Skip to main content

விமர்சனம் - எந்திரன்- சுஜாதா ?! அறிவியல் ?!!

திரைப்படங்கள், சிறந்த படைப்பு என்பது வெறுமனே ஒரு தனிமனிதனை மட்டும் கொண்டு நிர்மாணிக்கப்படுவதில்லை. ஆனால்  எல்லா வியாபார நோக்கர்களும் சேர்ந்தால் ஒரு படம் எப்படி வரும் என்பது எந்திரனில் தெரிகிறது . வெறும் ரஜனி என்கிற மாயையை வைத்து ஒரு சிறந்த எழுத்தாளர் கற்பனையை  மழுங்கடிக்கும் நிகழ்வு எந்திரனில் நடந்தேறியிருக்கிறது . தொழில்நுட்பம் பாவித்தமை ,சுஜாதாவின் எழுத்தை பாவித்தமைக்கு மட்டுமே பாராட்டுகள் .

எந்திரனை அனைத்து திறமையுடனும் உருவாக்கும் விஞ்ஞானி ரஜனி , அதற்க்கு தேவை ஏற்ப்படும் போது உணர்வுகள் பற்றி  சொல்லி கொடுக்க ஐஸ்வர்யாராயை காதலிக்கிறது . இதனால் அதே விஞ்ஞானி ரஜனி அந்த எந்திர ரஜனியை அழிக்க ,அதே எந்திர ரஜனி வேறொரு விஞ்ஞானியால் இன்னொரு வில்லன் ரஜனியாக உருவெடுக்கிறார் . எல்லாமே ரஜனி மயம் . இது போதாதென்று அந்த ரஜனி உருவாக்கும் நூற்றுக்கணக்கான எந்திரன்களும் ரஜனி தான் . முழுவதுமாக ரஜனி தான் .அந்த கதையே ரஜனி கதை தான் . சுஜாதாவினது அல்ல .

படத்தின் முதல் பாதி நேர்த்தியாக சென்றது .பல இடங்களில் சுஜாதாவின் வசனங்கள்  மின்னியது . வீதி  போலிஸ்  உன்னுடைய முகவரி என்ன என எந்திரனிடம் கேட்க்க  எனக்கு முகவரி கிடையாது ஐ பி முகவரி தான் .192 .68 .௦.1. என்பது என்ன நக்கலா என்ற போது நிக்கல் என்பதும் சரி அனைத்தும் பாமரனையும் தொழில்நுட்பம்  அடையவேண்டும் என்ற ஒரே நோக்கில் சுஜாதாவின் எழுத்துக்கள் தெரிந்தன .ஆனால் திரைப்படம் எவ்வாறு என்பது நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .

கடைசி இறுதி நிமிட தொழில்நுட்பம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் தொழில்நுட்பத்தை  பாவித்தமைக்கு பாராட்டுகள் . இதை தான் தேர்மினட்டர் ,அவதார் தொழில்நுட்ப்பவியலாலர்களிடமிருந்து எடுக்க முடிந்திருக்கிறது .

ரகுமானின் பாடல்கள் செவிவழி மட்டும் கேட்க்கும் போதே மிகவும் தரமாக இருந்தது ஆனால் வழமையான ஷங்கர் பாடல் காட்ச்சியமைப்புகளில் ரசனையற்ற தன்மையே வெளிப்பட்டது .
அதே பின்னாலே நூறு பேர் ஆடும் பாணி .இது தான் பிரம்மாண்டமா? இதுவரை மனிதர்கள் இப்போது நூறு எந்திரங்கள் .
பாடல்கள் ரகுமானால் உயர் தரத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் காட்ச்சியமைப்புகள் கீழ்த்தரமான ரசனையை கொண்டவை . பணம் இருந்தால் யாரும் எடுக்க முடியும் என்ற காட்ச்சியமைப்புகள் சிறப்பானதாக இல்லை .

 தொப்புள் கோடி குழந்தையை சுற்றியவுடன்  பழைய பாட்டி கால முறை போல இதில் விலா எலும்பை நகர்த்தி பிரசவம் பார்க்கும் வழி  முறையை எந்திரன் செய்வது போல காட்சி  ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் . இதில் சுஜாதாவின் பங்கே இருப்பது தெரிகிறது . ஆனாலும் பாராட்டப்பட வேண்டிய காட்சி செருகல் .
சுஜாதாவின் என் இனிய இயந்திராவும் , மீண்டும் ஜீநோவும் வாசித்தவர்களுக்கு இன்னும் ஏமாற்றம் தான் ,...
இது முழுக்க முழுக்க மசாலா கலந்த ஒரு குறிப்பிட்ட ரசனை உள்ள ரசனையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட படம் . எந்திரன் பற்றிய தகவலோ அறிவியலோ மக்களை போய் சேரவேண்டிய இடத்தில் ரஜனியே போய் சேர்ந்திருக்கிறார் . - இதை உலகத்தரத்துக்கு(இந்தியாவை தாண்டி ) ஏற்றி அவமானப்படுத்துவதன் காரணம் தெரியவில்லை .

Comments

எந்த ஊரில இதுக்குபேரு நடுநிலை விமர்சனம்?
எந்திரன்- ரசிகர்களுக்கு சுவீட்டு, எதிரிகளுக்கு வேட்டு. வயது திறமைக்கு தடை இல்லை என்பதற்கு ரஜினியின் வேகமும் ஐஸின் நடனமும் உதாரணமாக கூறலாம்.
சரியாக சொன்னீர்கள்
என்ன தலைவா.. நாங்கெல்லாம் படம் பாத்திட்டு நல்லாயிருக்குன்னு எழுதியிருகோம்... நீங்க...!!!!
நன்றி எப்பூடி ....//
நான் நடுநிலை விமர்சனம் என்று கூறியது ..ரஜனி ரசிகனாக இல்லாமல் சினிமா ரசிகனாக எழுதிய பதிவை ..

நன்றி ஜீவதர்சன் //
எந்த ரசிகர்களுக்கு சுவீட்டு ? ரஜனி ரசிகர்களுக்கு தானே ?
பாலாஜி சங்கர் said...
சரியாக சொன்னீர்கள்//
நன்றிகள் பாலாஜி
ஹாய் தல..
எங்க நான் பிழையா எழுதீட்டனோ என்று நினைத்தேன்..
நான் கரெக்ட்டுன்னு ப்ரூவ் ப‌ண்ணீட்டின்ங்க...
வாழ்த்துகள்...
இதே கருத்தை தான் நானும் சொன்னேன்.கன சனம் என்னை லூசா எண்டு வேற சொல்லீற்றாங்க.மொத்தத்தில இது impress பண்ணல.போட்ட பிலட் அப்புக்கு பெருசா காச சிலவழிச்சிருக்காங்க.தலைவர்ட ஸ்ரைல கொஞ்சம் பாத்தம்.ரஜனி ரசிகனா அது ஒரு குட்டி சந்தோசம்.அவ்ளோதான்.தமிழன் படைச்ச உலக தரம் எண்டு சொல்லி தமிழண்ட மனத்த வித்திடாதீங்க
TechShankar said…
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TS



டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
150 கோடி பணம் ஒரு வீண் செலவு
நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,

அனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை
சூர்யா - அஹரம் - விதை
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_3041.html

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ