீங்கள் சிறப்பாக உள்ளீர்கள் என உறுதிப்படுத்த வேண்டும்


மிகவும் சௌகரியமாகவும் தொழிலாளியாகவும்(proffesional ) உடை அணிவது முக்கியம் .

கருவை உள் வாங்கல் 


என்ன  பேசப்போகிறோம் என்பதை சரியாக விளங்கி கொள்ள வேண்டும் . தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் . எண்ண பேசப்போகிறோமோ அதை  உள் வாங்கி அதன் திட்டத்தை கூறலாம் .

ஒரு வரைபடமாக கொண்டு சென்று அதை மேலும் விரிவாக்கி விளங்கப்படுத்தலாம் . 


பயிற்சி 


பேசுவதற்கு தயாராகிய உடன் . அதை மீண்டும்மீண்டும்வாசித்து பார்க்கலாம் .பின்னர் கண்ணாடி முன் நின்று பயிற்சி செய்யலாம் . அல்லது வீட்டில் இருக்கும் ஒருவரின் முன்னிலையில் அதை பேசி காட்டலாம் .


சுயவிம்பம் 
உங்கள் மீதான தான் நம்பிக்கை மிக முக்கியம் .சரிவராது என்று எண்ணினால் உண்மையில் சரிவராது .  நன்றாக செய்வேன் என்று எண்ணினால்  நிச்சயம்  நன்றாக செய்வீர்கள் .

பார்வையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் 
நீங்கள் யாருக்கு உரை நிகழ்த்த போகிறீர்கள் என்று யோசித்து அதட்க்கு ஏற்றவாறு   அவர்களுக்கு ஏற்றவாறு உரை இருக்க வேண்டும் .


மாணவர்களாக இருந்தால் உங்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள பார்ப்பார்கள் , நண்பர்களாக இருந்தால் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக இருக்க வேண்டும் . யாராவது பெரியவர்கள் என்றால்  அவர்களை சம்மதிக்க வைப்பது போல அமைய வேண்டும் .....


பொறுமை -அமைதி 

சிலர் உடனே ஏதாவது ஒரு வசனம் மறந்து விட்டால் டென்ஷன் ஆகி விடுவார்கள் . ஒரு ச்லயிட்ஸ் விளங்காவிட்டால் அதை விட்டு விட்டு செல்வதில் தவறில்லை . அதற்காக ஒருவரும் தண்டிக்க போவதில்லை . இது வெறும் உரையே ..இதற்காக யாரும்தண்டிக்க போவதில்லை .

கூச்ச சுபாவம் தவிர்க்க ...

கூடுதலாக கண்ணை பார்த்து பேசுபவர்களை தான் பார்வையாளர்கள் நம்புவர்கள் , நிலத்தை பார்த்து பேச கூடாது . தலை நிமிர்ந்திருக்கும் போது உங்கள்மீது உங்களுக்கே நம்பிக்கை கூடும் .

சிரிப்பாக நகைச்சுவையாக பேசுதல் .

அதற்க்கு ஒன்றும் பெரிய நகைச்சுவையாளனாக இருக்க தேவையில்லை . சிறு வசனங்கள் மூலமே பார்வையாளர்களை சிரிக்க வைக்கலாம் . சிரிப்பை விரும்பாதவர்கள் யாராக இருக்க முடியும் .எப்போதும் சிறு புன்னகையுடன் பேசுங்கள் .


கேட்ப்போரை கட்டாயப்படுத்தல் . 

வைச்சு அறுக்காதீங்க .. தேவையான  விடயத்தை குறுகிய காலப்பகுதியில் கூறினால் போதும். அவர்களை  வேறுதிசைகளில் கவனத்தை திருப்ப விடாதீர்கள் .


நீங்கள் நீங்களாக இருங்கள் .
தவறுகள் விடுவது தவறு உரைகளில் .. அதில் பிரச்சனையே இல்லை .உங்கள் நடத்தையிலோ  உரைகளிலோ நீங்கள் நீங்களாகவே  இருங்கள் .


இதை எழுதும்  போதே அதிக தன்னம்பிக்கை வருகிறது. 

Comments

calmmen said…
மிக உபயோகமான பதிவு , இது போன்று நிறைய எழுதுங்கள்


http://karurkirukkan.blogspot.com/2010/07/blog-post_6879.html
நிச்சயமாக ... மிகவும் நன்றி
shammi's blog said…
nice one keep writing and sharing

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ