Skip to main content

மலரினும் மெல்லிது காமம் 04 - பருகுதல்



Loving is a journey with water and with stars
with smothered air and abrupt storms of flour:
loving is a clash of lightning-bolts
and two bodies defeated by a single drop of honey. - Neruda

காதல் மொழியைப் பொறுத்தவரையில், "பருகுதல்" என்கிற சொல் ஒருவித தீவிரத் தன்மையைக் குறிப்பது. காதல் தன் துணையைச் சுமை என்று அறியாது. அதேபோல, உயிர் உறையும் காமத்தில்/காதலில் சகலதும் தூய்மையானது. 

பருகுவன்ன காதலொடு திருகி
மெய் புகுவன்ன கை கவர் முயக்கம் 

பருகுதலை உடைய தீவிரக் காதலில் ஒருவரையொருவர் முயங்கி உறங்குகிறார்கள். இருவரும் ஒருவரே போன்று தழுவி இருக்கிறார்கள். அப்படி இருக்கிறவர்கள்கூட புலம்புகிற அளவுக்குக் கொடியது இந்த மழையும் வாடைக்காற்றும் என்று அகநானூற்றுத் தலைவி சொல்கிறாள். தலைவன் இருந்திருந்தால் மழைத்துளி பட்ட இதழ்களைப் பருகி இருப்பான் என்கிற ஏக்கம் அவளுக்கு இருக்கலாம். 

சங்கப்பாடல்களில் அகநானூறு, பரிபாடல், கலித்தொகை எல்லாம் தலைவன் பரத்தையரோடும் தலைவியரோடும் நீராடுவது பற்றிச் சொல்கின்றன. தலைவன் மார்பை தெப்பம் என்று நினைத்து பெண்கள் ஆடுவர். 

பெண்கள் வைகையில் நீராடுவர்.  பெண் ஒருத்தி மார்பில் சந்தனச் சாந்து/ பூச் சாந்து  பூசி வைகையில் நீராடுகிறாள். தன் மார்பில் பூசிய சாந்தை அவள் துடைக்கவில்லை. வெண் துகிலெடுத்து மூடுகிறாள். சிவந்த நீரைத் துகிலால் மூடினால் எப்படியிருக்கும்! பூ நறுமணத்தோடு மலர்ந்திருப்பது போல தோற்றம். தலைவன் நெருங்கி அவள் மார்பிலிருந்த சிவந்த நீரைத் துடைத்துவிட்டுக் கூடுகிறான். அவன் மருவியதும் அவள் பூத்து நிற்பதைப் பரிபாடல் பதிகிறது. பெண்கள் குளித்துவிட்டுப் போன நீர் நிறம் பெற்று அத்தனை அழகோடு விளங்கியதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

கொடுத்து வைத்த நதி! அவள்  குளித்த சுகத்தைச் சுமந்து நிற்கிறது. சிவப்பு நிறம் கொண்டு நாணம் பூத்து நிற்கிறது. நீர் நுழையா இடம் ஏது!  வைரமுத்துவின் தலைவன் அவள் குளித்த சுகத்தைக் கேட்கிறான். தொழுகின்ற காதலை வைரமுத்து பிழை விடாது சரியாகப் பிரதிபலித்தார். "தீர்த்தம்" என்கிற சொல் மொத்த வரியையும் சீர்படுத்தி நிற்கிறது. 

"தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்."

மழையிலும், நீரோடும் அவளோடு கூடும் பொழுதிலே வடிகின்ற துளிகளோடு  சேர்த்து அவளையும் பருகும் காதல். மடலிலே நீர்த்துளி கொண்ட பூக்கள் ஒரு புது ஒளி பெற்று விளங்குவதுபோல, இரு உடல்களிடையே  நீரோடு கொள்ளும் காதல் எக்கணமும் புதிது.
"Loving is a journey with water and with stars

Comments

Unknown said…
அருமை;)

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ