Skip to main content

இமான் மலேகி(Realistic painter) - ஒரு ஓவியனின் ரசனை

நவீன ஓவியங்களை(Modern Arts) பெரிதாக ரசிப்பதில்லை . காரணம் ஒன்றுமே புரிவதில்லை அதை வரைந்தவர்  விளக்கினால் மட்டுமே விளங்கும்.

ஆனால் நான் பார்த்து பிரம்மித்த ஓவியங்கள் அப்படி அல்ல. சாதாரண கண்களுக்கு ரசிப்புத்தன்மை என்பதை விட வியப்பை தரக்கூடியது . ஓவியங்களில் பல வகைகள் இருக்கலாம் அதில் இமான் மலேகி  என்ற மிகச்சிறந்த ஓவியனை  Realistic painter  என்ற வகைக்குள் சேர்க்கலாம் .அதாவது ஒரு நிகழ்வை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் ஓவியங்கள் .  வியப்புக்கான காரணங்களை  பகிர்ந்துகொள்கிறேன் .




இந்த படத்தில் சுவரிலிருந்து தரை வரை வந்திருக்கும் நிழல் .சீமெந்து தரையின் மீது இருக்கும்  வெடிப்புகள் , சுவரில் இருக்கும் அழுக்குகள் ,மாலை வேளை அல்லது காலை வேளையில் வெயில் மரக்கிளைகள் இடையே  வரும் அழகு . தரையில் ஊற்றப்பட்டிருக்கும் நீர் சில இடங்களில் காய்ந்திருக்கிறது என ஒவ்வொன்றையும் ரசிக்கலாம் ..




அமைதியான பெண் போன்ற  முக பாவனை ,தோலில் இருக்கும் மென்மை,உடையில் இருக்கும் மடிப்புகள்,ஓரத்தில் இருக்கும் முடி ஆடைகளில் பட்டு தெறிக்கும் வெளிச்சம் .ஒரு பொருளை பிடித்திருக்கும் போது கை விரல்கள் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது .




மேலே இருக்கும் பெண் தலையில் அணிந்திருக்கும் துணியில் சூரிய ஒளிபட்டு அந்த துணியின் ஊடாக தெரிகிறது .முகத்தில்  சுருக்கம் இல்லாவிட்டாலும் தெரியும் முதுமைப்பருவம் . புத்தகத்தை திறக்கும் போது கை நரம்புகள் . ஆடையின் மடிப்புகள் . கீழே இருக்கும் இளமையான பெண்ணின் நீள் காட்ச்சட்டையில் உள்ள மடிப்புகள் . ஒவ்வொரு இழையையும் பார்த்து பார்த்து கீறியிருக்கிறார் .


இதே படத்தை இன்னும் கிட்டவாக பார்ததால் ஆடையை இழை இலையாக செதுக்கியிருக்கிறார் என எண்ணத்தோன்றும் . கையில் தெரியும் நாளங்கள் முதல்க்கொண்டு அனைத்தும் உண்மையான படமோ என எண்ணத்தோன்றும் .


நிழல்களிநூடு தெரியும் ஒளி ,செருப்பின் மீதிருக்கும் அழுக்கு .பூச்சாடியின் அடியில் இருக்கும் அழுக்கு . சுவரில் இருக்கும் கறை . செங்கல்களுக்கு இடையே இருக்கும் சீமெந்து பூச்சு . சில கட்கள் காலப்போக்கில் நிறம் மாறும் .அதை கூட அப்படியே வரைந்திருக்கிறார் . எதையோ கொறித்துக்கொண்டிருக்கும் குருவிகளில் நிழலை கூட கீறியிருக்கிறார் .


இப்படி ஒவ்வொரு படங்களையும் ரசித்துக்கொண்டிருக்கலாம் . 


மேலும் படங்களை பெரிதாக பார்க்க click here


வளர்ந்து வரும் ஈரானை சேர்ந்த இந்த பிரபலமான ஓவியனின் இணையத்தளம் :- Click here 

Comments

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...