Skip to main content

சுஜாதா கணக்கு

செயற்கையாக உருவாக்கிக்கொண்டிருக்கிற  இலக்கிய முகத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியில் ஒன்றாக சுஜாதாவை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தச் செயற்கையான முகம் சுஜாதாவுக்கு இருந்ததில்லை. அதனாலேயே சுஜாதாவை இலகுவாகத்  தொட்டுவிடமுடிகிறது. 
பிற எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தபின்னர் சுஜாதா மட்டுமே எழுத்தாளர் இல்லை என்பது தெரியவரும். அதேநேரம் அவரைச் சரியாக உள்வாங்கிக்கொண்டிருந்தால் அவரின் அசைக்கமுடியாத தனித்துவமும் வெளிப்படும். காரணம், அவரை ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் வகைப்படுத்தி ஒப்பிட்டுப்பார்க்கமுடியாது. ஒரு அடிப்படை வாசகனுக்கு அவர் தருகிற மகிழ்ச்சி வித்தியாசமானது.
சுஜாதா எழுத்தை ஒரு தொழிலாகச் செய்தவர். எழுத்தில் உணர்ச்சிபூர்வமான உள்ளடக்கங்கள் இல்லை என்று நினைத்தவர். அதனைச் அவரே  நேர்காணல்களில் சொன்னதுண்டு. 
"ஒரு புகழ் அடையணுங்கிறதைவிட ஒரு Classification (பாகுபாட்டுக்குள்) அகப்படக்கூடாது என்கிற எண்ணம். எல்லா எழுத்தாளர்களையும் இன்ன வகுப்பைச் சார்ந்தவங்கன்னு பிரிச்சுடலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை 'இந்த ஆளை வைச்சுகிட்டு என்ன பண்ணுறது' தெரியாமல் தவிக்கிறாங்க. நான் விஞ்ஞானியாக இருக்கிறதால, எழுவதே முன்ன சொன்னதுபோல எனக்கு கிராப்ட்(தொழில்நேர்த்தி) ஆகத்தான் படுது."
என்று வெளிப்படையாகச் சொன்னவரை, ஒரு கட்டுப்பாட்டுக்குள் நின்றுகொண்டு விலக்கிவைப்பது அபத்தமாகப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை தமிழில் வந்த எழுத்தாளர்களில் சுஜாதா ஒரு Polymath. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. சுஜாதா ஒரு விடயத்தைப் பேசுகிறபோது அதனை எளிமையாக தொடர்புபடுத்துகிற மாதிரி எந்த எழுத்தாளர்களும் தொடர்புபடுத்துவதில்லை. அதற்கு எல்லாப் பிரிவுகளிலும் நாட்டம் வேண்டும். ஒரு விடயத்தை உணர்ச்சிபூர்வமாக மட்டுமே அணுகாமல் விட்டால்த்தான் அந்தப் பார்வை கிடைக்கும். 

"வெகுஜனப் பத்திரிகையைப் பொறுத்தவரையில் அவர்கள் என்னை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள், நான் அவங்களை உபயோகப்படுத்திக்கிறேன். Mutual exploitation."
எல்லா வாசகர்களினாலும் ஒரு சாதாரண வாசிப்பை நிகழ்த்திடமுடியும். ஒரு புத்தகத்தையோ, எழுத்தாளரையோ ஒரேமாதிரி உள்வாங்கிக்கொள்ளமுடிவதில்லை. வசனநடையில் புதுமைப்பித்தனின் சாயலைக் கொஞ்சம் கொண்டவர் சுஜாதா. ஒருகாலத்தில் புதுமைப்பித்தனையே விமர்சித்தவர்கள் உண்டு. சுஜாதாவின் வாசகர்களிடமும் அவரின் சாயல் இருப்பது இயல்பு. புதுமைப்பித்தனின் பாதிப்பு இல்லாமல் எப்படி ஒருவரால் எழுதமுடியாதோ, அதேபோலத்தான் சுஜாதாவின் பாதிப்பு இன்றி எழுதமுடியாது. சுஜாதாவே வந்து சொல்லாதவரை, அவரின் வாரிசு என்று சிலர் தங்களைத்தாங்களே மார்தட்டிக்கொள்ளகூடும். ஆனால் அவரைச் சரியாகப் பயன்படுத்தி, அவர் வழியில் தமிழ் வாசகர்களைக் கொண்டு செல்கிறார்களா என்கிற சந்தேகம் மட்டும் இருக்கிறது.
தேடலைச் சொல்லிக்கொடுக்கிற எழுத்தாளர் சுஜாதா. வாசிக்கிறவர்களின் மூளைக்கும் தேடலும் நிறைய  வேலைகள் இருக்கும். புத்தகத்தை மூடிவிட்டு அவர் சொன்ன விஷயங்களைத் தேடித் படிப்பவர்களுக்கு  மட்டுமே அவரின் எழுத்தில் நிறையக் கிடைக்கும்.  
உதாரணத்துக்கு, எனக்கு சுஜாதாவின் எழுத்தில் உள்ள Cataloguing உத்தி பிடிக்கும். அதை நான் பின்பற்றுவதுண்டு. சில முறைகள் ஆச்சரியப்படுத்தலை நிகழ்த்தக்கூடியது. சிலருக்கு புத்தகம் படித்தால் cognitive dissonance ஏற்படும்.எத்தனை எழுத்தாளர்களை வாசித்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் உண்டு. ஆனால் ஆரம்பம்தான் உளவியலில் ஒரு சமநிலையை உருவாக்கித்தரவேண்டும். சுஜாதாவைச் சரியாகப் படித்தவர்களிடம் அந்தச் சமநிலை இருக்கும். 

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...