Skip to main content

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

முதலில் பாலியல் தெளிவூட்டும் இப்படி மன பக்குவம் அடைந்தவர்களுக்கான(18 +) படங்கள் எடுப்பதற்கு தைரியம் வேண்டும்.அதுவும் முக்கியமாக எமது சமுதாயம் இன்னும் பகுத்தறிவு ,மனப்பக்குவம் அடையாத நிலையில் .ஆனாலும் கவுதம் தெளிவாக சொல்லியிருக்கிறார் பக்குவநிலையை அடைந்தவர்களுக்கான படம் என்று .


பலரின் தவறான புரிதலுக்கு உள்ளான ஆரம்ப கதையின் சுருக்கம் .


சிறுவயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் வீராவிடம் சில வருடங்கள்  கழித்து இளம் பராயத்தில் ஏற்ப்படும் மனோநிலை மாற்றமே பல பிரச்சனைகளுக்கு வழிகோலுவதுடன் வாழ்க்கையையும் புரட்டிப்போடுகிறது .

சிறுவயதில் தாயை இழந்து ,தனது தந்தையால் பாலியல் வன்புணர்ச்சிக்கு,துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தப்படும் சமீரிட்க்கு(வீராவுக்கு அல்ல ) அவனது பதின்ம வயதில் (Teenage (13 )) அவன் மீது அக்கறை செலுத்தும் பக்கத்து வீட்டு பெண் மீனாட்சி என்பவருடன் பார்த்தவுடனேயே காதல் ஏற்ப்படுகிறது .

இந்த கொடுமைகளை தெரிந்துகொண்ட மீனாட்சி சமீரை காப்பாற்றி தன்னுடன் வைத்துக்கொள்கிறார் .சமீரின் பெயரை வீரா எனவும் மாற்றி அவனை வளர்ந்தார் .வீராவும் மீனாட்சி அம்மா என்று அழைக்க வீரா மீனாட்சி அம்மா உறவில் எந்த களங்கமும் இருக்கவில்லை .வீராவின் நடத்தைகளும் அமைதியாகவே இருந்தது .

 இளம்பருவத்தை அடைந்தபோது தனது சிறுவயதில் சமீராக இருந்த போது ஏற்ப்பட்ட பாலியல் கொடுமைகள் அவனை மீண்டும் சமீராக மாற்றுவதோடு மன அழுத்தம் ,பயம் ,எரிச்சலையும் உண்டாக்குகிறது .சிறுவயதிலேயே பாலியல் நடத்தையின் பால் தூண்டப்பட்ட சமீர் தன்னுடன் இருக்கும்  தான் காதலித்த பெண்ணாக மட்டுமே தெரியும் மீனாட்ச்சியுடன் கட்டாய உறவு வைத்துக்கொள்கிறான்.

தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை ,இனி அப்படி நடக்காது என கூறும் வீரவை புரிந்துகொள்ளாமல் ,ஒரு நல்ல மனநோய் மருத்துவரிடம் காட்டாமல் விட்டத்தில் இருந்து இல்லாத ஒருவரை இருப்பது போல கற்ப்பனை செய்தல்(Hallucinations ) போன்ற பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது .மிகுதியை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .

வீரா என்ற ஒரு மனிதனுக்குள் பல மன போராட்டங்கள் நடக்கிறது .சமீரிடம் இருந்து சில பெண்களை காப்பாற்றி வைத்திருக்கிறேன் என சமீரா ரெட்டியிடமும்  ,போலீசிடம் "நாயை கொன்னுட்டியே நீ எல்லாம் ஒரு மனுசனா" என்று சொல்லுமிடங்கள் வீராவின் குணத்தை தனித்து காட்டுகிறது .


முக்கியமாக படத்தின் ஒலிப்பதிவு ,ஒளிப்பதிவு அருமை.மனோஜ் பரமஹம்சா வின் ஓளிப்பதிவு சொல்லவா வேண்டும் . எந்தவித பின்னணி இசையும் இல்லாமல் இயற்க்கை சப்தங்களை வைத்து சிறப்பான ஒலிப்பதிவு .அதுவும் இறுதியில்  மழை காட்ச்சிகள் அருமை .

எந்தவித பெரிய நடிகர்களும் இல்லாமல் திரைக்கதையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து இயக்குனர் படமாக வெளிவந்திருக்கும்  நடுசி நாய்கள் கவுதம் மேனனின் முன்னைய மென்மையான படைப்புகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது ..வாழ்த்துக்கள் கவுதம் மேனன் .

மனப்பக்குவம் அடைந்தவர்கள்  பார்க்கவேண்டிய படம் . இப்படி நமது கண்ணுக்கு தெரியாத பல நடக்கிறது என்பதை காட்டியுள்ள படம் . சிலது அல்ல பல . இந்தியாவில் 53 % மான சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்ப்பத்தப்படுகின்றனர் என அறிக்கைகள் கூறுகின்றன .முக்கியமாக நம்பிக்கைக்குரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் கூடுதல் .ஆனால்  பலர் முன்வந்து போலீசிடம் தெரிவிப்பதில்லை .

குறை -சில பாலியல் காட்ச்சிகள் குறைத்திருக்கலாம் .ஆனால் எந்த காட்ச்சியிலும் முகத்துக்கு கீழே கமெரா போகவில்லை .பாராட்டுக்கள் கவுதம் .
ஆனால் இதே படம் ஆங்கிலத்தில் வந்திருந்தால் மனம் ஏற்றுக்கொண்டிருக்கும் .!!!

கலாச்சாரம் கட்டுப்பாடு வக்கிரம் என்று கட்டுப்பாடு விதிக்கும் இடம் எயிட்ஸில் முதல் ஐந்துக்குள் உள்ளது .
இப்படி சொல்லி சொல்லியே தெளிவு அற்றவர்கள் ஆக்குவது இல்லாமல் செய்யப்பட வேண்டும் .


யதார்த்த சினிமா என்ற வகையில் சேர்க்க கூடிய படம் இது . படம் குப்பையில்லை .சமூகம் குப்பை என்பது மறுக்கமுடியாத உண்மை .அதை அப்படியே பிரதிபலித்திருக்கிறது இந்தப்படம் .


இந்தப்படத்தை உங்கள் பக்கம் இருந்து பார்க்கவேண்டாம் .மனநோய் பாதிக்கப்பட்ட வீராவின் பக்கம் இருந்து பாருங்கள் .அவனுக்கு பந்த பாசமோ அம்மா அப்பா உறவோ ஒன்றுமே தெரியாது .



தயவு செய்து யாரும் உங்கள் மனதில் வைத்திருக்கும் வக்கிரங்களை கக்காதீர்கள். விமர்சனங்கள் வாசிக்க முதல் படம் பார்த்திருந்தால் இந்த தாய் மகன் உறவு என்ற சிந்தனை அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு வந்திருக்காது ..காரணம் அப்படியொன்ற இல்லை . படம் தெளிவாக விளங்கவில்லை என்றால் தெளிவாக்கி கொள்ளுங்கள் .
சில விமர்சனங்கள் ஏன் படைப்பை விமர்சிக்காமல் !! இயக்குனரை விமர்சிக்கின்றன ??. இதை தூக்கி பிடித்து எதிர்த்து தவறானது தான் என காட்ட முனைவது நீங்கள் . .


நடுநிசி நாய்கள் படத்தில் தெளிவில்லை .இப்படியோன்றும் நடப்பதில்லை என்றால் இந்த லிங்க்கை வாசிக்கவும் . இந்தப்படமே உங்களை பாதிக்கிறது என்றால் இந்த சிறுவர் துஷ்பிரயோகம் இவ்வளவு தூரம் அனைவரையும் பாதிக்கும் என்பதை தான் படம்  கூறுகிறது .
குடும்பத்தவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டியது . ஆனால் குடும்பமாக சென்று பார்க்காமல் தனியே சென்று பாருங்கள் .


படம் முடிந்த பின்பு இறுதியாக படத்தில் மருத்துவர் கூறுவதை கேளுங்கள் .பாதி பேர் முதலே எழுந்து வந்துவிட்டார்கள் .

Comments

Jana said…
மனப்பக்குவம் அடைந்தவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம்

அப்ப கண்டிப்பாக நான் பார்க்கலாம்!!
அருமை நண்பா அருமை..
புதுமையான கோணத்தில் யோசிப்பு...
tamilan said…
அன்புடையீர்,
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.

யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள் அடங்கியது. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===

.
பாலா said…
நான் இன்னும் படம் பாக்கல. அதனால் நோ கமெண்ட்ஸ்
@jana
அப்போ போய் பாத்திருங்க ... காதாப்பாத்திரத்தின் உள்ளே இருந்து பாருங்க :)

வேடந்தாங்கல் - கருன் said...
//அருமை நண்பா அருமை..
புதுமையான கோணத்தில் யோசிப்பு..//

நன்றிங்க ,படத்தில் அந்த காட்ச்சியின் விளக்கம் இது தான் ..இது விளங்காமல் பல விமர்சனங்கள் என்பது தான் கொடுமை ...!!!
சுதா நான் இன்னும் படமே பார்க்கல... அப்பறம் சொல்லுறேனே...

நல்ல பதிவுங்க... ஒற்றை வரியில் சொன்னால் சிறு துரும்பும் பல் குத்த உதவும்....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
ஏன் இன்ட்லி, தமிழ் மணத்தில் இன்னும் இணைக்கல...
குடும்பத்தோடு வராதீர்கள் என்று ஆண்மையுடன் விளம்பரம் செய்து விட்டு இந்தப்படம் வந்திருந்தால் அந்த ஒரு விசயத்துக்காக பாரட்டியிருக்கலாம்.இந்தப்படத்தை புனிதப்படுத்தினால் கற்க்காலத்துக்கு போய்விடுவோம்.உங்கள் விமர்சனத்திறமையை பூக்கடைக்கு பயன்படுத்துங்கள்.சாக்கடைக்கு வேண்டாம்
According to the Supreme Court of India [1]:
“ Film censorship becomes necessary because a film motivates thought and action and assures a high degree of attention and retention as compared to the printed word. The combination of act and speech, sight and sound in semi darkness of the theatre with elimination of all distracting ideas will have a strong impact on the minds of the viewers and can affect emotions. Therefore, it has as much potential for evil as it has for good and has an equal potential to instill or cultivate violent or good behaviour. It cannot be equated with other modes of communication. Censorship by prior restraint is, therefore, not only desirable but also necessary//
If Doctors start to direct film and describe major operation for 3 hrs..?..Will anyone agree that it is necessary for learning?.. Too much graphic is in noway cinematography...


//will have a strong impact on the minds of the viewers and can affect emotions. Therefore, it has as much potential for evil as it has for good and has an equal potential to instill or cultivate violent behaviour.//

இப்படி சொல்லிட்டு என்னதான் செய்றாங்க..? Shame on us if we cant stop these things and continue to agree all vulgarity.. தீவீரவாதத்தின் வேர்கள் படர ஆரம்பிக்குது..
இந்த வரி தான் முழு விமர்சனத்தையும் தாங்கிப்பிடிக்கிறது.
சாருவுக்கு வேணா இந்தப்படம் பிடிக்கலாம் சுதா...எனக்கு ...இல்ல...இது போல கொடுமைகள் நடக்குது, அதத்தான் நான் காட்றேன்னு சொல்றதுல அர்த்தம் இருக்கிறது மாதிரி தெரியல.

///குடும்பத்தவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டியது . ஆனால் குடும்பமாக சென்று பார்க்காமல் தனியே சென்று பாருங்கள்.//
Akash said…
நமது மக்களின் ரசனைத்தரம், உண்மைகளை உணரும் தன்மை யாதார்த்த நிலை என்பன வளரவில்லை என்பதையே இந்த மாதிரியான மோசமான எதிர்ப்புக்கள் காட்டுகின்றன . உண்மையிலேயே உங்களது பார்வையும் விமர்சனமும் அருமை.
Akash said…
நமது மக்களின் ரசனைத்தரம், உண்மைகளை உணரும் தன்மை யாதார்த்த நிலை என்பன வளரவில்லை என்பதையே இந்த மாதிரியான மோசமான எதிர்ப்புக்கள் காட்டுகின்றன . உண்மையிலேயே உங்களது பார்வையும் விமர்சனமும் அருமை.
Akash said…
நமது மக்களின் ரசனைத்தரம், உண்மைகளை உணரும் தன்மை யாதார்த்த நிலை என்பன வளரவில்லை என்பதையே இந்த மாதிரியான மோசமான எதிர்ப்புக்கள் காட்டுகின்றன . உண்மையிலேயே உங்களது பார்வையும் விமர்சனமும் அருமை.
உலக சினிமா ரசிகன் said...

குடும்பத்தோடு வராதீர்கள் என்று ஆண்மையுடன் விளம்பரம் செய்து விட்டு இந்தப்படம் வந்திருந்தால் அந்த ஒரு விசயத்துக்காக பாரட்டியிருக்கலாம்.இந்தப்படத்தை புனிதப்படுத்தினால் கற்க்காலத்துக்கு போய்விடுவோம்.உங்கள் விமர்சனத்திறமையை பூக்கடைக்கு பயன்படுத்துங்கள்.சாக்கடைக்கு வேண்டாம்



ஐயா உலக மகா சினிமா ரசிகரே
A certificate க்கு விளக்கம் என்னன்னு சொல்லிட்டு போங்க

நீங்கல்லாம் நீச்சல் குளத்தில் எப்படி நீச்சலாடை உடுத்தலாம்னு கேள்வி கேக்கறீங்க - இந்த கேள்விக்கு பதில் இல்லீங்க

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ