Skip to main content

கவிதாஞ்சலி 5

மணிரத்னத்தின் 'இராவணன்' திரைப்படத்தில் வீரா(இராவணன்) ஒரு மிகப்பெரிய கூட்டத்துக்குத் தலைவன். மிகுந்த பலசாலி. இந்த இராவணனுக்குக் காதல் வருகிறது.  "உசுரே போகுதே" என்கிற பாடல் காதல் வசப்பட்ட அவனது மனநிலையைச் சொல்கிறது. அதன் துடிப்பைச் சொல்கிறது. அவ்வளவு திறமையான ஒரு மகாவீரன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு தன்னிலை மறந்துபோகிறான். காதல் எதனையும் பொருட்படுத்துவதில்லை என்று சொல்லுவார்கள். இங்கே அவன் நிலையையே  அவன் பொருட்படுத்தவில்லை. என்னை இந்தப் பெண் வருத்துகிறாளே என்று அவன் சொல்கிறபடி பாடல் அமைகிறது.

இதேபோல குறுந்தொகையில் தலைவனுக்குக் குழப்பம் வருகிறது. வருகிற வழியில் "உனக்கு என்ன ஆச்சு"ன்னு பாங்கன் கேட்கத் தலைவன் இப்படிச் சொல்கிறான்.
"வெள்ளைப் பாம்போட சின்னக் குட்டிப் பாம்பு இருக்கே! அதுக்கு உடம்பெல்லாம் வரி வரியா இருக்கும். ரொம்பச் சின்னது. ஒரு பெரிய காட்டு யானைகூட அதைப் பாத்துச்சுன்னா நிலைகுலைந்து போய்டும் ! அதுபோல இந்த இளையவளின் நாணல் முளை போன்ற ஒளிரும் பற்களும் வளைக்கரங்களும் இத்தனை படைகள் வென்ற என்னை நிலைகுலையைச் செய்கிறதே!" என்கிறான். அவள் இளமையும் வளையல்களும் பாம்பின் இளமைக்கும் வரிகளுக்கும் ஒப்பிடப்படுகிறது. இப்படியாக அவளுடைய சிறிய பாகங்களும் என்னை வறுத்துகிறதே என்று அவன் சொல்கிறான்.
பாடல் :
சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கியாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் எம் அணங்கியோளே

இப்படியான ஒப்பீடுகளை வைரமுத்துவின் வரிகளில் அதிகம் கவனிக்கலாம். உதாரணமாக , "என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்", " கூந்தல் நெழிவில் எழில்கோலச் சரிவில் என் கர்வம் அழிந்ததடி" போன்ற வரிகளைக் குறிப்பிடலாம். வைரமுத்துவின் வரிகளில் பெண்கள் ஆண்களின் கர்வத்தை அடக்கிவிடுவார்கள்.  ஆனால், " உசுரே போகுதே" என்கிற  பாடலிலும் "காட்டுச் சிறுக்கி"யிலும் இப்படியான ஒப்பீடுகள் அதிகம். இராவணன் ஒரு பெரிய படைத்தலைவன். அவனுக்குக் காதல் வந்தால் எப்படியிருக்கும் என்று எழுதுகிறார் வைரமுத்து. அவள் ஏற்கனவே திருமணமான பெண். ஆதலால்  இந்தக் காதல் பிழையானது, ஆபத்தானது என்றும் அவனுக்குத் தெரியும். இருந்தும் அவளுடைய சின்ன பாகங்களின் அசைவுகளும் அவனை வருத்துகிறது.

அடி தேக்கு மரக்காடு பெருசுதான் சின்னத் தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே

குறுந்தொகையில் தலைவன் அவளைச் சிறிய பாம்போடு ஒப்பிடுகிறான். பாம்பைக் கண்டு யானை அஞ்சுகிறது. அதேபோல இவனுக்கும் அச்சம். காரணம், இந்தக் காதல் பிழையானது என்பதை அவன் அறிவான். இருந்தாலும் இந்தக் காதல் மயக்கம்  இவனை அச்சம் கொள்ள வைக்காமல் வழிதவறிச்செல்லச் சொல்கிறது. இதை "பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே! பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே" என்று வைரமுத்து தன் வரிகளில் வடித்திருப்பார். 

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...