Skip to main content

கோபல்ல கிராமம் 2/36 [புத்தகங்கள்2015]

சொற்களுக்கிடையேயான இடைவெளிகள், அவை ஒவ்வொன்றும் வந்துவிழும் போக்கு, ஒலிநயம் போன்றவை  வாசிப்பிற்கு அர்த்தம் சேர்க்கப் போதுமான காரணிகளில் சில எனலாம். கி. ராஜநாராயணனின் எழுத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிற வேலையை மட்டுமே "கோபல்ல கிராமம்" என்கிற அவரது நாவல் செய்தது. மிகுதியை அவரின் கதை சொல்லும் முறையும், ஒரு கதை சொல்லியைக் கையாள்கிற லாவகமுமே மேற்கொண்டது. 


கணவனோடு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருகிற பெண்ணோடு  ஆரம்பிக்கிற கதை, பிரிட்டிஷ் மகாராணியின் நேரடி ஆட்சியின்  கீழ் இந்தியா கொண்டுவரப்படும் காலம்வரை நீள்கிறது.  அப்போதைய காலங்களில் கிராமங்களில்  நிலவிய நம்பிக்கைகள், ஆட்சி முறைகள், மனித உணர்வுகள், வட்டாரா மொழிகள் என அனைத்தையும் உள்வாங்கி வைத்திருக்கிறது இந்தக் கோபல்ல கிராமம்.

எழுத்தில் இருக்கும் இரசனைத்தன்மையை அனுபவிக்கிற அனிச்சையான 'அந்த' நிகழ்தலை எல்லா எழுத்துகளும் நிகழ்த்துவதில்லை. சாதாரண கிராம மக்களின் அன்றாடச்  செயற்பாடுகளை  விபரிக்கிற விதம்  அழகு. தொடுக்கப்படுகிற வசனங்களின் தொடர்ச்சியான அழகியல் அழகு. ஒரு நிறைவான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.

தண்ணீர் ஒரு அரிய செல்வம். செல்வமானது இப்படி ஒரு இடத்தில், தனிமையாகத் தேங்கிக் கிடந்தால் அங்கே என்னதான் நடக்காது?
நண்டு தனது சொந்த சௌகரியத்துக்காக வளைதோண்டி வைத்திருக்கிறது. ஆனால் அங்கே இந்தக் குரவை மீனுக்கு என்ன சோலி? அந்த வளை, நீரின் நிலையை ஒட்டி அதன் சிற்றலைகள் அந்த வளைக்குள் சென்று வரும்படியாக அமைந்திருக்கும். மண்ணும் தண்ணீரும் சேர்ந்து பதப்பட்டிருக்கும் அந்தச் சொத மண்ணில் வசிக்கும் மண்புழுவைத் தின்ன குரவை மீனுக்கு ரொம்பப் பிரியம். அந்தக் குரவை மீனைப் பிடித்துத் தின்ன நாரை ஒற்றைக் காலில் நிற்கிறது. நாரையைப் பிடித்துத் தின்ன நரி பதிபோட்டுக் காத்து நிற்கிறது.

முதலில் மூன்று பாக்கை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். தனித்தனி வெத்திலையாக எடுத்து சுண்ணாம்பு தேய்க்கும் வழக்கம் இல்லை. மும்மூன்று வெத்திலையாகவே எடுத்து, வலமாக சுண்ணாம்பைத் தடவி, இறுக்கமாக மடித்து வாயில் இட்டு மொறுக் மொறுக் என்று மெல்லும்போது காதுகளின் பக்கத்தில் மேல்தாடையின் எலும்புப் புடைப்பு மேலும் கீழும் வந்துபோவது தெரியும். 

அவள் அபூர்வமாகத்தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொரு தரம் அப்படிச்சிரிக்கமாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பிலே தான் எத்தனை விதம்!  
கண்களால் மட்டும் சிரித்துக்காட்டுவது.
கண்கள் சிரிப்பதற்கு புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும்!
கடைக்கண்ணால் சிரிப்பது. 
முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்பார்வையில் சிரிப்பது; தரையைப் பார்த்துச் சிரிப்பது. (அவளுடைய சிரிப்பிலே இதுதான் அழகு) கண்களைச் சுழற்றி - பறவையாடவிட்டு - ஒரு சிரிப்புக் காட்டுவாள் (அப்போது கண்கள் ஜொலிக்கும்) சில சமயம், சற்றே மூக்கை மட்டும் விரித்து மூக்கிலும் ஒரு சிரிப்பை வரவழைப்பாள்!



Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ