ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே, பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன நறுந்தண் ணியளே நன்மா மேனி மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

Comments
ஒரு வாழ்வு முறைகளில் தலைமுறைகள் முன்னோக்கி செல்லும் ஒரு மேம்பட்ட குடும்பத்திலிருந்து வளர்ந்த பொண்ணை காதலிக்கிறார்.. எல்லா இடங்களிலும் ரியாலிட்டியை விட்டுக்கொடுக்காத இயக்குனர் இங்கு மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம் காட்டிவிட்டார்.. இதே காரணங்களுக்காக காதலிக்காமல் இருக்கும் நண்பர்கள் நிறைய எனக்கு தெரியும்.நானும் அத்தகையோனே.. உணக்கெதுக்குடா தேவ இல்லாத வேலைன்னு திட்டிக்கொண்டே படம் பார்த்து முடித்தேன்..