Skip to main content

இரண்டாம் உலகம் - Universe or Multiverse ?

இரண்டாம் உலகம் திரைப்படம், Multiverse theory, Membrane theory போன்றவற்றை அடிப்படையாக் கொண்ட திரைப்படம். படத்தில், தியரி பற்றி பெரிய அறிமுகம் ஏதும் கொடுக்கப்படவில்லை. Michio kaku மற்றும் ஐங்ஸ்டைன் சொல்லிய கோட்பாட்டை டைட்டிலில் எளிமையாகப் போட்டார்கள். முக்கியமாக ஐங்ஸ்டைன் முடிக்காமல்( Theory of everything ) விட்டுப்போன கோட்பாடுகளில் ஒன்று. அதில் ஆர்வம் கொண்ட Michio kaku பின்னர் தானும் ஆய்வில் இறங்கினார்.

நம்மைப் போலவே நிறைய உலகங்கள் இருக்கின்றன, அதில் நம்மைப் போலவே பலர் இருப்பார்கள் என்கிற தியரி. உதாரணமாக, நீங்கள் இதை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள், நீங்களே வேறொரு உலகில் இருந்து திபெத்திய போராட்டம் பற்றி வாசித்துக்கொண்டிருக்கலாம். இன்னொரு உலகில், இணையமே இன்னமும் அறிமுகமாகாமல் இருக்கலாம். இன்னமும் நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கிறது.அங்கிருப்பவர்கள் தமிழை மொழியாகக் கொண்டவர்களாகவும் இருக்கலாம். அங்கு இயற்பியல் விதிகள் வேறுமாதிரியாகவும் இருக்கலாம்.

நம்மைப் போன்றவர்களை, அவர்களின் உலகை பார்க்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சூரிய குடும்பத்தில் பூமி இருப்பது போல ,பல்லாயிரக்கணக்கான சூரிய குடும்பங்கள் சேர்ந்தது தான் பால்வீதி. பல லட்சம் பால்வீதிகள் சேர்ந்தது தான் நம் அண்டம்(Universe). நம்முடைய அண்டம் போல பல இலட்சம் அண்டங்கள்(Multiverse) இருக்கலாம் என்கிறார்கள். அதாவது ஒளி கூட சென்றடையாத தூரத்தில் இந்த சாத்தியக்கூறுகள் இருக்கலாம். நம்மைப் போன்றவர்கள் இருக்கலாம். தொடர்ந்து பிங் பாங்(Big Bang) வெடிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது, ஒவ்வொரு நொடியும் புதுசாக ஒவ்வொரு அண்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்கிறது தியரி.

இப்படி மற்ற உலகங்களைப் பார்க்க முடியாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. உதாரணமாக, நம்மால் முப்பரிமாண உலகையே காண முடிகிறது.ஆனால் மொத்தம் பதினொரு பரிமாணங்கள் இருக்கிறது என்கிறது எம் தியரி. அதனால் நம்மைச் சுற்றியே அந்த உலகங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.ஆனால் நம் புலன்களுக்குத் தெரியாது.

இப்படியொரு குழப்பமான தியரியை, திரையில் இயன்றளவு எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

முக்கியமாக தமிழ் சினிமா இரசிகர்களுக்கு ஒரு Science fiction + காதல் கலந்த கதையை கொடுக்க எண்ணியதைப் பாராட்ட வேண்டும். இரண்டு உலகங்களில் கதை நகருகிறது. ஏராளமான உலகங்களில் கதை நகர்ந்துகொண்டிருக்கலாம். திரையில் இரண்டு உலகங்கள் தான் காட்டப்படுகிறது.

இப்படி இரண்டு வேறுபட்ட உலகத்தை இணைப்பது என்பது சவாலான விடயம். நம்மவர்கள் நம்பமாட்டார்கள் எனத் தெரிந்துதான், 'கடவுள்' என்று ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும். முக்கியமாக, இதில் கடவுள் ஒரு பெண். செல்வராகவன் மட்டும் தான் அப்படி சிந்திப்பார்.

இந்த இரண்டு உலகங்களிலும் ஒரே நேரத்தில் கதை நகர்ந்துகொண்டிருக்கும் போது, எதிர்பாராத சில விஷயங்கள் நடக்கிறது. பின்னர் இந்த இரண்டு உலகங்களையும்  தொடர்புபடுத்தி கதை எப்படி நகருகிறது என்பதை திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்களை தைரியமானவர்களாகவும், புத்திசாலியாகவும் காட்டும் இயக்குனர்களுள் செல்வராகவனும் ஒருவர். இந்தப் படத்திலும் கதாநாயகி பாத்திரத்துக்கு கூடுதல் பெறுமதி உண்டு. எல்லோரையும் விட,  இந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பு  சிறப்பாக இருந்தது.

செல்வராகவன் திரைப்படங்களில் வரும் காட்சிகளுக்கு என்று தனித்துவம் உண்டு. காதல் என்றால் என்னவென்று தெரியாத உலகத்தில் வாழும் இருவருக்கிடையே ஏற்படும் காதலை சிறப்பாகக் காட்டியிருப்பார். 

முக்கியமாக CG தொழில்நுட்பத்தை இயன்றளவு சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்குப் பணி புரிந்த அதே அணி. இதில் இன்னும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உழைப்பில் இரண்டு உலகங்களும் மிகவும் அழகு.

மன்னவனே, கனிமொழியே, என் காதல் தீ பாடல்கள் சிறப்பாக இருந்தது. பல தடவைகள் கேட்டிருந்தாலும், காட்சி அமைப்போடு பார்க்கும்போது கூடுதல் அழகு. இதற்கு வைரமுத்துவின் நல்ல தமிழ் வரிகளும் ஒரு காரணம். சில இடங்களில் அனிருத்தின் பின்னணி இசை அவ்வளவாகக் கவரவில்லை.

சில இடங்களில் தியரிகளை விளக்க சிரமப்பட்டது தெரிகிறது. இன்னொரு உலகம் இருந்து, அதில் இந்தப் படத்துக்கு சுஜாதா வசனம் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். தமிழ் இரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என முயன்று சில இடங்களில் சுதப்பியிருக்கிறார் என நினைக்கிறேன்.

மற்றபடி இது தமிழ் சினிமாவில் புதியதொரு முயற்சி. மற்றவர்களும் தைரியமாக இதுபோன்ற கதைகளை எடுத்துச் செய்ய இத்திரைப்படம் தூண்டினால் நல்லது. காதலை எந்தத் தளத்தில், எந்த வடிவில் சொன்னாலும் அது புதியது தான்.' உலகில் காதல் பழையது, உற்ற பொழுதே புதிய ' என்ற வைரமுத்துவின் வரிகள் போல.

தமிழ்சினிமாவில் இதுபோன்ற திரைப்படங்கள் நிறைய வரவேண்டும். இயக்குனர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இரசிகர்களின் கிரியேட்டிவிட்டிக்கு சுதந்திரமான தளத்தைக் உருவாக்கிக் கொடுக்கும் படங்கள் இவை.

“Logic will get you from A to Z; imagination will get you everywhere.” - ஐங்ஸ்டைன். இந்தப் படத்தையும் உங்கள் கற்பனைத் திறனுக்கே சமர்ப்பித்துவிடுங்கள்.

Comments

நீங்க சொல்றதுலாம் சரிதான் ஆனால் இந்த சோதனை முயற்சிக்கு செலவு 60 கோடி ரூபாய்...ஆயிரத்தில் ஒருவனில் cg சொதப்பல் அப்படி இருந்து அதே team ah கொண்டு இந்த படத்திற்கு cg பண்ணிருக்காங்க நீங்களே சொல்லிட்டீங்க இயன்ற அளவிற்குன்னு
அதான் நல்லா இருக்காதுன்னு தெரியுமே அப்போ எதுக்கு cg க்கு செலவு பண்ணிக்கிட்டு 60 கோடி பட்ஜெட் ஆனதுக்கு காரணகம் cg தானாம்...கான்செப்ட் லாம் நல்லா தான் இருக்கு அதை ப்ரெசென்ட் பண்ண விதத்தில்தான் இந்த படம் தோத்து போச்சு, avengers பார்த்தவங்க கிட்ட cartoon காமிச்சா ஒத்துக்க முடியலையே. இரண்டாவது உலகத்துக்கு லாகிக்கா வேற ஏதாவது சொல்லிருக்கலாம்.

அன்பே ஆருயிரே ன்னு ஒரு படம் எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்தது அதுவும் வணிக ரீதியாக தோல்விதான் என்றாலும் பார்வையாளர்களை குழப்பாமல் சொல்லிருப்பாங்க நீல கலர் டிரஸ்ல வர்றவங்க நினைவுகள் மற்றவர்கள் எல்லாம் நிஜம்ன்னு

12b என்னளவில் சிறந்த முயற்சி

இ உ தலைசிறந்த முயற்சி ஆகவேண்டியது..செல்வாவின் மேதமையால் வீணாகிவிட்டது

திடீர்ன்னு ஒன்னு ஞாபகம் வந்துச்சு

உலகில் காதல் பழையது, உற்ற பொழுதே புதிய

பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்

maithriim said…
Beautifully analysed :-) Liked your review along with the scientific explanations. Glad to know that more people appreciate this movie :-)

amas32
Unknown said…
நான் ஒரு மணி நேரம் வரை பார்த்தேன்,பார்த்த வரை(செல்வராகவன்) எதையோ சொல்ல வருகிறார் என்பது புரிந்தது.மீதியையும் பார்ப்போம்!///பல ஆண்டுகளுக்கு முன் புனர் ஜென்மத்தை அடிப்படையாக வைத்து 'சாவித்திரி' அம்மா தயாரித்த "பிராப்தம்"என்ற திரைக் காவியமும் இவ்வாறானதே!அந்தப் படத்துடன்,அம்மா சம்பாதித்த அத்தனை சொத்தும் போச்சு!இப்போது மீளவும் திரைக்கு வந்தால் எம் மக்களுக்குப் புரியுமோ,என்னவோ?ஹூம்!
கருத்துக்கு நன்றி கார்த்திக் கவி,

இந்தப் படத்தை இன்னும் பலவழிகளில் எடுத்திருக்கலாம்தான். வித்தியாசமாக எத்தனையோ கோணங்களில் யோசித்து இதையே வைத்து நிறைய கதைகள் செய்யலாம்.

இதுவொரு ஆரம்பமாக இருந்தால் நல்லது. இதை வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.

செலவு என்று பார்த்தால், இன்னமும் வயிற்றுக்கு, தெருவுக்கு பெயின்ட் அடிப்பதை எல்லாம் பிரம்மாண்டம் என்று இரசித்துக்கொண்டிருக்கிறோம். அதோடு ஒப்பிடுகையில் CG செலவுகள் வீண்போல தோன்றவில்லை.
Blogger amas said...

Beautifully analysed :-) Liked your review along with the scientific explanations. Glad to know that more people appreciate this movie :-) //

மிக்க நன்றிங்க :-)
Athisaya said…
நன்றிகளும் பாராட்டுக'களும்...!
Athisaya said…
பாராட்டுக்களும் நன்றிகளும்!!!
Trends of India said…
நீங்க எப்ப பழைய மாதிரி எழுத போறீங்க....
Trends of India said…
நீங்க எப்ப பழைய மாதிரி எழுத போறீங்க....

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ